Tuesday, January 28, 2014

என் தாய்


என்னை ஈன்றெடுத்து, நல்லபடியாக ஒழுக்க நெறி தவறாமல் வாழ வழிகாட்டி, என்னாலும் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும உற்சாகத்தையும் ஊட்டி வளர்த்து, என் வாழ்க்கையை செம்மையாக்கி, என் உதரம் நிறைந்து உள்ளம் குளிர்ந்து வாழ ஆசீர்வதித்து, என் கனவை நினைவாக்கும் முயற்சியை வழிநடத்தும் என் தாய் .....

அவள் வாழ்க்கையின் நாட்கள் எண்ணக்கூடிய சூழ்நிலை துவக்கம்.
இதயத்தையும் மனதையும் தேறுதல் சொல்ல இயலாத நிலை என்னுடையது.

கருப்பன் காப்பாத்துவான்.

Guests in a Family Function ..

Monday, January 27, 2014

ஶிவனது பத்தாயிரம் நாமங்கள் ... (401-420)

श्री साम्बसदाशिवायुतनामावलि:
ओम् नम: शिवाय ।

ओम् अमित प्रभावाय नम:
ओम् अमायाय नम:
ओम् अमूर्ति सादाख्य पश्चिम वदनाय नम:
ओम् अम्रुतमय गंगाधराय नम:
ओम् अमेय गुणाय नम:
ओम् अमेयात्मने नम:
ओम् अम्रुतायिताय नम:
ओम् अमरेश्वरे ॐकाराय नम:
ओम् अमलाय नम:
ओम् अमन्दानन्दाब्धये नम:
ओम् अमारुत समागमाय नम:
ओम् अमल रूपिणे नम:
ओम् अमर सार्व भौमाय नम:
ओम् अयोनये नम:
ओम् अयुग्म द्रुष्टये नम:
ओम् अयुग्माक्षाय नम:
ओम् अर्क चन्द्र् अग्नि नेत्राय नम:
ओम् अर्दनाय नम:
ओम् अर्थाय नम:
ओम् अर्थकराय नम: - ४२०

ओम् अर्यम्णे नमः
ओम् अर्थितव्याय नमः
ओम् अरिष्ट मथनाय नमः
ओम् अरोगाय नमः
ओम् अरिन्दमाय नमः
ओम् अर्धचन्द्र चूडाय नमः
ओम् अरूपाय नमः
ओम् अर्धनारीश्वराय नमः
ओम् अर्च्य मेढ्राय नमः
ओम् अरिमर्दनाय नमः
ओम् अर्ध हाराय नमः
ओम् अर्धमात्रा रूपाय नमः
ओम् अर्धकायाय नमः
ओम् अर्कप्रभ शरीराय नमः
ओम् अरण्येशाय नमः
ओम् अरिष्ट नाशकाय नमः
ओम् अरुणाय नमः
ओम् अरिषड्वर्ग दूराय नमः
ओम् अरिसूदनाय नमः - ४४०

ओम् अर्थात्मने नमः
ओम् अर्थिनां निधये नमः
ओम् अरिषड्वर्ग नाशकाय नमः
ओम् अर्धनारीश्वरादि चतुर्मूर्ति प्रतिपादकान्तर वदनाय नमः
ओम् अर्धनारी शुभांगाय नमः
ओम् अरातये नमः
ओम् अरुष्कराय नमः
ओम् अरिष्ट नेमये नमः
ओम् अर्हाय नमः
ओम् अर्धादिकाय नमः
ओम् अरिमथनाय नमः
ओम् अरण्यानां पतये नमः
ओम् अरथेभ्य: नमः
ओम् अर्थ पुल्लेक्षणाय नमः
ओम् अर्थितादधिक प्रदाय नमः
ओम् अर्ध हारार्ध केयूर स्वर्ध कुण्डल कर्णिने नमः
ओम् अर्ध चन्दन लिप्ताय नमः
ओम् अर्धस्रगनु लेपिने नमः
ओम् अर्ध पीतार्ध पाण्डवे नमः
ओम् अलघवे नमः - ४६०

ओम् अलक्ष्याय नमः
ओम् अलेख्य शक्तये नमः
ओम् अलुप्तव्य शक्तये नमः
ओम् अलंघ्य शासनाय नमः
ओम् अलिङ्गात्मने नमः
ओम् अलक्षिताय नमः
ओम् अलुप्त शक्ति नेत्राय नमः
ओम् अलंक्रुताय नमः
ओम् अलुप्त शक्ति धाम्ने नमः
ओम् अव्ययाय नमः
ओम् अवधानाय नमः
ओम् अव्यक्ताय नमः
ओम् अव्यग्राय नमः
ओम् अविघ्न कारकाय नमः
ओम् अव्यक्त लक्षणाय नमः
ओम् अविक्रमाय नमः
ओम् अवताराय नमः - ४८०

ओम् अवशाय नमः
ओम् अवराय नमः
ओम् अवरेशाय नमः
ओम् अव्यक्त लिङ्गाय नमः
ओम् अव्यक्त रूपाय नमः
ओम् अवध्याय नमः
ओम् अवस्वन्याय नमः
ओम् अवर्जाय नमः
ओम् अवसान्याय नमः
ओम् अवद्याय नमः
ओम् अवधाय नमः
ओम् अवार्याय नमः
ओम् अविद्यालेश रहिताय नमः
ओम् अवनिभ्रुते नमः
ओम् अवधूताय नमः
ओम् अविद्योपाधि रहित निर्गुणाय नमः
ओम् अविनाश नेत्रे नमः
ओम् अवलोकनायत्त जगत्कारण ब्रह्मणे नमः
ओम् अव्यक्त तमाय नमः
ओम् अविद्यारये नम: - ५००

ஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி

ஓம் நம: ஶிவாய |

ஓம் அமித ப்ரபா⁴வாய நம:
ஓம் அமாயாய நம:
ஓம் அமூர்தி ஸாதா³க்²ய பஶ்சிம வத³னாய நம:
ஓம் அம்ருதமய க³ங்கா³த⁴ராய நம:
ஓம் அமேய கு³ணாய நம:
ஓம் அமேயாத்மனே நம:
ஓம் அம்ருதாயிதாய நம:
ஓம் அமரேஶ்வரே ஓங்காராய நம:
ஓம் அமலாய நம:
ஓம் அமந்தா³னந்தா³ப்³த⁴யே நம:
ஓம் அமாருத ஸமாக³மாய நம:
ஓம் அமல ரூபிணே நம:
ஓம் அமர ஸார்வ பௌ⁴மாய நம:
ஓம் அயோனயே நம:
ஓம் அயுக்³ம த்³ருஷ்டயே நம:
ஓம் அயுக்³மாக்ஷாய நம:
ஓம் அர்க சந்த்³ர் அக்³னி நேத்ராய நம:
ஓம் அர்த³னாய நம:
ஓம் அர்தா²ய நம:
ஓம் அர்த²கராய நம: - 420

ஓம் அர்யம்ணே நம:
ஓம் அர்தி²தவ்யாய நம:
ஓம் அரிஷ்ட மத²னாய நம:
ஓம் அரோகா³ய நம:
ஓம் அரிந்த³மாய நம:
ஓம் அர்த⁴சந்த்³ர சூடா³ய நம:
ஓம் அரூபாய நம:
ஓம் அர்த⁴னாரீஶ்வராய நம:
ஓம் அர்ச்ய மேட்⁴ராய நம:
ஓம் அரிமர்த³னாய நம:
ஓம் அர்த⁴ ஹாராய நம:
ஓம் அர்த⁴மாத்ரா ரூபாய நம:
ஓம் அர்த⁴காயாய நம:
ஓம் அர்கப்ரப⁴ ஶரீராய நம:
ஓம் அரண்யேஶாய நம:
ஓம் அரிஷ்ட நாஶகாய நம:
ஓம் அருணாய நம:
ஓம் அரிஷட்³வர்க³ தூ³ராய நம:
ஓம் அரிஸூத³னாய நம: - 440

ஓம் அர்தா²த்மனே நம:
ஓம் அர்தி²னாம்ʼ நித⁴யே நம:
ஓம் அரிஷட்³வர்க³ நாஶகாய நம:
ஓம் அர்த⁴னாரீஶ்வராதி³ சதுர்மூர்தி ப்ரதிபாத³காந்தர வத³னாய நம:
ஓம் அர்த⁴னாரீ ஶுபா⁴ங்கா³ய நம:
ஓம் அராதயே நம:
ஓம் அருஷ்கராய நம:
ஓம் அரிஷ்ட நேமயே நம:
ஓம் அர்ஹாய நம:
ஓம் அர்தா⁴தி³காய நம:
ஓம் அரிமத²னாய நம:
ஓம் அரண்யானாம்ʼ பதயே நம:
ஓம் அரதே²ப்⁴ய: நம:
ஓம் அர்த² புல்லேக்ஷணாய நம:
ஓம் அர்தி²தாத³தி⁴க ப்ரதா³ய நம:
ஓம் அர்த⁴ ஹாரார்த⁴ கேயூர ஸ்வர்த⁴ குண்ட³ல கர்ணினே நம:
ஓம் அர்த⁴ சந்த³ன லிப்தாய நம:
ஓம் அர்த⁴ஸ்ரக³னு லேபினே நம:
ஓம் அர்த⁴ பீதார்த⁴ பாண்ட³வே நம:
ஓம் அலக⁴வே நம: - 460

ஓம் அலக்ஷ்யாய நம:
ஓம் அலேக்²ய ஶக்தயே நம:
ஓம் அலுப்தவ்ய ஶக்தயே நம:
ஓம் அலங்க்⁴ய ஶாஸனாய நம:
ஓம் அலிங்கா³த்மனே நம:
ஓம் அலக்ஷிதாய நம:
ஓம் அலுப்த ஶக்தி நேத்ராய நம:
ஓம் அலங்க்ருதாய நம:
ஓம் அலுப்த ஶக்தி தா⁴ம்னே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் அவதா⁴னாய நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் அவ்யக்³ராய நம:
ஓம் அவிக்⁴ன காரகாய நம:
ஓம் அவ்யக்த லக்ஷணாய நம:
ஓம் அவிக்ரமாய நம:
ஓம் அவதாராய நம: - 480

ஓம் அவஶாய நம:
ஓம் அவராய நம:
ஓம் அவரேஶாய நம:
ஓம் அவ்யக்த லிங்கா³ய நம:
ஓம் அவ்யக்த ரூபாய நம:
ஓம் அவத்⁴யாய நம:
ஓம் அவஸ்வன்யாய நம:
ஓம் அவர்ஜாய நம:
ஓம் அவஸான்யாய நம:
ஓம் அவத்³யாய நம:
ஓம் அவதா⁴ய நம:
ஓம் அவார்யாய நம:
ஓம் அவித்³யாலேஶ ரஹிதாய நம:
ஓம் அவனிப்⁴ருதே நம:
ஓம் அவதூ⁴தாய நம:
ஓம் அவித்³யோபாதி⁴ ரஹித நிர்கு³ணாய நம:
ஓம் அவினாஶ நேத்ரே நம:
ஓம் அவலோகனாயத்த ஜக³த்காரண ப்³ரஹ்மணே நம:
ஓம் அவ்யக்த தமாய நம:
ஓம் அவித்³யாரயே நம: - 500


..... தொடரும் .....

- Courtesy: Vasudevan Tirumurti @ "anmikam4dumbme"

Friday, January 24, 2014

சபரிமலை பதினெட்டுப் படிகள் தத்துவம்


சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

1. காமம்:
பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

2. குரோதம்:
கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

3. லோபம்:
பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும். ஆண்டவனை அடைய முடியாது.

4. மதம்:
யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

5. மாத்ஸர்யம்:
மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

6. டம்பம் (வீண் பெருமை):
அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

7. அகந்தை:
தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச்சுமை.

8. சாத்வீகம்:
விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

9. ராஜஸம்:
அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

10. தாமஸம்:
அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

11. ஞானம்:
எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

12. மனம்:
நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

13. அஞ்ஞானம்:
உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

14. கண்:
ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

15. காது:
ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

16. மூக்கு:
ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

17. நாக்கு:
கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

18. மெய்:
இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும்.

இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்

... Courtesy: Sasithara Sharma

Thursday, January 23, 2014

श्री सूक्तम् ... ஸ்ரீ சூக்தம் தமிழில


श्री सूक्तम्

ॐ ॥ हिर॑ण्यवर्णां॒ हरि॑णीं सु॒वर्ण॑रज॒तस्र॑जाम् । च॒न्द्रां हि॒रण्म॑यीं ल॒क्ष्मीं जात॑वेदो म॒ आव॑ह ॥

तां म॒ आव॑ह॒ जात॑वेदो ल॒क्ष्मीमन॑पगा॒मिनी॓म् ।
यस्यां॒ हिर॑ण्यं वि॒न्देयं॒ गामश्वं॒ पुरु॑षान॒हम् ॥

अ॒श्व॒पू॒र्वां र॑थम॒ध्यां ह॒स्तिना॓द-प्र॒बोधि॑नीम् ।
श्रियं॑ दे॒वीमुप॑ह्वये॒ श्रीर्मा दे॒वीर्जु॑षताम् ॥

कां॒ सो॓स्मि॒तां हिर॑ण्यप्रा॒कारा॑मा॒र्द्रां ज्वलं॑तीं तृ॒प्तां त॒र्पयं॑तीम् ।
प॒द्मे॒ स्थि॒तां प॒द्मव॑र्णां॒ तामि॒होप॑ह्वये॒ श्रियम् ॥

च॒न्द्रां प्र॑भा॒सां य॒शसा॒ ज्वलं॑तीं॒ श्रियं॑ लो॒के दे॒वजु॑ष्टामुदा॒राम् ।
तां प॒द्मिनी॑मीं॒ शर॑णम॒हं प्रप॑द्येஉल॒क्ष्मीर्मे॑ नश्यतां॒ त्वां वृ॑णे ॥

आ॒दि॒त्यव॑र्णे तप॒सोஉधि॑जा॒तो वन॒स्पति॒स्तव॑ वृ॒क्षोஉथ बि॒ल्वः ।
तस्य॒ फला॑नि॒ तप॒सानु॑दन्तु मा॒यान्त॑रा॒याश्च॑ बा॒ह्या अ॑ल॒क्ष्मीः ॥

उपैतु॒ मां दे॒वस॒खः की॒र्तिश्च॒ मणि॑ना स॒ह ।
प्रा॒दु॒र्भू॒तोஉस्मि॑ राष्ट्रे॒உस्मिन् की॒र्तिमृ॑द्धिं द॒दादु॑ मे ॥

क्षुत्पि॑पा॒साम॑लां ज्ये॒ष्ठाम॑ल॒क्षीं ना॑शया॒म्यहम् ।
अभू॑ति॒मस॑मृद्धिं॒ च सर्वां॒ निर्णु॑द मे॒ गृहात् ॥

ग॒न्ध॒द्वा॒रां दु॑राध॒र्षां॒ नि॒त्यपु॑ष्टां करी॒षिणी॓म् ।
ई॒श्वरीग्ं॑ सर्व॑भूता॒नां॒ तामि॒होप॑ह्वये॒ श्रियम् ॥

मन॑सः॒ काम॒माकूतिं वा॒चः स॒त्यम॑शीमहि ।
प॒शू॒नां रू॒पमन्य॑स्य मयि॒ श्रीः श्र॑यतां॒ यशः॑ ॥

क॒र्दमे॑न प्र॑जाभू॒ता॒ म॒यि॒ सम्भ॑व क॒र्दम ।
श्रियं॑ वा॒सय॑ मे कु॒ले मा॒तरं॑ पद्म॒मालि॑नीम् ॥

आपः॑ सृ॒जन्तु॑ स्नि॒ग्दा॒नि॒ चि॒क्ली॒त व॑स मे॒ गृहे ।
नि च॑ दे॒वीं मा॒तरं॒ श्रियं॑ वा॒सय॑ मे कु॒ले ॥

आ॒र्द्रां पु॒ष्करि॑णीं पु॒ष्टिं॒ सु॒व॒र्णाम् हे॑ममा॒लिनीम् ।
सू॒र्यां हि॒रण्म॑यीं ल॒क्ष्मीं जात॑वेदो म॒ आव॑ह ॥

आ॒र्द्रां यः॒ करि॑णीं य॒ष्टिं पि॒ङ्ग॒लाम् प॑द्ममा॒लिनीम् ।
च॒न्द्रां हि॒रण्म॑यीं ल॒क्ष्मीं॒ जात॑वेदो म॒ आव॑ह ॥

तां म॒ आव॑ह॒ जात॑वेदो ल॒क्षीमन॑पगा॒मिनी॓म् ।
यस्यां॒ हिर॑ण्यं॒ प्रभू॑तं॒ गावो॑ दा॒स्योஉश्वा॓न्, वि॒न्देयं॒ पुरु॑षान॒हम् ॥

ॐ म॒हा॒दे॒व्यै च॑ वि॒द्महे॑ विष्णुप॒त्नी च॑ धीमहि । तन्नो॑ लक्ष्मीः प्रचो॒दया॓त् ॥

श्री-र्वर्च॑स्व॒-मायु॑ष्य॒-मारो॓ग्य॒मावी॑धा॒त् पव॑मानं मही॒यते॓ । धा॒न्यं ध॒नं प॒शुं ब॒हुपु॑त्रला॒भं श॒तसं॓वत्स॒रं दी॒र्घमायुः॑ ॥

ॐ शान्तिः॒ शान्तिः॒ शान्तिः॑ ॥


ஸ்ரீ சூக்தம் (தமிழில்)

திருமகளின் திருவருளைப் பெற உதவும் நிகரற்ற ஸ்லோகமாக தேவி புராணம் சொல்லும் துதி, சூக்தம். வடமொழியில் உள்ள வளம் தரும் ஸ்ரீ சூக்தம் துதி, இங்கே பொருள் மாறாமல் தமிழ்த் துதிகளாகத் தரப்பட்டுள்ளது. பொன்மகளைத் துதிக்கும் இப்பாடல்களைச் சொல்வது, பொருள் சேர்த்து வளம் கூட்டும்.

வேதங்கள், புராணங்கள், உபநிடதங்கள் இவற்றின் வரிசையில் மேலான சூக்தங்களும் உள்ளன என்பதால், சூக்தங்கள் நிச்சயம் பலனளிக்கும் என்பது, நிதர்சனமான உண்மை. ஸ்ரீ தேவியைப் போற்றும் ஸ்ரீசூக்தத்தின் தமிழாக்கமான, இம்மந்திரமாலையை மனம் ஒன்றிச் சொல்லுங்கள், மகத்தான செல்வமளிப்பாள் மலர்மகள்.

ஓம் அக்னிதேவனே! பொன்வெள்ளி மாலையணி
பொன்னிற மேனியாளை பொன்னாய் ஒளிர்பவளை
முழுநிலவு முகத்தவளை பெரும் பாவச்சுமை போக்கும்
புனிதமான இலக்குமியை என்னிடம் எழச்செய்வாய்!

பொன்பொருள் பசுக்கள் குதிரைகள் உறவுகளை
எவளருளால் என்றென்றும் பெற்று மகிழ்வேனோ
அவளந்த மகாலட்சுமி இமைப்பொழுதும் எமைவிட்டு
விலகாது இருக்க அக்னிதேவனே! அருள்வாய்.

குதிரைகள் முன்செல்ல யானைகளின் மணியோசை
திருமகளின் வரவை எடுத்தியம்ப தேரேறி பவனி வரும்
ஸ்ரீ தேவி யுனைவேண்டி அழைக்கின்றேன்.
செல்வமகளே மகிழ்ந்து என்னிடம் உறைவாய்!

கருணைமிகு புன்னகை முகங்கொண்டு பொன்னகர்
தனில்வாழும் பேரொளியே! மகிழ்வுதரும் மகிழ்வடிவே
பொன்தாமரை அமர்ந்த செந்தாமரை நிறத்தவளே
திருமகளே நீயிங்கு எழுந்தருள வேண்டுகிறேன்.

குளிர்நிலவே! தன்னொளி மிக்க சுடரொளியே
பத்மினியே தேவர்தொழும் ஈம்பீஜ மந்திரவடிவே
உலகொளியே கருணைவடிவே நின்தாள் சரணம் சரணம்
திருமகளே வறுமையெனை விட்டோட அருள்வாய்

அருணன் நிறத்தவளே நின்தவத்தால் மரங்களின்
தலைவன் வில்வம் தோன்றியவரா தன்கனிகள்
அறியாமை அமங்கலம் அகப்புறத் தடையாவையும்
அழித்து மங்களம் உண்டாக்க வேண்டுகிறேன்.

பொருளரசன் குபேரனும் புகழரசனும் செல்வங்களுடன்
பணியரசன் எனைநாடி வருகவே நினதருள்
நிறைசேர் பூதலம் உதித்த யெனக்கு
நிறைமிகு செல்வம்புகழ் பெருமை தந்தருள்வாய்

கடும்பசி பிணிதாகம் கொண்டிளைத்த மூத்தவளை
மூதேவியை அண்டாமல் அகற்றுகின்றேன்
இளையவளே என்னில்லில் இல்லாமை இயலாமை
இடர்யாவும் இல்லாமல் அகற்றி அருள்வாய்

மணமிகு தூயவளே! வெற்றிகொள்ள முடியாதவளே!
திறமிகு வலிமை தருபவளும் அனைத்தும்
நிறைமிகு கொண்டவளும் எவ்வுயிர்க்கும் தலைவியுமான
பொருள் மிகு பொன்மகளே நீயிங்கு எழுந்தருள்வாய்

அருள்மிகு அநகாவே நான்விரும்பும் விருப்பங்கள்
மனம் மிகு மகிழ்வு வாக்கில் உண்மை
வளம் மிகு தரும் உணவு பால்மிகு தரும்பசு
புகழ்மிகு கீர்த்தியாவும் பெற்றுமகிழ அருள்வாய்.

கர்தமமா முனிவரேயுன் குலப்புதல்வியாம் பத்மமாலினி
அகில உலகை ஆளும் அரசியாய் அள்ள அள்ளிக்
குறையா பெருநிதி தருபவளாய் அனைவரையும்
தாயாய்க் காக்கு மவளால் என்குலமே எழுந்தருளட்டும்.

பொன்மகளின் தண்ணருளால் பூலகில் தண்ணீரால்
உயிர்வளர் தானியங்கள் உற்பத்தி மிகவாகி
என்னில்லை நிரப்பட்டும் உலக அன்னை திருமகளாம்
உதாராங்கா யெம்குலமே ஏகிவாழ அருள்வாய்

அக்னிதேவனே! புனிதநீருரை குங்குமநிற பத்மமாலினியை
உணவூட்டி உலக உயிர் வளர்க்கும் கருணைவடிவை
சந்திரனே அன்னவளை பொன்னிற மேனியாளை
மாதரசியை என்னில்லில் எழுந்தருளச் செய்வாய்

கம்பீரமாய் செங்கோலேந் தியகருணை மனத்தவளை
பொன்னி புண்ட செந்நிறத்தவளை அருணனை
பழித்த ஒளி யுடையாளை பொன்னான ரமாவை
என்னிடம் எழுந்தருளச் செய்வாய் அக்னிதேவனே!

மிடுகனகம் பால்பசுக்கள் பணிப்பெண் அசுவங்கள்,
ஏவல்செய் மானுடமும் பெற்றின் புற்றிருக்க
அருள்செய்யும் அன்னை அலைமகள் இமைப்பொழுதும்
எனைவிட்டு அகலாதிருக்க ஆவன செய் அக்னிதேவனே!

திருமகளின் அருள்வேண்டி தூயவனாய் புலனடக்கம்
உள்ளவனாய் மந்திரங்கள் பதினைந்தும் ஒரு முகமாய்
உருச்செய்தும் நெய்கொண்டு ஹோமம் செய்தும்
உள்ளமுருகி வழிபட அவளருள் சித்திக்குமே!

நற்பலன்கள் யாவையும் நல்கும் மகாலட்சுமி
மந்திரங்களை உலகுக்கு அளித்த முனிவர்கள்
அனந்தர் கர்தமர் சிக்லீதர் யெனும்மூவர்
அதிதேவதையாய்நிலை பெற்றவள் ஸ்ரீதேவியே!

தாமரையன்ன முகமும் கண்ளும் கால்களும்
எழிலாய் பெற்றுச் செந்தாமரையில் தோன்றி யவளே
எவ்வெப் பொருள்களால் வளம்பெற்று வாழ்வேனோ
அவ்வப் பொருள்களை எனக்குத் தந்தருள்வாய்

தனம்தரும் பசுதரும் குதிரைதரும் கோமளமே
தன லட்சுமியே! எனதாசை யாவும் நிறைவேறி
இகபர சுகம்பெற்று இனிதே வாழவழி
செய்யும் பெருநிதிமிகத் தருவாய் உகந் தெனக்கே.

உலகத்தாயே! புத்திர பௌத்திர தனதான்யம்
யானை குதிரை வாகனம்தரும் ஸ்ரீநிதியாய்
விளங்கும் திருமகளே என்னை நீள் ஆயுள்
ஆரோக்கியம் பெருநிதி உள்ளவனாய் உயர்த்துவாய்.

திருமகளே உன்னருளால் அக்னிதேவன் வாயுதேவன்
சூரியதேவன் வசுக்கள் இந்திரன் பிரகஸ்பதி
வருணன் ஏனைய தேவர்களும் சுகந்தரும்
வளங்கள் யாவையும் பெற்றுச்சுவைக்கின்றனர்.

குளிர்நிலவாய் தெய்வங்களின் ஆற்றலாய் விளங்கி
ஆதவனாய் ஒளியூட்டும் தலைவி திருமகளே
சந்திர சூர்யாக்கினி மூவரின் ஆற்றலின்
ஆற்றலான மகா லட்சுமியே உனை ஆராதிக்கிறேன்.

கருடனும் விருத்திராசுரனை வென்ற
இந்திரனும் சோமரசம் இனிமையாய்ப் பருகட்டும்
சோமயாகம் செய்ய விரும்பும் எனக்குத்
திருமகள் செல்வத்தை வாரிவாரி வழங்கட்டும்

புண்ணியம் மேலோங்க திருமகள் தியானமும்
மகாலட்சுமி மந்திரஸ்துதியும் மனமொன்றிச் செய்யும்
அருளாளரை கோபம் லோபம் பொறாமை
கெடுமதி என்னும் தீக்குணங்கள் தீண்டுவதில்லை.

தான்யலட்சுமி கருணையாள் மின்னலுடன் மேகங்கள்
மழையை இரவும் பகலும் பொழியட்டும்
விதைகள் யாவும் நன்கு முளைத்து வளரட்டும்
தெய்வநிந்தனை செய்வோரை விலக்கி ஓட்டுவாய்.

பத்மப்பிரியே! செந்தாமரை கைகொண்ட பத்மினியே
செந்தாமரை மீதமர்ந்த செந்தாமரைக் கண்ணியே
விஷ்ணுப் பிரியே! உலகோர் விரும்பி யேத்துமுன்
திருவடித் தாமரையை யென்மேல் வைத்தருள்வாய்

வெண்பட்டு இடையாளை மேலாடை அணிந்தவளை
செந்தாமரைக் கைகொண்டு மலர்த்தாமரை அமர்ந்தவளை
கம்பீரமிகு நாபிச்சுழி யழகும் பின்னழகும்
தாமரைக் கண்ணழகும் கனமிகு மார்பழகும்

நாணமுடன் குனிந்த தலையழகும் கொண்டவளை
தேவலோக யானைகள் ரத்தின பொற்கலச
நீர்கொண்டு மங்கல நீராட்ட மகிழ்பவளை
மங்களங்கள் நிறைமங்கள நாயகிமகா லட்சுமியை

பாற்கடல் அரசனின் புதல்வியாய்த் தோன்றி
தேவமாதர் யாவரும் செய்யும் பணியேற்று
உலகம் ஏற்றமுற ஒரே தீபமாய் சுடர்விட்டு
ஸ்ரீரங்கம் தனில்வாழும் தலைவியே செந்தாமரை
மீதமர்ந்த நின்கடைக் கண்பார்வை பட்டே
பிரம்மனும் இந்திரனும் சிவனும்பெருமையுற்றனர்
மூவுலகும் தன்னில்லாய்க் கொண்டு வாழும்
முகுந்தனின் அன்பரசியே உனையென்றும் வணங்குகிறேன்
சித்தம் சிந்திப்பதை நிறைவேற்றி யருளும்
சித்தலட்சுமி யாய்வெற்றி தரும்ஜெயலட்சுமியாய்
பெரும்தனம் தரும் தன லட்சுமியாய் வேண்டியது
வேண்டியாங்கு தரும்வர லட்சுமியாய் அறிவுதரும்
சரஸ்வதியாய் முக்திதரும் மோட்ச லட்சுமியாயுள்ள
மகாலட்சுமியே நான்வேண்டும் வரந்தந் தருள்வாய்

பாசம் அங்குசம் இருகை ஏந்த
வரஅபய முத்திரைகளை மற்றிருகை காட்டியருள
செந்தாமரை மீதமர்ந்த ஆதிசக்தி முக்கண்ணியே
கோடியிளம் சூரிய ஒளியினும்மேலாய் ஒளிவீசி
உலகாளும் உத்தமியே உனைநான் ஆரா திக்கிறேன்.

மங்களங்கள் யாவிலும் மங்களமாய் நிறைந்தவளே
வேண்டிய நலமருளும் மங்களமானவளே
சரணடைவதற் கேற்றதேவி முக்கண்ணி நாராயணியே
நாராயணி சரணம்! நாராயணி சரணம் !!

தாமரை கைகொண்டு தூயவெள்ளாடை நறுமண
மாலையணிந்து செந்தாமரை மீதமர்ந்த
பகவதியே பகவனுக்கு வல்லமைதரும் வடிவழகே
வேண்டுவோர் வேண்டியாங்கு வரமளித்து மூவுலகை
வாழவைக்கும் வளர்திருவே என்னையும் வாழவைப்பாய்

மகாவிஷ்ணு மனத்திற்கு உகந்த மாதவி
மாதவன் மனையாள் பூமிதேவி திருமாலின்
திருமார்பில் நிறைந்தவள் அச்சுதன் வல்லமை
யென போற்றப்படும் ஸ்ரீதேவியைச் சரண டைந்தேன்
ஓம் மகாலட்சுமியை என்றும் அறிந்து போற்றுவோம்

எங்கும் நிறை திருமாலின் துணையின் துணை வேண்டி
தியானிப்போம் அந்த லட்சுமி தேவியே
அவள்பாதம் பணிய நல்வழி காட்டட்டும்.

மகாலட்சுமியே! எப்பொழுதும் ஆற்றல் ஆரோக்கியம்
வளமிகு வாழ்வுதந்தவாறே காற்று வீசட்டும்
எனக்கு தனதான்யம் கால்நடை மக்கள் செல்வம்
நூறாண்டு வாழ்வு நீள் ஆயுள்
தந்துஎன் கடன்பசி நோய்வறுமை அகால மரணம் பயம்
கவலை மனத்துன்பம் இவையாவையும் அழிப்பாய்.

ஸ்ரீதேவி சென்றடையும் பாக்கியவான் புவியினில்
செல்வங்களை பெற்று வெற்றி நீள் ஆயுள்
மகிழ்வு புகழுடன் சுகவாழ்வு வாழ்ந்து
மரணமில்லா பெரும்பேற்றை எளிதில் அடைகிறான்.

எல்லாநலன்களும் திருமகளே என்றறிந்து
மந்திரங்கள் வேள்விகள் இடையின்றிச் செய்பவர்
அம்ருதாவை அடைந்து அவளருளால் வாழ்வில்
மக்கள் கால்நடை மிகு செல்வம் சேரவாழ்வர்.

... http://aanmikam.blogspot.in/2014/01/blog-post_22.html

சஷ்டியன்று சொல்ல வேண்டிய கந்தன் துதி!



எந்த வேளையும் தொழவேண்டிய கந்தவேளை, கந்தசஷ்டி தினத்தில் கீழ்வரும் துதியைச் சொல்லிப் போற்றுங்கள். சர்வமங்களமும் தருவான் ஷண்முகநாதன்.

ஓம் அழகா போற்றி
ஓம் அனல் ரூபா போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் மாயவன் மருகா போற்றி
ஓம் சக்தி உமை பாலா போற்றி
ஓம் முக்தி அருள் வேலா போற்றி
ஓம் பன்னிருகை பாலகா போற்றி
ஓம் பக்தர்க்கருள் சீலா போற்றி
ஓம் ஆறிரு தடந்தோளா போற்றி
ஓம் ஆறெழுத்து அமலா போற்றி

ஓம் இடும்பனை வென்றோய் போற்றி
ஓம் இடர் களையும் இறைவா போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலகநாபன் மருகா போற்றி
ஓம் ஐயம் தீர் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஓம்கார ரூபனே போற்றி
ஓம் ஓதிடும் வேதப்பொருளே போற்றி
ஓம் ஓதுவோர் மனதுக்கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி

ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் தீதிலா நன்மை புரிவோய் போற்றி
ஓம் குருவே திருவே குமரா போற்றி
ஓம் குறமகள் மனமகிழ் கோவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் மனதுறை செவ்வேள் போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் மண்ணுயிர்க்கருளும் மணியே போற்றி

ஓம் தண்ணருள் தந்திடும் தண்டபாணியே போற்றி
ஓம் மண்டலம் சுற்றிடும் மயில் வாகனா போற்றி
ஓம் வேதப்பொருளே வேலவா போற்றி
ஓம் நாதவடிவான நாயகா போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயனே போற்றி
ஓம் நறுந்தவ முனிவர் தலைவா போற்றி
ஓம் செந்தில் உறையும் ஸ்கந்தனே போற்றி
ஓம் பரங்குன்றம் உறை பாலகா போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பரமனே போற்றி
ஓம் இருளிடர் போக்கும் இறைவா போற்றி

ஓம் இதயக் குகை உறை குகனே போற்றி
ஓம் அன்பின் உருவமே அறுமுகா போற்றி
ஓம் ஒளவைக்கருளிய அன்பனே போற்றி
ஓம் சேயோனே குறிஞ்சி மேவுவோய் போற்றி
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி
ஓம் கருணை நிறைந்த கடவுளே போற்றி
ஓம் அறுபடை வீடமர் ஆண்டவா போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சுப்ரமண்யா போற்றி
ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி

ஓம் ஆறுதனில் தோன்றிய அறுமுகா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே கந்தனே போற்றி
ஓம் சஷ்டியில் மகிழும் ஷண்முகா போற்றி
ஓம் உதயச் சுடரே உமைபாலா போற்றி
ஓம் இதயத்துள் உறை இனியனே போற்றி
ஓம் பக்தர்தம் வினை தீர்ப்போய் போற்றி
ஓம் மாசிலா மனத்துறை மைந்தா போற்றி
ஓம் மாமயில் வாகனா மங்களா போற்றி
ஓம் வடிவேல் தாங்கி வருவாய் போற்றி
ஓம் அடியார் அல்லல் களைவாய் போற்றி

ஓம் வளமுள வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி குஞ்சரி நாயகா போற்றி
ஓம் செஞ்சுடரில் உதித்த செல்வனே போற்றி
ஓம் பார்வதி உளமகிழ் பாலனே போற்றி
ஓம் அமுதென தமிழை அளிப்போய் போற்றி
ஓம் தருநிழல் தமிழின் இறைவா போற்றி
ஓம் ஆடும் பரிவேல் அரசே போற்றி
ஓம் உடன் வந்தருளும் உமாசுதனே போற்றி
ஓம் கலியுக தெய்வமே கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி

ஓம் தந்தைக்கு மந்திரம் உரைத்த சரவணா போற்றி
ஓம் சிந்தைக்குள் உறைவாய் சிங்காரவேலா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ குக சண்முகா போற்றி
ஓம் வேடர்குல மகள் மணாளா போற்றி
ஓம் பாடற்கினிய பவகுமரா போற்றி
ஓம் அசலத்தில் ஆண்டியாய் நின்றவா போற்றி
ஓம் சகலத்தையும் தரும் சேயோன் போற்றி
ஓம் தெவிட்டா இன்னருள் தெய்வமே போற்றி

ஓம் தேவர் மூவர் பணி தேவனே போற்றி
ஓம் போகர் நாடிய மெய்ப் பொருளே போற்றி
ஓம் ஆகமம் போற்றும் அழகோனே போற்றி
ஓம் பாதகம் பாவம் போக்குவோனே போற்றி
ஓம் சித்திகள் அருளும் சிவபாலா போற்றி
ஓம் பக்தியில் மனமகிழ் பாலகா போற்றி
ஓம் ஆவினன் குடியுறை ஆறுமுகா போற்றி
ஓம் தணிகை மலைவாழ் தலைவா போற்றி
ஓம் தந்தைக்கு உரைத்த தயாபரா போற்றி
ஓம் சேயோனே செந்தில் நாதனே போற்றி

ஓம் சோலைமலை வளர் சுந்தரா போற்றி
ஓம் குன்றத்து குகை அருள் குமரா போற்றி
ஓம் கருணை மழை பொழி கந்தா போற்றி
ஓம் அருணகிரிக்கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலத்துக் குழந்தாய் போற்றி
ஓம் குறுமுனி போற்றிடும் குருவே போற்றி
ஓம் திருப்போரூர் திகழ் திருவே போற்றி
ஓம் மறுப்போர் இல்லாமாதவே போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி

ஓம் வெற்றிக் கடம்ப மாலை அணிவோய் போற்றி
ஓம் பற்றுவோர் பாவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் குமரகுரு புகழ் குழந்தாய் போற்றி
ஓம் துதிபுரி அன்பர்தம் துணையே போற்றி
ஓம் மதியணி இறைவன் மைந்தா போற்றி
ஓம் நிதி மதி அருளும் நின்மலா போற்றி
ஓம் ஞானபண்டித சுவாமி போற்றி
ஓம் தீனருக்கருள் தெய்வமே போற்றி போற்றி.

... Courtesy: Sasithara Sharma @ aanmikam

Monday, January 13, 2014

தீபங்கள் துதி



தீபங்களை ஏற்றிய பின்னர் கீழ்க் கண்ட துதியை ஓதவும்.

யா தேவி சர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ திருஷ்ணா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ சாந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ ஸ்ரத்தா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ லக்ஷ்மீ ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ ஸ்ம்ருதி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ


அடுத்து திருநாவுக்கரசு நாயனார் அருளிய வேற்றாகி விண்ணாகி … என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தை ஓதவும். இதனால் கோலத்தில் ஆவாஹனம் அடைந்த நவ சக்திகள் மூன்று ஆவரணமாக உள்ள 27 விளக்கு ஜோதிகளில் ஆவாஹனம் ஆகும்.

அடுத்து,

ஓம் தத்புருஷாய வித்மஹே அர்த்தநாரீஸ்வர தேவாய தீமஹி
தந்நோ அருணாசல தேவ ப்ரசோதயாத்

என்ற காயத்ரீ மந்திரத்தை ஓதவும். இதனால் விளக்கு ஜோதிகளில் ஆவாஹனம் அடைந்த நவசக்திகள் பெண்கள் அணிந்துள்ள மாங்கல்யங்களில் ஆவாஹனம் அடைந்து அவர்களுக்கு எல்லா காப்புச் சக்தி அனுகிரகங்களையும் அள்ளி வழங்கும். திருமணமான பெண்கள் மட்டும் அல்லாது கன்னிப் பெண்களும் இத்தகைய வழிபாட்டினால் திருமணத் தடங்கல்கள் நீங்கி நலம் பெறலாம்.

குறைந்தது 9, 18, 27 என்ற எண்ணிக்கையில் மேற்கொண்ட துதிகளை ஓதி பூஜையை நிறைவேற்றுதல் சிறப்பாகும். பூஜை நிறைவில் உரிய நைவேத்தியம் படைக்கவும். அவரவர் வசதிக்கேற்ப பொன் மாங்கல்யம், ஒன்பது கஜ நுல் புடவைகளை ஒரு மீட்டருக்குக் குறையாத ரவிக்கை துணியுடன் தானமாக அளித்தல் சிறப்பாகும்.

...

என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்ததனால்
ஒன்பதோடொன்றொ டேழு பதினெட்டோ டாறும் உடனாய நாட்களவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

புடவை அணியும்போது திருஞான சம்பந்த நாயனாரின் மேற்கூறிய பாடலை பாடிக் கொண்டே அணிந்து கொள்ளுதல் நலம்.

... Courtesy: "kulaluravuthigai"

Sunday, January 12, 2014

எண்கள் - மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கம்



குசாவும் எண் சக்தியும்

மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போல் எண்களும் இன்றைய மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கமாகி விட்டன. எனவே, எந்த அளவிற்கு ஒரு மனிதன் எண் சக்திகளைப் பெறுகிறானோ அந்த அளவிற்கு அவன் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களின் பண்புகளை எப்படி தெய்வீகமான முறையில் பெருக்கிக் கொள்ளலாம் என்பதை உங்களுக்கு விவரிக்கிறோம்.

எண் 1

தமிழ் அல்லது ஆங்கிலம் ஒன்றாந் தேதியில் பிறந்தவர்கள், அல்லது விதி எண்ணை ஒன்றாக கொண்டவர்கள், அதாவது 2.7.1990 (2+7+1+9+9+0 = 28 = 2+8 = 10 = 1+0 = 1) போன்ற தேதியில் பிறந்தவர்களின் வாழ்வில் ஒன்றாம் எண்ணின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

இத்தகையோர் செய்ய வேண்டிய இறைவழிபாடுகளைப் பற்றி சித்த கிரந்தங்கள் தெளிவாக உரைக்கின்றன.

1. எண் 1 தனித்த சிவ தத்துவத்தைக் குறிப்பதால் பாண லிங்க மூர்த்திகள் வழிபாடு இவர்களுக்கு தேவையான அனுகிரக சக்திகளை அளிக்கும்.

எண் ஒன்றின் அதிதேவதா நவகிரக மூர்த்தி சூரிய பகவான். சூரிய பகவானுக்கு உரித்தான செந்தாமரை மலர்களால் மாலை கட்டி ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது திருவாதிரை, சித்திரை, சுவாதி போன்ற ஏக நட்சத்திர தினங்களில் அல்லது சதய நட்சத்திர (100 நட்சத்திரங்களின் கூட்டு) தினங்களிலும் இத்தகைய பாண லிங்க மூர்த்திகளுக்கு அணிவித்து ஆராதனை செய்து வருதல் நலம்.

சிறப்பாக புதுக்கோட்டை அருகே ஸ்ரீகொன்றையடி விநாயகர் திருத்தலத்தில் அருள்புரியும் வெட்டவெளி பாணலிங்க மூர்த்தி அற்புதமான வரங்களை அளிக்க வல்ல காருண்ய மூர்த்தி.

2. காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பர நாதரை மேல் நோக்கு நாள்களில் வழிபட்டு ஸ்ரீபோடா சுவாமிகள் ஜீவாலயத்தில் சர்க்கரை பொங்கல் தானம் அளித்து வருதலால் திருமணத்திற்குப் பின் அமையும் வாழ்க்கை சுவையானதாக இருக்க எண் ஒன்றின் சக்தி துணை புரியும்.

3. ஸ்ரீபட்சி மேகாந்திரர், ஸ்ரீஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, வலது அல்லது இடது காலை துõக்கி நடனமாடும் நடராஜ மூர்த்திகள், ஸ்ரீதிரிபுர சம்ஹார தாண்டவ மூர்த்தி, ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தி போன்ற ஒற்றைக் காலை ஊன்றி நடனமாடும் சிவ மூர்த்தங்கள், ஊட்டத்துõரில் அருள் புரியும் ஏக (ஒற்றை) கல் ஸ்ரீபஞ்சநதன நடராஜ சிலா மூர்த்திகளை அவ்வப்போது தரிசித்து வருதல் நலம்.

4. சிவசூரியன் அருளும் பூவாளூர் போன்ற திருத்தலங்களில் இறைவனை வணங்கி உதிர்ந்த புட்டு தானமாக அளித்தலால் உயர்ந்த பதவிகளில் நிலவும் நிலையற்ற தன்மை நீங்க அருள் கிட்டும்.

எண் 2

1. சிவ சக்தியின் ஐக்கியத்தைக் குறிப்பது எண் 2. சக்தி அம்சம் பூரணமாகப் பொலியும் தலங்களில் வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பாகும். ஸ்ரீமீனாட்சி அம்மன், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி போன்று இறைவனைவிட இறைவியின் சான்னித்தியம் பெருகி உள்ள தலங்களில் அம்பாளையும் சிவபெருமானையும் வழிபட்டு மஞ்சள், குங்குமம், தேங்காய் போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்தல் சிறப்பு.

2. அர்த்தநாரீஸ்வரர் சிறப்பாக அருள்புரியும் திருச்செங்கோடு போன்ற திருத்தலங்களிலும், கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருளும் லால்குடி, உய்யக்கொண்டான் மலை போன்ற திருத்தலங்களில் தேங்காய் எண்ணெய் அகல் தீபமிட்டு தீபம் குளிரும் வரை ஆலயத்தை வலம் வந்து வணங்கினால் கணவன் மனைவியரிடையே அன்பு மிகும், குடும்ப ஒற்றுமை வளரும், எண் 2ன் சக்திகள் பெருகும்.

3. இறைவனுக்கு வலப்புறம் அம்பாள் அருள் புரியும் தலங்களில் மனைவியின் பெயரில் வீடு வாங்குவது நல்லது. வெண்தாமரை, சம்பங்கி, முல்லை, மல்லிகை போன்ற வெண்ணிற மலர்களால் அம்பாளுக்கு பூப்பந்தல் அமைத்து வழிபட்டு வந்தால் கணவன் அல்லது மனைவி இழந்து வாடுவோரின் வாழ்க்கையில் மணம் வீசத் தொடங்கும். வீடு, வாசல் போன்றவற்றை வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் பறிகொடுத்தோரின் வாழ்வு சீர்பெற சமுதாய பூஜையாக இத்தகைய வழிபாடுகளை இயற்றுவது நலம்.

4. சந்திர தீர்த்தம் அமைந்துள்ள திருத்தலங்களில் திருக்குளத்தில் நீராடி இறைவனுக்கும் நந்திக்கும் வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபடுதலால் உடம்பில் ஊறல், தேமல், அரிப்பு, வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்களால் அவதியுறுவோர் நலம் அடைவர்.

எண் 3

1. சிவா, விஷ்ணு, பிரம்மா மூர்த்திகள் ஒரு சேர அருளும் மும்மூர்த்தி தலங்களில் வழிபட்டு மா, பலா, வாழை என முக்கனிகளுடன் தேன் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு தானம் அளித்தல் நலம்.

2. நின்று, அமர்ந்து, நடந்த கோலங்களில் பெருமாள் அருள்புரியும் உத்தரமேரூர் போன்ற திருத்தலங்களிலும், இறைவன் மூன்று நிலைகளாக அருளும் சீர்காழி, உளுந்துõர்பேட்டை அருகே இளவனார்சூரக் கோட்டை, புதுக்கோட்டை அருகே திருக்கோளக்குடி போன்ற சிவத் தலங்களிலும் இறைவனை வழிபட்டு மூன்று கண் உள்ள தேங்காய் மூடியைத் துருவி அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து பள்ளி மாணவர்களுக்குத் தானம் அளித்து வந்தால் என்ன படித்தாலும் மூளையில் ஏறவில்லை என்று சொல்லும் குழந்தைகள் படிப்பில் நல்ல கவனம் செலுத்துவர்.

3. திருவாதிரை நட்சத்திரமும், வளர் மூன்றாம் பிறை சந்திரனும் இணைந்த நாட்களில் சந்திர மௌலீஸ்வரர், சந்திரசேகரர் என்ற நாமம் தாங்கியுள்ள மூர்த்திகளையும், பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரத்தில் அருளும் ஸ்ரீபடேசாகிப் சுவாமிகளின் ஜீவசமாதி, துவரங்குறிச்சியில் அருளும் ஸ்ரீஒளியுல்லா சுவாமிகளின் ஜீவசமாதி இவற்றை தரிசனம் செய்து குழந்தைகளுக்கு கல்கண்டு கலந்த பசும்பால் தானம் அளித்து வருதல் சிறப்பு.

4. வியாழக் கிழமைகளில் தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திகளை வணங்கி மஞ்சள் நிற ஆடைகளைத் தானமாக அளித்து வந்தால் திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

எண் 4

1. திருநெல்வேலி அருகே நான்குநேரி திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீவானமாமலை பெருமாளை புதன், சனிக் கிழமைகளில் வணங்கி ஒரு மூங்கில் முறத்தில் ஒரு படி பச்சரிசி, மூன்று உருண்டை வெல்லம், இரண்டு உருண்டை மஞ்சள், ஒரு முழுத் தேங்காய் இவற்றை ஐந்து சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்து வந்தால் நாக தோஷங்களால் தடைபட்டுள்ள திருமணங்கள் விரைவில் நிறைவேறும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறையும்.

2. நான்முகன் பிரம்மா தனிச் சன்னதி கொண்டு அருளும் திருச்சி அருகே திருப்பட்டூர் போன்ற திருத்தலங்களில் இறைவனை வழிபட்டு ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வருதலால் பிறந்தது முதல் வாழ்வில் துன்பத்தையே அனுபவித்து வரும் அடியார்களுடைய குறைகள் தீரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

3. நான்கு வேதங்கள் வழிபட்ட திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோயிலில் இறைவனை வணங்கி, கிரிவலம் வந்து வேதம் ஓதும் மாணவர்களுக்கு தேனில் ஊறிய அத்திப் பழங்களை தானமாக அளித்து வருதலால் ஆஸ்துமா, கான்சர், தொழுநோய், சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட வியாதிகளின் வேகம் தணியும்.

4. நான்மாடக் கூடல் என்று பிரசித்தமாய் விளங்கும் மதுரை மாநகரில் அருளும் அமர்ந்த நிலை ஸ்ரீகூடல் அழகரைத் தரிசனம் செய்து செந்தாமரை மலர்களால் அர்ச்சித்தும், அடுத்த நிலையில் சயனன் கோலத்தில் அருளும் ஸ்ரீரெங்கநாதப் பெருமாளை நீலோத்பவ மலர்களால் அர்ச்சித்தும், நின்ற நிலையில் அருளும் ஸ்ரீசூரிய நாராயணப் பெருமாளுக்கு சாமந்திப் பூ திண்டு மாலை அணிவித்து வழிபடுவதால் ஊர் விட்டு ஊர் மாறி வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்களும், நிரந்தரமாய் ஒரு வேலையிலிருந்து வருவாய் பெற இயலாதர்வர்களும் நன்னிலை அடைவர்.

எண் 5

1. உலகில் உள்ள எல்லா இனத்தவரும் வழிபட வேண்டிய உத்தம மூர்த்தியான திருச்சி உறையூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் மூர்த்தியை வழிபட்டு எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், புளி சாதம் போன்ற சித்ரான்னங்களைத் தானமாக அளித்தலால் கம்ப்யூட்டர், மைக்ரோபயாலஜி, அணு விஞ்ஞானம் போன்ற ஆராய்ச்சி துறைகளில் ஈடுபடுவோர் நலம் அடைவர்.

2. ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் திருஅருள் புரியும் திருவையாறு திருத்தலத்திலும், திருச்சி லால்குடி அருகே திருமணமேடு திருத்தலத்திலும் இறைவனை வணங்கி பொன் மாங்கல்யம் தானம் (ஒரு குண்டுமணி அளவாவது) அளித்தலால் அகால மரணம் ஏற்படாமல் இருக்க இறைவன் அருள் புரிவார். மரண பயத்தை அகற்றுவது பஞ்ச மூர்த்திகளின் தரிசனம். இக்காரணம் பற்றியே பெரும்பாலான சிவத்தலங்களில் இறைவனின் பஞ்ச மூர்த்திகளைப் பல்லக்குகளில் ஏற்றி வீதிகளில் வலம் வரும் தெய்வீக வழக்கம் இன்றும் நிலவி வருகிறது.

3. புத பகவான் தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் திருவெண்காடு திருத்தலத்தில் முக்குள தீர்த்தத்தில் நீராடி வேதம் பயிலும் மாணவர்களுக்கு பஞ்ச பாத்திரம், உத்தரணி, மணி போன்ற பூஜை பொருட்களைத் தானம் அளித்தலால், வயதான காலத்தில் தக்க துணையுடன் வாழும் வசதியையும் நிலையையும் ஈசன் அருள்வார்.

4. ஒரு மாதத்தில் வரும் ரோஹிணி, புனர்பூசம், மகம், ஹஸ்தம், விசாகம் என ஐந்து நட்சத்திரங்களிலும் ராமா சீதா லட்சுமண சகிதமாய் காட்சி அளிக்கும் தெய்வ மூர்த்திகளுக்கு பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம் போன்ற ஐந்து அமிர்த சக்திகள் கொண்ட அபிஷேகங்கள் செய்து, இறை மூர்த்திகளுக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம், தலைப் பாகை, சேலை, ஜாக்கெட் என்னும் ஐந்து வித ஆடைகளை அணிவித்து ஐந்து விதமான மலர்களால் அலங்கரித்து, சாதம், முறுக்கு, பணியாரம், தோசை, இட்லி போன்ற ஐந்து விதமான பதார்த்தங்களால் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு தானம் அளித்து வந்தால் என்றும் வற்றாத செல்வம் கொழிக்கும் நிலையை அடைவர்.

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மராஜர் இத்தகைய அபிஷேக ஆராதனைகளை 14 ஆண்டுகள் தொடர்ந்து பஞ்ச பர்வ நாட்களில் நிறைவேற்றி வந்ததால்தான் உயிருடன் சொர்க்க லோகம் செல்லும் உத்தம நிலையை அடைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. (பஞ்ச பர்வ நாட்களாவன தமிழ் மாதத்தில் முதல் தேதி, திங்கள்,வெள்ளி, சனிக் கிழமைகள், வளர் சதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி திதிகள், கிருத்திகை நட்சத்திரம்).

எண் 6

1. சென்னை ஸ்ரீவெள்ளீஸ்வரர் திருத்தலத்தில் இறைவனை வழிபட்டு கால் மெட்டிகளை சுமங்கலிகளுக்கு தானமாக அளித்து வருதலால் கண் பார்வை மங்குதல், மாலைக் கண், புற்று நோய் போன்ற கண் நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.

2. கழுதையை வாகனமாக உடைய ஸ்ரீபல்குனி சித்தர் அருளும் பூவாளூர் திருத்தலத்தில் வழிபாடுகள் மேற்கொண்டு கழுதைகளுக்கு காரட், பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை அளித்து வந்தால் மாடாக உழைத்தும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க முடியாத நிலை மாறி உழைப்புக்கேற்ற ஊதியமும், பண வரவும் கிட்ட இறைவன் அருள்புரிவார். மூதாதையர்களுக்கு வழிபாடுகள் விடுபட்டிருந்தால் அதற்கு ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும்.

3. சுக்ர வார அம்மன் அருளும் தலங்களில் வெள்ளிக் கிழமைகளில் ராகு நேரத்தில் வழிபாடுகள் இயற்றி தானே அரைத்த மஞ்சளால் அம்பிகைக்கு அபிஷேகம் செய்து வழிபடுதலால் தீர்க்க சுமங்கலித்துவம் பெற அன்னையின் அருள் கிட்டும்.

4. பல யுகங்களாக முருகப் பெருமாளின் அருளை வேண்டி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த சுக்ர மூர்த்திக்கு தற்போது ரமண மகரிஷியின் ஆஸ்ரமத்தைத் தாண்டி உள்ள கிரிவலப் பகுதியில் ஏக முக தரிசனத்தை அடுத்து முருகப் பெருமானின் தரிசனம் கிட்டியது. இங்கு எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை வணங்கி சண்பக மலர்களால் மாலை தொடுத்து இறைவனுக்குச் சார்த்தி, பசு நெய் கலந்த பஞ்சாமிர்தத்தை சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைத்து கிரிவலம் வரும் அடியார்களுக்கு வழங்கி வந்தால் தங்க, நவரத்தின வியாபாரிகள் நலம் அடைவர். ஆண் துணை இல்லாத குடும்பங்களிலும், ஆண் வாரிசுகள் இல்லாத தம்பதிகளும் தக்க நிவாரணம் கிடைக்கப் பெறுவார்கள்.

5. கும்பகோணம் அருகே வெள்ளியான்குடி திருத்தலத்தில் அருளும் ஸ்ரீராம மூர்த்தியை தரிசனம் செய்து இங்குள்ள சுக்ர தீர்த்தத்தில் நீராடி திண்டு தோசை, பெரிய வெங்காயம் கலந்த சட்னியுடன் தானம் அளித்தலால் ஆண்கள், பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடிப் பெற முடியாத சுக்ர சக்திகளை ஓரளவு திரும்பப் பெறலாம். கம்ப்யூட்டரில் நீண்டநேரம் வேலை செய்வதால் ஏற்படும் கண் நோய்களுக்கு நிவர்த்தி தரக் கூடிய தலம். ஆனால், மாதம் ஒரு முறையாவது இங்கு நீராடி வருதல் அவசியம்.

எண் 7

1. சப்த ரிஷிகள் அருளும் லால்குடி போன்ற சிவத்தலங்களிலும், சப்தரிஷீஸ்வரர் என்று இறைவன் நாமம் பூண்ட திருத்தலங்களிலும் சப்தமி திதிகளில் வழிபட்டு மஞ்சள் நிற ஆடைகள், உணவுகள், ஆபரணங்களைத் தானமாக அளித்தலால் இசைத் துறையில் உள்ளோர் முன்னேற்றம் அடைவர்.

2. அபூர்வமாக ஏழு பிரகாரங்களுடன் காட்சி தரும் பிரம்மாண்டமான திருக்கோயில்களான ஸ்ரீரங்கம், திருஅண்ணாமலை, மன்னார்குடி போன்ற திருத்தலங்களில் தினம் ஒரு பிரகாரத்திலாவது வலம் வந்து வாரத்தின் ஏழு நாட்களிலும் வழிபட்டு வருவதால் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு வழிகாட்டுதல் இன்றி தவிப்போர் தகுந்த வழிகாட்டியை அடைவர். ஆழ்ந்த நம்பிக்கை உடையோருக்கு முக்தியையே அளிக்கக் கூடியது இந்த சப்த பிரகாரங்கள் வழிபாடு. இவ்வாறு திருவரங்க சப்த பிரகாரங்களை 18 முறை நமஸ்கார பிரதட்சணத்துடன் வழிபட்ட பின்னரே ராமானுஜருக்கு அவருடைய குருநாதருடைய தரிசனம் கிட்டியது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

திருஅண்ணாமலை திருத்தலம் இறைவனே வலம் வரும் கிரிவலப் பாதையையே ஏழாவது பிரகாரமாக உடையது என்றால் இதைவிட சிறப்பான ஒரு பிரகாரம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தரிசனம் செய்ய முடியுமா? பலரும் கிரிவலப் பாதையின் மகத்துவம் அறியாததால்தான் அதைச் சாதாரண வீதி, சாலை என்று எண்ணுவதால்தான் அதில் செருப்புகள் அணிந்து நடப்பது, கிரிவலப் பாதையில் எச்சில் துப்புவது போன்ற அசுத்தமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அது சக்தி வாய்ந்த ஏழாவது பிரகாரம் என்பதை இனியாவது உணர்ந்து அங்கு முறையோடு கிரிவலம் வந்து அளப்பரிய பலன்களை அள்ளிச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

3. நமது பூலோக கணக்கில் சப்த ஸ்வரங்கள் என்ற ஏழு ஸ்வரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், மற்ற லோகங்களில் ஏழிற்கும் மேற்பட்ட ஸ்வரங்களும், ஸ்வர தேவதைகளும் உண்டு. திருச்சி அருகே செட்டிக்குளம் ஸ்ரீஏகாம்பரரேஸ்வரர் திருத்தலத்தில் காணப்படும் இசைத் துõண்களைப் போல எங்கெல்லாம் இசைத் துõண்கள் உள்ளனவோ அத்திருக்கோயில்களில் வீணை, வயலின் போன்ற வாத்ய கருவிகளை வாசிக்கும் ஏழை இசைக் கலைஞர்களைக் கொண்டு இறைவனுக்கு நாதோபசாரம் செய்து மகிழ்வித்து, அந்த வித்வான்களுக்கு தக்க சன்மானம் வழங்கி கௌரவித்தலால் நரம்பு சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவோர் நலம் அடைவர்.

4. திருத்தனி திருத்தலத்தில் அமைந்துள்ள கன்னி தீர்த்தம் என்றழைக்கப்படும் சப்தரிஷி தீர்த்தத்தில் நீராடி தினைமாவு தேன் கலந்த உணவை பக்தர்களுக்குத் தானமாக அளித்து வந்தால் உடல், மன வியாதிகளால் தடைப்பட்ட திருமணங்கள் எளிதில் நிறைவேறும். திருமணத்திற்குப் பின் தஞ்சை கரந்தை திருத்தலத்தில் அருளும் ஸ்ரீஅருந்ததி சமேத வசிஷ்டரை வணங்கி நன்றி செலுத்துதல் அவசியமாகும். அப்போதுதான் பிரார்த்தனை முழுமை அடைகிறது என்பதை மனதில் கொள்ளவும்.

எண் 8

1. காலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது எண் எட்டு. அதனால்தான் எட்டை கால எண் என்றும் அழைக்கிறோம். ஒரு நாளின் பகல் பொழுதை ஒன்றரை மணி நேரம் கொண்ட எட்டு முகூர்த்தங்களாகவும் , இரவுப் பொழுதை எட்டு முகூர்த்தங்களாகவும் பிரித்து கணக்கிடுவதால், எண் எட்டிற்கு பைரவ சக்திகள் மிகுந்திருக்கும். சீர்காழி, திருஅண்ணாமலை போன்று அட்ட (எட்டு) பைரவ மூர்த்தி அருளும் தலங்களில் தேய் பிறை அஷ்டமி தினங்களில் வழிபாடுகளை இயற்றி முந்திரி பருப்பு பாயசம் தானமாக வழங்குவதால் நேரம் காலம் பார்க்காது நிகழ்த்திய திருமணம், கிருஹப் பிரவேசம் போன்ற நற்காரியங்களில் ஏற்பட்ட கால தோஷங்களுக்கு ஓரளவிற்குப் பிராயச்சித்தம் கிட்டும்.

2. இறைவனே பைரவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ள சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் திருத்தலம், பைரவர் தனிச் சன்னதி கொண்டு அருளும் திண்டுக்கல் அருகே தாடிக் கொம்பு, திருவாஞ்சியம், திருச்சி (பெரிய கடைவீதி ஸ்ரீபைரவர் கோயில்) போன்ற திருத்தலங்களில் இம்மூர்த்தியை வழிபட்டு நாய்களுக்கு பிஸ்கட், ரொட்டி, கடலை மிட்டாய் போன்ற உணவு வகைகளைத் தானமாக அளித்தலால் பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத ஆபத்துக்கள் நீங்கும். இரவு நேரப் பயணங்களில் ஏற்படும் கால தோஷங்களுக்கு மிகக் குறைந்த அளவில் பரிகாரம் கிட்டும். இரவு நேரத்தில் மேற்கொள்ளும் பயணங்களுக்கு பொதுவாக எவ்வித பரிகாரமும் இல்லை என்பதை உணர்ந்தால்தான் இந்த பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

3. எண் எட்டிற்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டது. அவதார மூர்த்திகளில் யாருக்குமே புரியாத புதிராக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளங்குவது போல எண் எட்டின் மகிமையும், ஜாதகத்தில் எட்டாம் வீட்டின் மகத்துவமும் இன்றும் பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. கால தேசத்தைக் கடந்த நிலையில் நிற்கும் உத்தம பெருமாள் பக்தர்கள்தான் எட்டின் மகிமையைப் புரிந்து கொள்ள முடியும் என்றால் அது மிகையாகாது.

கீழிருந்து மேலாகப் பார்த்தாலும், வலமிருந்து இடமாகப் பார்த்தாலும் எட்டின் தோற்றம் மாறாது என்பதே வேறு எந்த எண்ணிற்கும் இல்லாத தனிச் சிறப்பாகும்.
மேலும், கையை எடுக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் எட்டு என்ற எண் உருவத்தை எழுதிக் கொண்டே இருக்கலாம்.

இதனால் என்ன பயன் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அலைபாயும் மனதை அடக்கி ஆள்வதே எண் எட்டு ஆகும். மகாபாரத யுத்தத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இந்த யுக்தியைத்தான் கையாண்டார். அதாவது கீதை என்ற ஒப்பற்ற தத்துவத்தை அர்ச்சுனுக்கு புகட்ட நினைத்தார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. ஆனால், மிகவும் உயரிய தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரு முனைப்பட்ட மனதுடன் கேட்க வேண்டும் அல்லவா? இவ்வாறு ஒரு முனைப்பட்ட சக்தியைத் தருவதற்காக ஸ்ரீகிருஷ்ணர் அஷ்ட வக்ர சக்திகளைப் போர் முனையில் நிறுவினார். அஷ்ட வக்ர சக்திகளைப் பற்றி மனித மனம் புரிந்து கொள்ள முடியாது என்பதால் அதை எண் எட்டில் உருவகப்படுத்திப் பார்க்கலாம்.

மேலே ஒரு வட்டமும் கீழே ஒரு வட்டமும் இணைந்து உருவாவதுதானே எட்டு. இதில் மேல் வட்டத்தில் உள்ள நான்கு வளைவுகளும், கீழ் வட்டத்தில் உள்ள நான்கு வளைவுகளும் அஷ்ட வக்ர சக்திகளைக் குறிக்கின்றன.இந்த அஷ்ட வக்ர சக்திகள் எல்லாத் திசைகளிலும் சுழலும் தன்மை உடையது. இவ்வாறு எட்டுடன் சுழலும் மனச் சக்தியானது மெல்ல மெல்ல இரண்டு வட்டங்கள் சந்திக்கும் நடுப் புள்ளியில் வந்து சேர்ந்து விடும். அந்நிலையில் மனக் குழப்பம் நீங்கி தெளிவு பெறும். இவ்வாறு அர்ச்சுனனின் மனம் தெளிவடைந்தபோதுதான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கீதை என்னும் அரிய உபநிஷத்தை உபதேசித்தார். அன்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உபதேசித்த அஷ்ட வக்ர தத்துவமே இன்றைய விஞ்ஞானத்தில் அணு ஆராய்ச்சி, வானிலை, விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் பெரிதும் பயன்படுகிறது.

ஸ்ரீகிருஷ்ண பகவானின் குழலூதும் திருஉருவத்தை வீட்டில் வைத்து முடிந்தபோதெல்லாம் அவர் திருஉருவத்தை மனக் கண் முன் கொண்டு வந்து தியானித்துக் கொண்டிருந்தால்தான் எட்டைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடியும். ஆத்ம விசாரத்திற்கு முன்னோடியாக இருப்பதுதான் குழலுõதும் கிருஷ்ணனின் திருஉருவம்.

4. ஏற்கனவே கூறியதுபோல் எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் காற்றில் அகப்பட்ட பஞ்சின் நிலையில் இருப்பதால் விதியின் வலிமையான பிடியில் இருந்து ஓரளவு விடுதலை பெற உதவுவதே திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி திருத்தல வழிபாடு.

எண் 9

1. எண் வரிசையில் கடைசியாக வரும் 9 பூரணத்துவத்தைக் குறிக்கிறது. எந்த எண்ணின் ஒன்பது மடங்கும் ஒன்பதாகவே வரும். எனவே, ஒன்பதை கடைசி எண் என்று சொல்லாமல் முழுமையான எண், பூரணமான எண் என்று சொல்வதே சிறப்பு.

எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை நினைத்து காரியத்தை ஆரம்பித்து, அந்தக் காரியம் நிறைவேறியவுடன் ஆஞ்சநேய மூர்த்திக்கு நன்றி சொல்லி முடிப்பது வழக்கம். இந்த இரண்டு மூர்த்திகளுக்குமே உரிய எண்ணாக ஒன்பது இருப்பதே அதன் சிறப்பு.

உலகிலேயே பெரிய பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையாரை ஒன்பது முறை கிரிவலம் வந்து வணங்குவது சிறப்பான வழிபாட்டு முறையாகும். கிரிவலத்தின்போது பூரணக் கொழுக்கட்டைகளை தானமாக அளித்தலால் பாதியில் நின்று போன திருமணங்கள், வீட்டு மனை வேலைகள், கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள், குளம், கிணறு தோண்டும் வேலைகள் நிறைவு பெறும்.

2. நவகிரக வழிபாடு தோன்றுவதற்கு முன்பே நிலவிய திருமழபாடி போன்ற சிவத்தலங்களில் நவகிரக சக்திகளை மூலவரே ஏற்று அருள்பாலிப்பதால் இத்தலங்களில் ஒன்பதின் சக்திகள் அபரிமிதமாக இருக்கும். ஒன்பது குழிகள் கொண்ட பணியாரச் சட்டியில் இனிப்பு பணியாரம் சுட்டு ஆடு மாடு மேய்ப்பவர்களுக்குத் தானமாக வழங்கினால் நாற்கால் பிராணிகளால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கலாம். புதிது புதிதாக வரும், இனந் தெரியாத காய்ச்சல் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.

3. இறை மூர்த்திகள் வில், அம்பு, வேல், கத்தி போன்ற பல ஆயுதங்களைத் தாங்கி காட்சி தருகிறார்கள் அல்லவா? இந்த ஆயுதங்களால் அவர்கள் தீயவர்களைத் தண்டிக்கிறார்கள் என்று கூறுகிறோம். உண்மையில் கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை என்பதே சித்தர்கள் வாக்கு. அவரவர் செய்த நல்வினை தீவினை சக்திகளே மனிதர்களைத் தண்டிக்கின்றன.

ஒரு ஜீவனின் அகங்காரம் காரணமாக அத்து மீறிய கொடுமைகள் நிகழும் இறைவன் பல அவதாரங்கள் மூலம் அந்த ஜீவனின் ஆணவத்தை மட்டுமே அழிக்கிறான். இறை மூர்த்திகளின் இந்த ஆயுதங்களை நாம் எந்த அளவிற்கு வழிபடுகிறோமோ அந்த அளவிற்கு நாம் எல்லா அனுகிரகங்களையும் அந்த ஆயுதங்களின் மூலமாகவே பெறலாம்.

இம்முறையில் ஏற்பட்டதே பெருமாளின் சங்கு, சக்கர வழிபாடு. அதே போல சிவபெருமான் தாங்கி இருக்கும் மழுவானது ஒன்பதின் வடிவத்தைக் கொண்டிருப்பதால் திருக்கோயில்களில் காட்சி தரும் இந்த மழு ஆயுதத்திற்கும், மற்ற ஆயுதங்களுக்கும் சுத்தமான நல்ல எண்ணைக் காப்பிட்டு, கையால் அரைத்த சந்தனப் பொட்டிட்டு வணங்குவதால் தலைக்கு வந்த துன்பங்கள் தலைப்பாகையோடு போக ஈசன் அருள்புரிவார்.

4. அபூர்வமாக ஒன்பது கரங்களுடன் அருள்புரியும் ஸ்ரீஆயுர்தேவியின் வழிபாடு எண் ஒன்பதின் சக்திகளை எளிதில் பெற உதவும் உத்தம வழிபாடாகும். இதிலும் விசேஷமாக ஆயுர்தேவியின் ஒன்பதாவது கரத்தில் மிளிரும் சக்கரத்தை வணங்கி வருதல் மிகவும் சிறப்பு. நாம் வாழும் பூமிக்கு மூன்று விதமான சுழற்சிகள் உண்டு. அதாவது, தன்னைத்தானே சுற்றி வருதல், சூரியனைச் சுற்றி வருதல், தனது அச்சில் சுழல்தல் என்று மூன்று விதமான சுழற்சி முறைகள் மட்டுமே இன்றைய விஞ்ஞானம் அறிந்த ஒன்று. இவை மட்டுமல்லாமல் நாம் அறியாத பல சுழற்சி முறைகள் பூமிக்கும் மற்ற கிரகங்களுக்கும் உண்டு. இந்த சுழற்சி ரகசியங்களை முழுமையாக உணர்ந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள். பொருட்களின் சுழற்சி முறைகளில் இன்றைய கலியுக மக்களுக்குத் தேவையான ஒன்பது சுழற்சி அனுகிரக சக்திகளை அளிப்பதே ஸ்ரீஆயுர்தேவியின் ஒன்பதாவது கரத்தில் பிரகாசிக்கும் சக்கரமாகும். தொடர்ந்து பல்லாண்டுகள் ஸ்ரீஆயுர்தேவி வழிபாட்டை நிறைவேற்றி வந்தால் மனிதனின் ஊனக் கண்கள் மூலமாகவே இந்த ஒன்பது விதமான சுழற்சிகளையும் தரிசனம் செய்ய முடியும். ஸ்ரீஆயுர்தேவி பூஜை முறைகளை ஸ்ரீஆயுர்தேவி மகிமை என்னும் எமது ஆஸ்ரம நூலில் காணலாம்.

... சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் @ http://kulaluravuthiagi.com/kusa.htm




கணபதி மூர்த்திகளின் உருவங்களும், எண்களும்

 
கணபதி மூர்த்திகளின் உருவங்களும், எண்களும்
சித்தர்கள் விளக்கிய முறை

இவ்வுலகில் நாம் காணும் அனைத்தும் பிரணவத்திலிருந்துதான் தோன்றியுள்ளது. இவ்வாறு பிரணவ ஒலியிலிருந்து தோன்றிய உலகைக் காண்பதற்கு மனித உடலிலுள்ள மூலாதாரக் கனலே வழி வகுக்கிறது.
இதனால்தான் 'மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை' எழுப்பும் கலையை ஔவை மூதாட்டியும் விளக்கி உள்ளார்.

மூலாதாரத்தில் எழும் ஒலியும், ஒளியும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தன்மையை உடையதாக இருந்தாலும் ஒருவர் பிறந்த தேதிக்கும் அவருடைய மூலாதாரத்தில் எழும் ஆதாரக் கனலுக்கும் தொடர்பு இருப்பதால் தங்கள் பிறந்த தேதிக்கு உரித்தான கணபதி மூர்த்தியை உபாசித்து வருவதால் எளிதில் இந்த மூலாதாரக் கனலின் தன்மையைப் புரிந்து ஆன்மீகப் பாதையில் விரைவாக முன்னேற முடியும்.

கணபதி மூர்த்திகளின் உருவங்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை சித்தர்கள் விளக்கிய முறையில் வழிபடுவோர் எளிதில் எண் சக்திகளைப் பெற்றுப் பயனடைய முடியும். ஒரு எண்ணிற்கும் அதற்குரித்தான கணபதி மூர்த்திக்கும் உள்ள இணைப்பை இங்கு அளிக்கிறோம்.

ஒன்றாம் எண் கணபதி

கணபதி மூர்த்தியின் வாகனமான மூஷிகம் என்னும் மூஞ்சூறு கணபதியின் திருவடிகளைத் தரிசித்த வண்ணம் அதன் தலை குனிந்து பணிந்து நிற்கும். இத்தகைய கணபதி மூர்த்தி எண் ஒன்றுக்கு உரித்தானவர். இவரின் திருஉருவத்தை கோயில்களில் அல்லது ஓவியங்களில், வண்ணப் படங்களில் தரிசித்து குறைந்தது 10 நீர்க் கொழுக்கட்டைகளை தானமாக அளித்து வந்தால் எண் ஒன்றின் சக்திகளை விரைவாகப் பெறலாம்.

பணிவுடன் வணங்கி நிற்கும் இந்த வாகன மூர்த்தியின் வரலாறு அறிவதற்கு மிகவும் அற்புதமானது. நவகிரக மூர்த்திகளில் ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வர பகவானைப் போல தெய்வ அவதார மூர்த்திகளின் வாகனங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற மூர்த்திகளும் உண்டு. அவர்களுள் தலையாயவர் மூஷிகேஸ்வரர் என்னும் நாமத்துடன் பிள்ளையாரின் வாகனமாக அருள்புரியும் மூர்த்தியாவார். அவர் தன்னுடைய தவத்தின் நிறைவில் ஸ்ரீஅருணாசல மூர்த்தியிடமிருந்து ஈஸ்வர பட்டம் பெற்றவுடன் தன்னுடைய சற்குருவான பிள்ளையார் அப்பனுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் எழுந்தருளிய கோலமே அதாவது பிள்ளையாரின் திருப்பாதக் கமலங்களை வணங்கி நின்ற தோற்றத்தையே பிள்ளையார் மூர்த்தி எண்களில் முதலிடம் ஒன்றுக்கு உரிய கோலமாக ஏற்றுக் கொண்டார். பணிந்தவனே பக்தன் என்று பக்திக்கு ஆதாரமாக பணிவு இருக்க வேண்டும் என்ற காரணத்தால் முதல் எண்ணிற்குரிய கோலமாக இதைக் கணபதி மூர்த்தி ஏற்றுக் கொண்டார் எனலாம்.

கணபதி மூர்த்தியின் இந்தத் திருவிளையாடலின் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? எல்லா ரகசியங்களுக்கும் மூலமாக இருப்பதே திருஅண்ணாமலை புனித பூமியாகும். தான் சுமக்கும் ஈசனான பிள்ளையாருக்குத் தகுதியான வாகனமாக அமையும் பொருட்டு ஈஸ்வர பட்டம் பெறுவதற்காக எம்பெருமானை வணங்கி அதற்குரித்தான உபாயத்தையும் மூஷிகம் கேட்டார். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த பிள்ளையார் மூர்த்தி திருஅண்ணாமலையைத் தொடர்ந்து வலம் வந்தாலே எல்லா அனுகிரகமும் கிடைத்து விடும் என்று பதிலுரைத்து அதற்கான ஒரு பூஜை முறையையும் தெரியப்படுத்தினார்.

திருஅண்ணாமலையை வலம் வரும்போது கிரிவலப் பாதையில் உடன் வரும் மற்ற ஜீவன்களின் திருப்பாதங்களை மட்டுமே நோக்கி வலம் வர வேண்டும். எக்காரணம் முன்னிட்டும் எந்த ஜீவனுடைய முழங்காலிற்கு மேல் மூஷிக வாகனத்தின் பார்வை பட்டு விடக் கூடாது என்பதே கணபதி மூர்த்தி மூஷிகருக்கு அளித்த பூஜை முறையாகும். கேட்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தாலும் சற்று யோசித்துப் பார்த்தால்தான் இந்த பூஜையை நிறைவேற்றுவது எவ்வளவு கடினம் என்பது புரிய வரும். திருஅண்ணாமலையை ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள், பாம்புகள் என கோடி கோடி ஜீவ ராசிகள் வலம் வருகின்றன. எறும்பு, புழு, பூச்சி போன்ற ஜீவன்களை விட எலி வடிவில் இருக்கும் மூஷிக வாகனம் உருவத்தில் பெரிதாக இருப்பதால் இத்தகைய நுண்ணிய ஜீவ ராசிகளின் பாதங்களை மட்டும் பார்ப்பது என்பது எப்படி சாத்தியமாகும்?

அதற்காக ஓர் விந்தையான பூஜை முறையை தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டார் மூஷிகர். தரைக்கு மேல் கிரிவலம் மேற்கொண்டால்தானே மற்ற ஜீவ ராசிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கிரிவலப் பாதையில் பூமிக்கு கீழ் மூன்று சாண் ஆழத்தில் துளையிட்டுக் கொண்டே அத்துளை வழியாகத் தன்னுடைய கிரிவலத்தை மேற்கொண்டார். தொடர்ந்து பல வருடங்கள் துளையிட்டுக் கொண்டே சென்றதால் மூஷிகருடைய பற்கள் நாளடைவில் பலம் இழக்கத் தொடங்கின. சிறிது காலம் சென்றவுடன் பற்கள் எல்லாம் கொட்டிப் போய் தன்னுடைய மூக்கு, கால்களால் மட்டுமே மண்ணைத் தோண்டித் தோண்டி கிரிவலத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார். யுகங்கள் கடந்தன. கொஞ்சம், கொஞ்சமாக கால்களும் தேய்ந்து போனதால் மேற்கொண்டு மண்ணைத் தோண்ட முடியாமல் எங்கெல்லாம் சிறிய பொந்துகள் தென்படுகின்றனவோ அதன் வழியாக உருண்டு உருண்டு கிரிவலத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார் மூஷிகர்.

ஒரு யுகத்தில் ஆவணி மாத சுக்ல பட்ச சதுர்த்தி திதி அன்று ஏக முக தரிசனப் பகுதியில் அருணாசல ஈசன் மூஷிகருக்கு காட்சி அளித்து, மூஷிகேஸ்வரா என்று தன் திருவாக்கால் அழைத்தார். அத்தருணத்திலும் மூஷிகேசருக்கு ஒரு சோதனை காத்திருந்தது. தன்னை அழைத்த குரல் எல்லாம் வல்ல எம்பெருமானின் குரலோசை என்று உணர்ந்தவுடன் உள்ளம் எல்லையில்லா ஆனந்தப் பரவசத்தில் திளைத்து தன்னையும் அறியாமால் எம்பெருமானின் திருமுகத்தை நிமிர்ந்து பார்க்கலாம் என்று சற்றே நினைத்தார். அப்போது தன் குருநாதரான கணபதி மூர்த்தியின் அருளாணை ஞாபகத்திற்கு வரவே தன் தவறை உணர்ந்து தன்னிலை பெற்றார். ஈசனின் திருமுகத்தை நோக்காமலே அவருடைய திருப்பாதங்களை மட்டும் வணங்கி தன்னுடைய பூஜையை நிறைவேற்றினார். எந்தச் சூழ்நிலையிலும் கடமை மறவாத, குரு வாக்கை உயிரினும் மேலாகப் போற்றி மதித்த மூஷிகேசரின் தவத்தை மெச்சிய ஈசன் அதிஅற்புதமான தெய்வீக வரங்களை எல்லாம் அவருக்கு வழங்கி மறைந்தார். மூஷிகேசருக்கு அருணாசல ஈசன் அருளாசி வழங்கிய ஏகலிங்க முக தரிசனப் பகுதி தற்போது ரமணாஸ்ரமத்தை அடுத்துள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு எண்ணிற்கும் உரிய கணபதி கோலத்தின் பின்னால் பற்பல காரணங்கள் உண்டு. இந்த காரணங்கள் என்னவென்பதை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். உரிய காலத்தில் மற்ற எண்களின் கோலத்திற்குரிய மகத்துவம் அளிக்கப்படும்

இரண்டாம் எண் கணபதி

இரண்டு கைகளாலும் லட்டைப் பிடித்துக் கொண்டு இரண்டு கால்களால் நின்று கொண்டிருக்கும் மூஷிக வாகனத்தை உடைய கணபதி மூர்த்தி எண் இரண்டுக்கு உரியவர் ஆவார். இத்தகைய மூர்த்திகளை வழிபட்டு பூரண கொழுக்கட்டைகளை 11, 20 என்ற எண்ணிக்கையில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்து சந்தியா நேரங்களில் தானம் செய்து வந்தால் எண் இரண்டின் சக்திகள் வாழ்விற்கு பல நன்மைகளைச் செய்யும்.

மூன்றாம் எண் கணபதி

கணபதி மூர்த்தியின் வாகனமான மூஷிகம் வெண்மையாக இருக்க வேண்டும். வெண்ணிற வாகனம் பெற்ற கணபதி மூர்த்தி எண் மூன்றுக்கு உரிய மூர்த்தியாகத் திகழ்வதால் அவரவர் கை கொள்ளும் அளவிற்கு மூன்று கைப்பிடி வேகவைத்த நிலக்கடலையை சுவாமிக்கு நைவேத்யம் செய்து மாணவர்களுக்குத் தானமாக அளித்தலால் எண் மூன்றின் சுப சக்திகளை எளிதில் பெறலாம்.

நான்காம் எண் கணபதி

இரண்டு கைகளிலும் தாமரை மலர்களை ஏந்திய கோலத்தில் திகழும் கணபதி மூர்த்தி எண் நான்கிற்கு உரிய மூர்த்தியாவார். மண் கலயத்தில் கொள்ளை வேக வைத்து சர்க்கரை கலந்து சுவாமிக்கு நைவேத்யம் செய்து கழுதைகளுக்கு தானம் அளித்தலால் எந்த வேலையிலும் நிரந்தரமாகப் பணி செய்ய முடியாமல் அலை பாயும் மனதுடன் இருப்பவர்களின் மன வேதனை தணியும். கடுமையாக வேலை செய்தும் அதற்குரிய கூலியோ, சன்மானமோ பெற முடியாக நிலை மாறும்.

ஐந்தாம் எண் கணபதி

பாசம், அங்குசத்தை கைகளில் ஏந்தி அருள் புரியும் கணபதி மூர்த்தி எண் ஐந்திற்குரிய கணபதி மூர்த்தி ஆவார். இவரை வணங்கி உருண்டை வடிவில் இலவம் பஞ்சு வைத்துத் தைத்த திண்டு தலையணைகளை நீண்ட நாள் படுத்த படுக்கையாக கிடக்கும் நோயாளிகளுக்கு, வயதானவர்களுக்குத் தானமாக அளித்தலால் வயதான காலத்தில் மற்றவர்கள் உதவியை எதிர்பார்த்து வாழும் நிலை ஏற்படாமல் இறைவன் காத்தருள்வார்.

ஆறாம் எண் கணபதி

கணபதி மூர்த்தி தன்னுடைய வலது காலை மடக்கி இடது காலைத் தொங்க விட்ட நிலையில் அருள்புரியும் கோலம் எண் ஆறுக்கு உரியதாகும். சுவாமியின் துதிக்கை வலஞ்சுழியாக இருத்தல் வேண்டும். இம்மூர்த்திகளை வணங்கி தேங்காய் பர்பி நைவேத்யம் செய்து தானம் அளித்தலால் நேரம் காலம் பார்க்காது கொடுத்த கடன்கள் உரிய காலத்தில் வசூலாகும். இது ஒருமுறையே கிட்டும் பரிகாரம் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஏழாம் எண் கணபதி

கணபதி மூர்த்தியின் துதிக்கை இடஞ்சுழியாக அமைந்து, மூர்த்தியானவர் தன்னுடைய இடது காலை மடக்கி, வலது கால் தொங்கிய நிலையில் அருள் வழங்கும் கோலம் எண் ஏழிற்கு உரியதாகும். இம்மூர்த்தியின் தரிசனமும், ஏழை இசைக் கலைஞர்களுக்கு நரம்பு இசைக் கருவிகள் தானமும் சொந்த வீடுகள் வாங்க விரும்புவோர்க்கு நலம் பயக்கும். சம்பூர்ண ராகங்களில் அமைந்த தியாகராஜ கீர்த்தனைகளை இறைவன் முன் பாடி வருதலால் வாஸ்து தோஷங்கள் விலகும்.

எட்டாம் எண் கணபதி

துதிக்கை மேலே தூக்கியவாறு ஆசீர்வதிக்கும் நிலையில் உள்ள கணபதி மூர்த்தி எண் எட்டுக்குரியவர் ஆவார். இவரை வணங்கி எள் கலந்த முறுக்கு, சீடைகளைத் தானம் அளித்தலால் சனி பகவான் பீடிப்பால் வரும் துன்பங்கள் ஓரளவு குறையும். எல்லா தெய்வ மூர்த்திகளுமே சனி பகவான் பீடிப்பால் துன்பம் அடைந்து விதியின் வலிமையை மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள் அல்லவா? இந்த விதிக்கு விலக்காக அமைந்தவர்கள் பிள்ளையார், ஆஞ்சநேயர் மூர்த்திகள் மட்டுமே. இவ்வாறு பிள்ளையாரைப் பீடிக்க முடியாமல் சனி பகவான் தன்னுடைய பணியில் ஏற்பட்ட குழப்பத்தை நினைத்து மனம் வருந்தி நின்றபோது விநாயகப் பெருமான் தன்னுடைய துதிக்கையை துக்கி அவரை ஆசீர்வதித்து ஆறுதல் கூறினார். அன்று முதல் பிள்ளையாரின் இந்த தரிசனம் சனி பகவானால் பூஜிக்கப்பட்டு மக்களின் துயர் நீக்க வந்த கணபதி பிரசாதமாக அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் எண் கணபதி

பத்மாசன கோலத்தில் அமர்ந்து துதிக்கையில் கும்பம் ஏந்திய கணபதி மூர்த்தி எண் ஒன்பதிற்குரிய இறை மூர்த்தியாவார். மங்கள சக்திகள் பூரணமாய்ப் பொலியும் இந்த இறைக் கோலத்தை தரிசனம் செய்து ஒன்பது சுற்றுகள் உடைய கை முறுக்கு தானம் செய்து வருதலால் பெண்களின் திருமணத் தடங்கல்கள் நீங்கி விரைவில் மண வாழ்வு மலரும். அபாய நிலையில் உள்ள நோயாளிகள் நலம் பெறுவர்.

குசா கணபதி

குசா எண்ணுக்கு உரித்தான மூர்த்தி குசா வாகன மூர்த்தி. பறவை இனத்தில் மயில் குசா சக்திகளைப் பெற்றுள்ளதால் இரண்டு மயில்களை வாகனமாக உடைய ஸ்ரீவைபவ கணபதி மூர்த்தி குசா எண்ணுக்கு உரிய மூர்த்தியாக போற்றப்படுகிறார்.

... சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள்

Friday, January 10, 2014

பரமன் இரகசியம்

தனி தேஜசுடன் சிவலிங்கம் காட்சி தோன்றியது. 
மயிர்க் கூச்செறிந்தது. மனமெல்லாம் சிவன். 
அடியேன் அனுபவித்திருக்கிறேன்.
ஆத்மபூர்வமாக அறிந்தவனுக்கு 
அடுத்தவனிடமிருந்து ஆதாரம் எதற்கு?
... ஸ்ரீநிவாசன்

அடியேன்  வலைப்பூவில் ஆவலுடன் படித்து வரும் நாவல்


" பரம(ன்) இரகசியம் நாவல் "

அன்பு வாசக நண்பர்களுக்கு,

வணக்கம். நீங்கள் ஆவலுடன் படித்து வரும் பரம(ன்) ரகசியம் நாவல் இன்று அச்சு வடிவில் வெளியாகி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். புத்தக வடிவில் வர வேண்டும் என்று பல வாசகர்கள் ஆவல் தெரிவித்திருந்தார்கள். முழு நாவலையும் ஒரே வாசிப்பில் படித்து முடிப்பது திருப்திகரமாக இருக்கும் என்று சிலரும், கணினியில் படிப்பதை விடக் கையில் புத்தகத்தை வைத்துப் படிப்பதில் கிடைக்கும் திருப்தியே அலாதி என்று சிலரும், கணினியில் படிக்கும் வாய்ப்பில்லை என்பதால் புத்தகமாக வெளியிட்டால் தாங்களும் படித்து மகிழ்வோம் என்று இணைய வசதி இல்லாத சிலரும் தெரிவித்திருந்தார்கள். இத்தனை பேருடைய விருப்பமும் இந்த புத்தக வெளியீடு மூலமாக நிறைவேறி உள்ளது.

640 பக்கங்களில், 90 அத்தியாயங்களில், தரமான தாள்களில், கண்களை உறுத்தாத எழுத்துகளில் வெளிவந்துள்ள பரம(ன்) இரகசியம் நாவலின் விலை ரூ550/-

வாசக நண்பர்கள் தங்கள் நல்லாதரவை இந்த நூலிற்குத் தர வேண்டுகிறேன். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். இந்த நாவல் வெற்றிகரமாக அமையுமானால் “அமானுஷ்யன்” நாவலும் அடுத்ததாக புத்தகமாக வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாவல் வழக்கம் போல வியாழன் அன்று இந்த வலைப்பூவில் அப்டேட் ஆகும். புத்தகம் வாங்க முடியாதவர்கள் வாரா வாரம் படித்துக் கொள்ளலாம்.

வாசகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி: 
இந்த விசேஷ மானஸ லிங்கத்திற்கும் உங்களுக்கும் கூட ஏதாவது தொடர்பு இருக்கக்கூடும். கடைசி அத்தியாயம் படிக்கும் போது உங்களுக்கு அது புலப்படலாம். உங்களுக்குள் உறைந்திருக்கும் சக்தி வாய்ந்த விசேஷ மானஸ லிங்கத்தை இந்த நாவல் ஒருவேளை உங்களுக்கு அடையாளம் காட்டக்கூடும்...

ஜனவரி 10 முதல் 22 தேதி வரை நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சி செல்லும் வாசகர்கள் பதிப்பகத்தாரின் ஸ்டால் எண்கள் 51 மற்றும் 52ல் இந்த நாவலையும், என் மற்ற புத்தகங்களையும் நேரில் 10% கழிவுடன் வாங்கிக் கொள்ளலாம்.

நாவல் வாங்க பதிப்பாளரைத் தொடர்பு கொள்ள –
Mobile: 9600123146
email: blackholemedia@gmail.com

BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,
No.7/1 3rd Avenue, Ashok Nagar,
Chennai-600 083
Tel : 044 43054779

Bank Details
Name: blackhole media publication ltd
Indian overseas bank, current/account no:165302000000377
Branch:alandur, chennai
Ifsc code: ioba 0001653

நாவல் முன்னுரையில் இருந்து சில வரிகள்....

.... பலர் இந்த சம்பவங்கள் நிஜமா, சில கதாபாத்திரங்கள் நிஜமான மனிதர்களைச் சுட்டிக் காட்டுகிறதா என்றும் அடிக்கடிக் கேட்டதுண்டு. தனிப்பட்ட நிஜ மனிதர்களை மையமாக வைத்து நான் இந்த நாவலை எழுதவில்லை. சித்தர் உட்பட எல்லா கதாபாத்திரங்களும், இதில் வரும் சம்பவங்களும் கற்பனையே. ஆனால் கதாபாத்திரங்களிலும், சம்பவங்களிலும் உண்மையின் சாயலை நீங்கள் பார்க்க முடியும். அந்த சாயலில் நீங்கள சிலரை அடையாளம் காண்பதாக உணரவும் வாய்ப்புண்டு. அப்படிக் கண்டால் அது தற்செயலானதே!

இந்த நாவலின் விசேஷ மானஸ லிங்கமும் என் தனிக் கற்பனையே. ஆனால் அந்தக் கற்பனையில் மகத்தான உண்மையை நான் கலந்து படைத்திருக்கிறேன். நம்முள்ளே இருக்கக் கூடிய, கடுமையாக முயற்சித்தால் உணரக் கூடிய மகாசக்தியைச் சில கற்பனை பூச்சுக்கள் பூசி இதில் காட்டி இருக்கிறேன்.

இந்த நாவலில் இரண்டு இடங்களில் என்னை மீறிய ஒரு சக்திக்குப் பங்குண்டு. அது என் ஆழ்மன எண்ண வெளிப்பாடா, இல்லை ஏதோ ஒரு வெளிசக்தியா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதை வாசகர்களுக்குத் தெரிவிப்பது நியாயமாக இருக்கும் என்பதால் தெரிவிக்கிறேன்.

ஒன்று விசேஷ மானஸ லிங்கம் குறித்த ஓலைச்சுவடிகளில் ஒரு செய்யுள் போன்ற வரிகளை எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபடி ஒரு நாள் இரவு உறங்கினேன். மறு நாள் காலை செய்யுள் தயாராக என் மனதில் இருந்தது. கதைக்குப் பொருத்தமாய் ஒரு மாபெரும் உண்மையை உள்ளடக்கியதாய் அந்த இருவரிச் செய்யுள் வந்தது எப்படி என்று இன்னும் எனக்கு திகைப்பாகவே இருக்கிறது.

இன்னொன்று விசேஷ மானஸ லிங்கத்தின் முடிவு. நான் ஆரம்பத்தில் வேறொரு முடிவைத் தான் எண்ணி வைத்திருந்தேன். கடைசி நேரத்தில் ஒரு நாள் கனவாய் வந்து மறைந்த காட்சி தான் இந்த நாவலில் விசேஷ மானஸ லிங்கத்தின் கடைசிக் காட்சியாக மாறி விட்டது. விசேஷ மானஸ லிங்கம் கடைசிக் காட்சியில் தன்னை அப்படி எழுதி முடிக்க என்னைப் பணித்ததோ என்று பிரமிப்பும் கூட எனக்கு மிஞ்சுகிறது.....

அன்புடன்
என்.கணேசன்
http://enganeshan.blogspot.in/2014/01/blog-post_8.html

Wednesday, January 8, 2014

குண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை

குண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை

பெரியவாளும் குண்டலிநியும்

இன்னொரு விஷயம், அம்பலப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டிய விஷயம். அதன் பேரைச் சொன்னால்கூட அதுவும் அம்பலப்படுத்துவதுதான் என்பதால் அடியோடேயே பிரஸ்தாபிக்காமல் விட்டு விடணும் என்று இத்தனை நாழி நினைத்துக் கொண்டிருந்ததையும் இப்போது கொஞ்சம் ‘டச்’ பண்ணுகிறேன். [சிரித்து] அதை யாரும் ‘டச்’ பண்ணவேண்டாமென்று ‘வார்ன்’ பண்ணுவதற்கே ‘டச்’ பண்ணுகிறேன். 

ஏனென்றால் நான் சொல்லாவிட்டாலும் அந்தப் பேர் இப்போது ரொம்ப அடிபடுகிறது. குண்டலிநீதான். குண்டலிநீ, அது ஸம்பந்தமான சக்ரங்கள் பேரெல்லாம் இப்போது நன்றாகவே இறைபட்டுக் கொண்டிருக்கின்றன. ‘ஸெளந்தர்ய லஹரி’யிலும் அந்த விஷயங்கள் வருகின்றன. ஆகையினால் அதை நீங்கள் பாராயணம் பண்ணும்போது அந்தப் பேர்களைப் பார்த்துவிட்டு, நான் ‘டச்’ பண்ணா விட்டாலும், வேறே புஸ்தகங்களைப் பார்க்கத்தான் பார்ப்பீர்கள். அதற்கு நாமேதான் சொல்லிவிடலாமே, [சிரித்து] இந்த விஷயத்தை நான் ஏன் சொல்லப் போவதில்லை என்று சொல்லிவிடலாமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

ஒரு சின்ன அணுவுக்குள்ளே எப்படி ஒரு பெரிய சக்தியை அடைத்து வைத்திருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் பரப்ரஹ்ம சக்தி குண்டலிநீ என்ற சக்தியாக இருக்கிறது; அது நம்மைப் போன்றவர்களிடம் தூங்குகிற மாதிரி ஸ்திதியில் இருக்கிறது; அதற்கான யோக ஸாதனை பண்ணினால், – பண்ணினால் என்பதை ‘அன்டர்லைன்’ பண்ணணும் – அப்படி [ஸாதனை] பண்ணினால் அது கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புப் பெற்றுச் சில சக்ரங்கள் வழியாக ஊர்த்வ முகமாக [மேல் நோக்கி] ஸஞ்சாரம் பண்ணி முடிவில் பராசக்தியாகப் பூர்ண விழிப்புப் பெற்று, அப்புறம் அந்த பராசக்தியும் பரசிவத்தோடு ஐக்யமாகி ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் ஏற்படும் – என்பதுதான் ஸாரமான விஷயம். இதைத் தெரிந்து கொண்டால் போதும்; இவ்வளவு தெரிந்து கொண்டால் போதும்.

நம் தேசத்தில் எப்பேர்ப்பட்ட சாஸ்திரங்கள், உபாஸனா மார்க்கங்கள் இருக்கின்றன என்று ஒரு அரிச்சுவடியாவது தெரிந்தால்தானே இதிலே பிறந்திருக்கிற நமக்குக் குறைவு இல்லாமல் இருக்கும்? அதற்காகத்தான் குண்டலிநீ யோகம் என்று இப்படியரு சாஸ்திரம் இருக்கிறது என்று நான் இப்போது சொன்னேனே, அந்த அளவுக்குத் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மேல் வேண்டாம். அது அவசியமில்லை.

ஏனென்றால் நம்மிலே ஆயிரத்தில் ஒருவர் – இல்லை, லக்ஷம் பத்து லக்ஷத்தில் ஒருவர் கூட முறைப்படி அந்த ஸாதனை பண்ணுவதற்கு முடியாது. அப்படியே பண்ணினாலும் முறைப்படி முன்னேறி ஸித்தி அடைகிறது ஸாதகர்களிலும் அபூர்வமாக இரண்டொருத்தரால்தான் முடியும் – ”யததாமபி கச்சிந்” என்று பகவான் சொன்னாற் போல. அதனால்தான் ‘அதற்கான யோக ஸாதனை பண்ணினால்’ என்று அழுத்திச் சொன்னது. ‘பண்ணினால்’ என்பது ஸரி. ஆனால் பண்ணுவதுதான் முடியாத கார்யம்!

இந்த ஜீவாத்மாவின் சின்ன சக்தி பரமாத்மாவின் மஹாசக்தியிலே கலப்பது – அல்லது அந்த மஹாசக்தியாகத் தானே விகஸிப்பது [மலர்வது] – லேசில் நடக்கிற விஷயமில்லை.
சாந்தத்திலே ஒன்றாகக் கலந்து ப்ரஹ்மமாவதை விடவும் சக்தியிலே கலப்பதைக் கஷ்டமானதாகவே அந்தப் பராசக்தி வைத்துக் கொண்டிருக்கிறாள்!
பக்தி பண்ணுகிறவனையும், ஞான வழியில் போகிற, வனையுங்கூடத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தன்னுடைய சக்திக் கூத்தைப் பார்க்கும்படியும், அதை அவர்கள் வழியாகவும் கொஞ்சம் செலுத்தி அவர்களால் லோகத்துக்கு அநுக்ரஹம் கிடைக்கும்படியும் அவள் பண்ணுவதுண்டுதான்.

ஆனாலும் இவர்கள் [பக்தரும், ஞானியும்] தாங்களாகச் சக்திக்கு ஆசைப்படவில்லை. பக்தன் ப்ரேமைக்கு, ப்ரேமானந்தத்திற்குத்தான் ஆசைப்படுகிறான். அப்படிப்பட்டவர்களிடம், அவளே, ‘பார்த்தாயா என் சக்தி ப்ரபாவம்! என்று ‘போனஸ்’ மாதிரி அதைக் காட்டிக் கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்கும் அதை, லோக கல்யாணத்தை உத்தேசித்து, தருகிறாள். ஆனால், யோகி என்கிறவன் சக்தியில் ஸித்தியாவதற்கே குண்டலிநீ யோகம் என்று பண்ணும்போது, [சிரித்து] அவள் இல்லாத கிராக்கியெல்லாம் பண்ணிக்கொண்டு அப்புறந்தான் கொஞ்சங் கொஞ்சமாக ஏதோ இண்டு இடுக்கு வழியாகத் தன் சக்தியை அவிழ்த்து விடுகிறாள். 

இன்றைக்கு குண்டலிநீ தீக்ஷை பல பேர் கொடுத்து, பெற்றுக் கொண்டவர்களிடம் தூங்குகிற குண்டலிநீ முழித்துக் கொண்டுவிட்டதாகச் சொல்வதெல்லாம் இந்த இண்டு இடுக்குக் கீற்று வெளிப்படுவதுதானே யொழிய பூர்ணமான சக்தி ஜ்யோதிஸ் ஸூர்யோதயத்தைப் போல வெளிப்படுவது இல்லை.  

அரைத் தூக்கம், கால் தூக்கம் என்று சொல்கிறோமே, அப்படி ஸாதாரணமாக நமக்குள் எல்லாம் முக்காலே மூணு வீசம் தூக்கத்துக்கும் மேலே ப்ராண சக்தி ரூபத்தில் பராசக்தி தூங்கிக்கொண்டிருக்கிறாளென்றால், குண்டலிநீ தீக்ஷையாகி, அது ‘ரைஸ்’ ஆகிவிட்டது என்று சொல்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் முக்கால் தூக்கம் என்கிற அளவுக்கு நம்மைவிடக் கொஞ்சம் முழித்துக் கொண்டிருப்பாள்!

அவ்வளவுதான். அதிலேயே [இந்தக் குறைந்த அளவு மலர்ச்சியிலேயே] உச்சந்தலை வரை ஒரு வைப்ரேஷன், ப்ரூமத்தியில் [புருவ மத்தியில்] ஒரு கான்ஸன்ட்ரேஷன் அப்போதப்போது உண்டாவதை வைத்துக்கொண்டு, குண்டலிநீ பூர்ணமாக முழித்துக்கொண்டு லக்ஷ்யமான உச்சிக் சக்ரத்திற்குப் போய்விட்ட மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாஸ்தவத்தில் ஏதோ கொஞ்சம் சக்தி, கொஞ்சம் ஏறுவது, மறுபடி விழுவது என்றுதான் நடக்கிறது. ஏறும்போதும் அங்கங்கே உண்டாகிற அத்புத சக்திகளில் (ஸித்திகளில், சித்து என்று சொல்வது இந்த சக்திகளைத்தான். அப்படிப்பட்ட சக்திகளில்) சித்தத்தை அலைபாய விடாமல், லக்ஷ்யத்திலேயே ஈடுபடுத்துவது ஸாமான்யமான ஸாதனை இல்லை.

அவளேதான் இப்படிப்பட்ட சின்ன ஸித்திகளைக் கொடுத்து பெரிய, முடிவான ஸித்தியிலிருந்து டிஸ்ட்ராக்ட் பண்ணி மயக்குவது. இதெல்லாம் போதாதென்று குண்டலிநீ ஸஞ்சாரம் அதற்கான வழியில் போகாமல் இசகு பிசகாகப் போனால் பலவிதமான வியாதிகள், புத்திக் கலக்கம் ஏற்படுவது வேறே.

லோகத்தில் பலவிதமான மாயைகள், மாயையிலிருந்து மீளுவதற்குப் பலவிதமான ஸாதனைகள் என்று அவள் பரப்பி வைத்திருப்பதில் நேரே அவளுடைய சக்தியைப் பிடிப்பது என்பதற்காக் குண்டலிநீ யோகம் என்று ஒரு ஸாதனையை வைத்திருக்கும்போது அதிலேயே நிறைய மாயையையும் பிசைந்து வைத்திருக்கிறாள்.

ஏன் அப்படி என்றால் என்ன சொல்வது?

ஒரு பயிர் ஸுலபத்தில் பயிர் பண்ணி மகசூல் காணும்படி இருக்கிறது. இன்னொரு பயிருக்கு ஏற்ற நிலம், சீதோஷ்ணம், எரு ஆகிய எல்லாமே கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஏனென்று கேட்டால் என்ன பதில் சொல்வது? பல தினுஸாக அவள் லீலா நாடகம் ஆடுவதில் இதெல்லாம் அங்கம். அப்படி குண்டலிநீ யோக ஸாதனை என்பதை ரொம்பவும் சிரம ஸாத்யமாகவே வைத்திருக்கிறாள்.

‘பக்தி, ஞான மார்க்கங்களில் போகிறவர்கள் மட்டும் ஸுலபமாக ஸித்தி அடைந்து பிரத்யக்ஷதரிசனமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ பெற்றுவிடுகிறார்களோ என்ன? ‘என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. ஆனாலும் எந்த அளவுக்கு அவர்கள் ஸாதனை பண்ணியிருந்தாலும், பண்ணுகிற மட்டும் அது [குண்டலிநீ யோகம் போல] இத்தனை ச்ரமமாகவோ, சிக்கலாகவோ இருப்பதில்லை.

அதோடுகூட ஸாதனையில் தப்பு ஏற்படுவதால் இத்தனை விபரீதமாகவும் அவற்றில் நடந்துவிடுவதில்லை. காம யோகத்தைப் பற்றி – அதாவது பலனில் பற்று வைக்காமல் ஸ்வதர்மமான கடமைகளை ஈச்வரார்ப்பணமாகப் பண்ணுவதைப் பற்றி – பகவான் சொல்லியிருப்பதெல்லாம் பக்தி, ஞான யோகங்களுக்கும் பெரும்பாலும் பொருந்துவதுதான். ‘யோகம்’ என்றாலே நினைக்கப்படும் குண்டலிநீ முதலான மார்க்கங்களுக்குத்தான் அது அவ்வளவாகப் பொருந்தாமலிருக்கிறது.

என்ன சொல்கிறாரென்றால்,
நேஹாபிக்ரம நாசோஸ்தி ப்ரத்ய்வாயோ ந வித்யதே *
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் **
என்கிறார்.

என்ன அர்த்தமென்றால் ‘இந்த வழியில் நாம் பண்ணும் முயற்சி பலன் தராமல் வீணாகப் போவது என்பது இல்லை. ஏறுமாறாக, விபரீதமாகப் பலன் ஏற்படுவது என்பதும் இல்லை. ஏதோ ஸ்வல்பம்தான் ஸாதனை பண்ணினாலுங்கூட ஸரி, ‘நமக்கு ஸம்ஸாரத்திலிருந்து விடிவே இல்லையோ?’ என்கிற பெரிய பயத்திலிருந்து அது நம்மை ரக்ஷித்து விடும்’ என்கிறார்.

ஆனால் குண்டலிநீ மாதிரி ரொம்பவும் சிரமமாக, சிக்கலாக உள்ள ஒரு ஸாதனையில் போக ஆரம்பிக்கிறவர்களில் பலபேர் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு அப்புறம், ‘நம்மால் இதில் ஜயிக்க முடியாது’ என்று விட்டு விடுவதைப் பார்க்கிறோம். என் கிட்டேயே வந்து எத்தனையோ பேர் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது ‘அபிக்ரம நாசம்’- ‘முயற்சி வீணாவது’- என்று பகவான் சொன்னது நடந்துவிடுகிறது. ‘ப்ரத்யவாயம்’- ‘விபரீத பலன்’- உண்டாவது என்கிறாரே, அதற்கும் இந்த வழி நிறையவே இடம் கொடுக்கிறது. நடுவாந்தரத்தில் ”விட்டுவிடுகிறேன்”என்று இவர்கள் வருவதற்கே முக்யமாக அதுதான் காரணமாயிருக்கிறது. கடைசி வரையில் பயமும் போக இடமில்லை. ‘ஸரியாகப் பண்ணி பலன் பெறுவோமா, அல்லது இசகு பிசகாக ஆகிவிடுமா?’என்ற பயம். அது மட்டுமில்லாமல் நடுவாந்தரப் பலன்களாகச் சில அத்புத சக்திகள் கிடைப்பதே பெரிய பலனைக் கோட்டைவிடும்படி திசை திருப்பிவிடுமோ என்ற பயம்! ஸ்வல்பம் அநுஷ்டித்தாலும் பயத்தைப் போக்கும் என்று பகவான் சொன்னது இந்த வழிக்கு ஏற்கவில்லை.

அதோடு பகவான் சொல்லாத இன்னொன்றும் இதில் சேருகிறது. என்னவென்றால், ஸாதனை பலிக்குமா என்று கடைசி மட்டும் பயம் ஒரு பக்கம் இருக்கிறதென்றால் இன்னொரு பக்கம் ஏதோ ஸ்வல்ப பலன் கிடைத்ததிலேயே தாங்கள் முடிவான ஸித்தி அடைந்து விட்டதாக ஏமாந்து போவதும் இதில் இருக்கிறது. பக்தி பண்ணுகிறவர்களும், ஞான விசாரம் பண்ணுகிறவர்களும் தங்களுக்கு நிஜமாகவே தெய்வ ஸாக்ஷாத்காரமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ ஏற்படுகிற வகையில் அவை ஏற்பட்டு விட்டதாக நினைப்பதற்கில்லை.

ஆனால் குண்டலிநீ பண்ணுபவர்கள் ஏதோ கொஞ்சம் சக்ரங்களில் சலனம் ஏற்பட்டு விட்டால்கூட ஸித்தியாகி விட்டதாக நினைத்து விடுகிறார்கள் – தூரக்க [தூரத்தில்] அவுட்லைனாக கோபுரம் தெரிவதைப் பார்த்தே கர்பக்ருஹத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிற மாதிரி!

நான் குண்டலிநீ யோகம் தப்பு வழி என்று சொல்லவேயில்லை. நிச்சயமாக அத்வைத ஸமாதிவரை கொண்டு சேர்க்கக் கூடிய உசந்த வழிதான். இல்லாவிட்டால் யோகீச்வரர்கள், ரிஷிகள் இப்படியரு சாஸ்திரத்தைக் கொடுத்திருப்பார்களா? அதெல்லாவற்றையும்விட, நம்முடைய ஆசார்யாள் அந்த விவரங்கள் சொல்லியிருப்பாரா? வழி ஸரிதான். ஆனால் அந்த வழியிலே போகிற அளவுக்கு நாம் ஸரியாயில்லை என்பதாலேயே, தீரர்களாக இருக்கப்பட்ட யாரோ சில பேரைத் தவிர, நமக்கு அது வேண்டாம் என்கிறேன்.

ஸித்தி பெற்ற குருவின் இடைவிடாத கண்காணிப்பிலேயே விடமுயற்சியுடன் பரிச்ரமப்பட்டு அப்யஸிக்க வேண்டிய ஒரு வழியைப் பற்றிச் சும்மாவுக்காக எதற்காகப் பேசவேண்டும் என்பதால் சொல்கிறேன்.

நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்? நம்மால் முடிந்த முயற்சிகளைப் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்ள என்ன வழி என்று ஆலோசனை பண்ணத்தான். அப்படியிருக்கும் போது நம்மால் முடியாத முயற்சிகளைப் பற்றிப் பேசி எதற்காகப் பொழுதை வீணாக்க வேண்டும்? முடியாத முயற்சி என்பதோடு அவசியமும் இல்லாத ஸமாசாரம். பக்தியாலோ, ஞானத்தாலோ அடைய முடியாத நிறைவு எதையும் குண்டலிநீயால் அடைந்தவிட முடியாது. ஆகையால் முடியாத, அவசியமில்லாத அந்த வழியைப் பற்றி விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். 

காஞ்சீபுரத்திற்கு வழி கேட்டால், நாம் ஸுலபமாகப் போய்ச் சேரும்படி, ‘இப்படியிப்படி ப்ராட்வேயிலிருந்து பஸ் இருக்கு. பீச்சிலிருந்து ரயில் இருக்கு’ என்று சொன்னால் அர்த்தமுண்டு. ‘திருவொற்றியூரிலிந்து காஞ்சீபுரம் வரை பல்லவராஜா காலத்தில் போட்ட அன்டர்-க்ரவுன்ட் டன்னல் இருக்கு. அங்கங்கே தூர்ந்து போயிருக்கும். அந்த வழியாகப் போகலாம்’ என்றால் அர்த்தமுண்டா? வாஸ்தவமாகவே அப்படியும் வழி இருக்கலாம் – வாஸ்தவத்தில் இல்லைதான்; ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் – டன்னல் இருக்கலாம். அதிலே துணிச்சலோடு போகிற ஸாஹஸக்காரர்களும் இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி வழி கேட்கிற ஸாதாரண ஜனங்களுக்குச் சொல்லி என்ன ப்ரயோஜனம்?

ஸர் ஜான் உட்ராஃப் [குண்டலிநீ யோகம் குறித்து] ‘ஸர்பென்ட் பவர்’ முதலான புஸ்தகங்கள் போட்டாலும் போட்டார், வகை தொகையில்லாமல் அதில் ஸித்தியான யோகிகள் என்று பல பேர் தோன்றி ‘க்ளாஸ்’ நடத்துவதும், இன்னும் பல பேர் ஒரு அப்யாஸமும் பண்ணாமலே, பண்ணும் உத்தேசமும் இல்லாமலே, ‘மூலாதாரா, ஸஹஸ்ராரா’ என்றெல்லாம் எழுதி, பொது ஜனங்களிலும் பல பேர் தாங்களும் விஷயம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும் ஆகியிருக்கிறது.

எல்லாரும் பேசுகிறதாக ஆகியிருதாலும், பண்ணமுடியுமா-ஸரியாக, அதற்கான கட்டுப்பாடுகளோடு, விடாமுயற்சியோடு ஒரு பெரிய பவர் ரிலீஸாகிறதைப் பக்குவமாகத் தாங்கிக் கொள்கிற தைர்யத்தோடு பண்ண முடியுமா – கடைசிப் படிவரை டிஸ்ட்ராக்ஷன் இல்லாமல் பண்ணிக் கொண்டு போய் ஜயிக்க முடியுமா என்கிறது பெரிய கேள்வியாக இருக்கிறது. சும்மாவுக்காக அதைப் பற்றி பேசுவது புரளிதான். அதைவிட விபரீதம், சும்மாவுக்காகப் பேசுவதாக இல்லாமல் தப்பும் தாறுமாகப் பண்ணிப் பார்த்துப் பல தினுஸான கஷ்டங்களுக்கு, ப்ரமைகளுக்கு ஆளாகிறது.

அதனால்தான் இந்த ஸப்ஜெக்டில் இறங்க நான் ப்ரியப்படுவதில்லை. ஆனாலும் ”ஸெளந்தர்ய லஹரிக்கு அர்த்தம் சொல்றேண்டா!” என்று ஆரம்பித்து விட்டு, இதை அப்படியே மூடி மறைப்பதென்று பண்ணப் பார்த்தால் நீங்கள் வேறே வழியில் தூக்கிப் பார்க்கத்தான் செய்வீர்களென்பதால் என் அபிப்ராயத்தை இளக்கிக் கொண்டு ப்ரஸ்தாபம் பண்ணுகிறேன்;’ வார்னிங்’கோடு சேர்த்தே ப்ரஸ்தாபிக்கிறேன்….

உட்ராஃபை நான் குற்றம் சொல்லவேயில்லை. ‘தாங்க்’ தான் பண்ணுகிறேன். ‘யோக சக்தி, யோக ஸித்தி என்பதெல்லாமே பொய். எங்கள் ஸயன்ஸுக்குப் பிடிபடாததாக அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது’ என்று மேல் நாட்டார்களும், அவர்கள் சொல்வதையே வேத வாக்காக எடுத்துக்கொண்ட நம்மவர்களும் சொல்லி வந்தபோது உட்ராஃப்தான் அது ஸத்யமானது, ஸயன்ஸுக்கு மேலான ஸூபர்ஸயன்ஸாக இப்படியிப்படி ஆகப்பட்ட ஒழுங்கில் அதன் கார்யக்ரமம் இருக்கிறது என்று விளக்கமாக எழுதி எல்லார் கண்ணையும் திறந்து வைத்தார். அவர் அப்படிப் பிரசாரம் பண்ணியில்லா விட்டால், நிஜமாகவே அந்த மார்க்கத்துக்கு அதிகாரிகளாக இருக்கப்பட்டவர்கள்கூட அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மார்க்கம் மங்கிப் போயிருந்தது.

அவர் எழுதினதில் நம்பிக்கை உண்டாக்கித்தான் பல பேர் அப்போது நிஜமாகவே யோக ஸித்தி பெற்றிருந்த யோகிகளிடம் போய் அந்த வழியைக் கற்றுக்கொண்டு, அதற்கப்புறம் மங்கிப் போன வழிக்குப் பிரகாசமான காலம் பிறந்தது. இன்றைக்கு வரை நல்ல யோக ஸித்தர்களும் உண்டாகாமலில்லை. அவர்களிடம் முறைப்படி கற்றுக் கொண்டு, முன்னேறும் ஸாதகர்களும் இல்லாமலில்லை. ஆனாலும் போலிகளும் சேர்வது, பிரகாசம் என்றேனே, அது கண்ணைக் குத்தும் அளவுக்கு வெறும் பேச்சில் மட்டும் பளபளப்பது என்றெல்லாமும் நிறைய ஆகியிருக்கிறது. இதைப் பார்க்கும்போதுதான் ஆத்மாவுக்கு நல்லதைத் தேடிக்கொண்டு போக்க வேண்டிய பொழுதை நாம் அப்யாஸம் பண்ணுவதாக இல்லாத ஒரு வழியைப் பற்றிய பேசி விருதாவாக்குவானேன் என்று தோன்றி [இதுவரை தெரிவித்த அபிப்ராயத்தை]ச் சொன்னேன்.

இவ்வளவு சொன்னதாலேயே, அதில் சிலருக்கு இன்ட்ரெஸ்ட் உண்டாக்கியிருப்பேனோ என்னவோ? அதனால் ஒரு தடவைக்குப் பல தடவையாகப் எச்சரிக்கிறேன்: ‘நிச்சயமாக ஸித்தியானவர் எந்தவிதமான ஸொந்த ஆதாயத்தையும் கருதாதவர், சிஷ்யர்களைக் கைவிடாமல் கண்காணித்து மேலே மேலே அழைத்துப் போகக் கூடியவர் என்று உறுதியாக நம்பக்கூடிய ஸத்குரு கிடைத்தாலொழிய யாரும் ஸ்வயமாகவோ, அல்லது இப்போது எங்கே பார்த்தாலும் புறப்பட்டிருக்கிற அநேகம் யோகிகள் என்கிறவர்களிடம் போயோ இந்த யோகத்தை அப்யாஸம் பண்ணப்படாது. இது அதிஜாக்ரதை தேவைப்படுகிற ஸமாசாரம்’ என்று எச்சரிக்கை பண்ணுகிறேன்.

இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் மந்த்ர யோகத்திலும் ஜாக்ரதையாகவே இருக்கவேண்டும். குண்டலிநீ யோக ரிஸல்ட்களையே மந்த்ர யோகமும் சப்தங்களினால் உண்டாகிற நாடி சலனங்களின் மூலம் உண்டு பண்ணுவதுண்டு. குருமுக உபதேசம் இங்கேயும் அத்யாவசியமானது. இந்தக் காரணங்களால் மந்த்ர சாஸ்திர ஸமாசாரங்களையும் உபாஸகர்கள், அல்லது ச்ரத்தையாக உபாஸிக்க வேண்டுமென்று இருப்பவர்கள் தவிரப் பொத்தம் பொதுவில் விஸ்தாரம் செய்வது உசிதமில்லை.

க்ரமமாக உபதேசமில்லாமல் மந்திரங்களைத் தெரிந்து கொள்வதால் ஒரு ப்ரயோஜனமுமில்லை. வீட்டுக்குள்ளே உசந்த ஒயர், ஸ்விட்ச், ‘இம்போர்ட் பண்ணின பல்பு எல்லாம் போட்டாலும் பவர்ஹவுஸிலிருந்து கனெக்ஷன் இல்லாமல் விளக்கு எரியுமா? அப்படித்தான் குருவின் பவர் – உயிர் பவர் – இல்லாமல் மந்த்ர சப்தங்களை ஸ்வயமாக எடுத்துக் கொள்வதும்.

ஒரு ப்ரயோஜனமும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. சப்த வீர்யம் முறையாக க்ரஹிக்கப்படாவிட்டால் விபரீத பலனும் உண்டாகலாம். 

அதனால் உதாரணத்தை மாற்றிச் சொல்கிறேன்: மந்த்ர சப்தங்களே எலெக்ட்ரிஸிடி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நாமே போய்த் தொட்டு வெளிச்சத்தைக் கொண்டுவர முடியுமா? ‘ஷாக்’தான் அடித்துக் கஷ்டப்படுவோம். குரு என்ற ஒயர் வழியாக உபதேசம் என்ற பல்பில் வந்தால்தான் மின்சார வீர்யம் கட்டுப்பாட்டில் வந்து வெளிச்சம் கிடைக்கும்.

எலெக்ட்ரிஸிடி எங்கேயிருக்கிறதென்றே தெரியாமல் ஒயருக்குள் வருகிறது போல ரஹஸ்யமாகவே மந்த்ரமும் வரவேண்டும்.

... Courtesy:  http://mahasakthipeetam.wordpress.com/