Saturday, April 20, 2013

இந்த வலைப்பூ ...



வலைப்பூ ஆரம்பித்ததின் நோக்கமே என் தனிப்பட்ட பக்தி உணர்வுகளை எழுதத் தான்.

இறைவனின் துணைகொண்டு, அமரரான என் தந்தையின் வழிகாட்டுதலில், அன்பர்கள் பலரின் ஆலோசனைகளின்படி, அடியேன் அறிந்த ஆன்மீக விஷயங்களை அனைவருக்கும் அறிவிக்கும் எண்ணத்தில் இந்த வலைப்பக்கங்களில் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

இதில் காணப்படுபவை யாவும் அடியவனால் எழுதப்பட்டது என்றோ, என் அனுபவங்கள் என்றோ என் கருத்துக்கள் என்றோ எண்ணி விட வேண்டாம். இதில் வரும் சொற்கள், வாக்கியங்கள், வரிகள், யாவும் வேத உபநிஷத் மற்றும் பெரியோர்களால் கண்டுகொண்ட அழமான விஷங்களை அருளாளர்களின் கூற்றுகளை சிலவற்றை சொல்லக்கேட்டும், சிலவற்றை பார்த்தும், படித்தும் சிறிது உணர்ந்தும், அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்தவை. அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து எழுதப்பட்டவை தான் அன்றி அடியேனால் எழுதப்பட்டது என்றோ, என் அனுபவங்கள் என்றோ, நான் ஒருபோதும் நினைக்கவில்லை.

இதில் வரும் ஆன்மீக சொற்கள், வாக்கியங்கள், வரிகள், யாவும் அடியேனால் அனைத்து வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல் மட்டும. வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

அனைவரும் அனைத்து வளங்களையும் நலங்களையும் பெற்று திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் வாழ இறைவனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.



அனனவருக்கும் நடமாடும் தெய்வமாக நம்மிடையே வாழ்ந்த சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் கருணையும், காருண்யமும், அருளும், அனுக்கிரஹமும் கிட்டட்டும்.

அன்பை ஊட்டிய அன்னையின் தாள் போற்றி!
உலகின் உருவம் விளக்கிய தந்தைதாள் போற்றி!
குருவாய் அருவாய் இருக்கும் இறைகுருதாள் போற்றி!
என்னை வழிநடத்தும் இறைவன்தாள் போற்றி போற்றி!

... என்றும் அன்புடனும். அருளுடனும் அடியார்க்கும் அடியேன்





No comments:

Post a Comment