Wednesday, July 31, 2013

கண் திரிஸ்டி விநாயகர்

...

ஓம் ஸ்வாஹா
ஓம் பூ ஸ்வாஹா
ஓம் புவஹ ஸ்வாஹா

ஓம் ஸுவஹா ஸ்வாஹா
ஓம் பூர் புவஹஸ்வாஹ் ஸ்வாஹா

ஓம் ஸ்ரீம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே வர வரத ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே வர வரத ஸர்வஜன மே ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஹரித்ரா கணபதயே வர வரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா

ஓம் கம் கணபதயே நமஹா அம்ருத பிதான மசி

ऊँ गं गणपतये नम: ‘’Aum Gam Ganapatye Namah’’

...

ॐ तत्पुरुषाय विद्महे
वक्रतुण्डाय धीमहि ।
तन्नो दन्ती प्रचोदयात् ॥

ஓம் தத் புருஷாய வித்மஹி
வக்கிர துண்டாய திமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்

Om Tatpurussaaya Vidmahe
Vakratunddaaya Dhiimahi |
Tanno Dantii Pracodayaat ||

...

शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।
प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥

Shukla-Ambara-Dharam Vissnnum Shashi-Varnnam Catur-Bhujam |
Prasanna-Vadanam Dhyaayet Sarva-Vighno[a-U]pashaantaye ||

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்நோப சாந்தையே

...

மூதுரை

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

நீங்கள் விநாயகரை வனங்கினால் போதும். தனியாக மாமலராளை (லெட்சுமி தேவியை) வணங்க வேண்டாம். விநாயகப் பெருமானே லெட்சுமியின் அருளையும் உங்களுக்குப் பெற்றுத் தருவாள்.

...

நல்வழி

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.

பொருள்: பால், தெளிந்த தேன், வெல்லப்பாகு, பருப்பு இவை நான்கையும் கலந்து (பாயஸம்!) நான் உனக்கு தருவேன், உயிர்களுக்கு நல்லது செய்யும், உயர்ந்த யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானே, நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றையும் தா.

...

திருமூலரின் திருமந்திரம் பாடல் ..

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!

விநாயகப் பெருமானை எப்போதும் நமது புத்தியில் வைத்து வணங்க வேண்டும். நல்ல புத்தியைக் கொடுப்பார். நம்மை வழிதவறிப் போக விடமாட்டார். நீங்கள் மாணவர் என்றால் படித்தவை அப்படியே
உங்களுடைய புத்தியில் தங்கச் செய்வார். மறந்துபோகும்படி விட்டு விடமாட்டார்.

...

மணிமாலை

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.

- கபிலதேவ நாயனார்

...

திகடச் சக்கர செம்முக மைந்துளான்
சகட சக்கர தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுரை
விகட சக்கர மெய்ப்பதம் போற்றுவோம்.

-தமிழ்மறை



















No comments:

Post a Comment