Tuesday, July 30, 2013

ஸ்ரீ மஹா பைரவர்


ஸ்ரீ மஹா பைரவர் மிக சக்திவாய்ந்த ஒரு கடவுள். ஒரு மிக உக்கிரமான அதிக ஆற்றல் வாய்ந்த ஒரு சக்திமிக்க அலை வடிவம். சிவபெருமானின் பூத கணங்களில் மிக முக்கியமானவர்.

ஸ்ரீ மஹா பைரவரை வணங்கினால் 100% பலன் கைகூடும் என்பார்கள். தேய் பிறையில் வரும் அஷ்டமியில் ஸ்ரீ மஹா பைரவரை வணங்குவது மிகுந்த விஷேசம்.

மணி,மந்திரம்,ஔஸதம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவரின் அருள் இன்றி அறிந்து கொள்ள முடியாது என்பார்கள். சித்தர்கள் பாதையில் இந்த மணி,மந்திரம்,ஔஸதம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு சிறிய மந்திரமாகட்டும் அல்லது ஔஸதமாகட்டும் அது சித்தி பெற வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவர் அருளாசி இன்றி முழுமைபெறாத. அனுகிரகம் வேண்டும்.

ஒட்டக்கூத்தர் புலவரால் இயற்றப்பட்ட ஒரு மிக மிக பழமையான பாடல் ...

உரக கங்கணம் தருவன பணமணி
உலகடங்கலும் துயிலெழ வெயிலெழ
உடை தவிர்ந்ததன் திரு அரை உடை மணி
உலவி ஒன்றோடொன்று அலமார விலகிய
கரதலம் தரும் தமருக சதிபொதி
கழல் புனைந்த செம்பரிபுர ஒலியொடு
கலகலன் கலன்கலன் என வருமொரு
கரிய கஞ்சுகள் கழலினை கருதுவாம்.

ஸ்ரீ மஹா பைரவர் தன் கைகளில் கங்கணமாகக் கட்டி இருக்கிற பாம்பு கக்கும் மாணிக்கக் கற்களால் உலகம் முழுவதும் துயிலெழ வெயிலெழ. உடை தவிர்ந்த தன் இடுப்பினில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஒன்றோடு ஒன்று மோதி ஒலி எழுப்ப, கையில் உள்ள தமருகம் என்னும் உடுக்கை எழுப்பும் தாள ஓசையும்,சிவந்த சிலம்பின் ஒலியும் சேர்ந்து கலன்,கலன் என்னும் இனிய நாதம் உண்டாகுமாம். இப்படி காட்சி தரும் கரிய ஆடை அணிந்த பைரவர் பாதம் பணிந்து வணங்குவோம்.

...


ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்:

துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம்.
காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.
எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

மாதங்கள் ... துவாதச ஆதித்தியர்கள் ... ஆதித்தியர்களின் பிராண தேவதை

சித்திரை ... அம்சுமான் ... சண்ட பைரவர்
வைகாசி ... தாதா ... ருரு பைரவர்
ஆனி ... ஸவிதா ... உன்மத்த பைரவர்
ஆடி ... அரியமான் ... கபால பைரவர்
ஆவணி ... விஸ்வான் ... ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி ... பகன் ... வடுக பைரவர்
ஐப்பசி ... பர்ஜன்யன் ... ÷க்ஷத்ரபால பைரவர்
கார்த்திகை ... துவஷ்டா ... பீஷண பைரவர்
மார்கழி ... மித்திரன் ... அசிதாங்க பைரவர்
தை ...nவிஷ்ணு ... குரோதன பைரவர்
மாசி ... வருணன் ... ஸம்ஹார பைரவர்
பங்குனி ... பூஷா .... சட்டநாத பைரவர்

...

இழந்த பொருட்களை மீண்டும் பெற:

பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

குழந்தைச் செல்வம் பெற:

திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.

சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க:

சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.

தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்:

ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.
6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

...

( இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. )




No comments:

Post a Comment