Friday, July 19, 2013

சித்தர் காப்பு



"முக்தி கொண்டமோட்சமது மவுன தீட்சை முனையறிந்து செல்லுதற்கு வாலை காப்பு ;
வெத்தி கொண்ட நந்தீசர் பாதங் காப்பு ;
வேதாந்தம் மூவாயிரம் திருமூலர் பாதங் காப்பு ;
அட்டமா சித்திக்கும் அகத்தியன் பாதங் காப்பு ;
அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங் காப்பு ;
பரம கயிலாய குரு போகர் பாதங் காப்பு ;
கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங் காப்பு;
சூழி முனை சூட்சும குரு சுந்தராணந்தர் பாதங் காப்பு ;
இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர் பாதங் காப்பு ;
வரும் வாழ்நாள் சிறந்திட வால்மீகர் பாதங் காப்பு ;
மாயத்தை நீக்கிட மச்சமுனிவர் பாதங் காப்பு ;
முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனிகமலர் பாதங் காப்பு ;
காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார் பாதங் காப்பு ;
பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி பாதங் காப்பு ;
மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி பாதங் காப்பு ;
தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி பாதங் காப்பு ;
காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர் பாதங் காப்பு ;
வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர் பாதங் காப்பு ;
கொல்குணம் போக்கும் கோரக்கர் பாதங் காப்பு ;
பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர் பாதங் காப்பு ;
தேரா மருத்துவம் தெளிந்து உரைத்திட்ட தேரையர் பாதங் காப்பு ;
வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர் பாதங் காப்பு ;
போகத்தை துறந்திட புகழ் ஞானம் தந்த புண்ணாக்கீசர் பாதங் காப்பு ;
நல் ஞான ஜோதியை நலமாய் கூறிய நற்குதம்பை பாதங் காப்பு ;
அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங் காப்பு ;
பூஜா , ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங் காப்பு ;
காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங் காப்பு ;
கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங் காப்பு ;
காப்பான கருவூரார், போக நாதர், கருணையுள்ள அகத்தீசர், சட்டைநாதர், மூப்பான கொங்கணரும் பிரம்ம சித்தர், முக்கியமாய் மச்சமுனி, நந்திதேவர், கோப்பான கோரக்கர், பதஞ்சலியார், கூர்மையுள்ள இடைக்காடர், சண்டிகேசர், வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே ".

No comments:

Post a Comment