Sunday, October 18, 2015

எந்த காரியத்துக்கும் ராமாயண பாராயணம்

...

வால்மீகி முனிவர் அருளிய ஸ்ரீமத் ராமாயணத்திலுள்ள ஒவ்வொரு காண்டத்திலும் சிற்சில ஸர்க்கங்களை பாராயணம் செய்தால் ஒவ்வொரு காரியமும் சுலபமாக நிறைவேறும் என்று கூறப்பட்டுள்ளது.

திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க ' பாலகாண்டத்தில் சீதா கல்யாணத்தை ' காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக ' பாலகாண்டத்தில் புத்திர காமேஷ்டி பாயாஸதான பாராயண கட்டத்தை ' பாராயணம் செய்ய வேண்டும்.

சுகப்பிரசவத்திற்கு ' பாலகாண்டத்தில் ஸ்ரீ ராமாவதாரத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

கெட்ட வழியில் செல்லும் பிள்ளை திருந்தி வாழ ' அயோத்யா காண்டத்தில் கௌசல்யா ராமா ஸம்வாதத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

அரச காரியங்களiல் வெற்றி கிட்ட ' அயோத்யா காண்டத்தில் ராஜதர்மங்களை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

ஏவல், பில்லி, பேய், பிசாசு நீங்க ' சுந்தர காண்டத்தில் லங்கா விஜயத்தை ' மாலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

பித்தம் தெளிய ' சுந்தர காண்டத்தில் ஹுனுமத் சிந்தையை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

தரித்திரம் நீங்க ' சுந்தர காண்டத்தில் சீதா தரிசனத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

பிரிந்தவர் சேர ' சுந்தர காண்டத்தில் அங்குலீயக பிரதானத்தை ' காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

கெட்ட கனவுகள் வராமலிருக்க ' சுந்தர காண்டத்தில் திரிஜடை ஸ்வப்னத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

தெய்வ குற்றம் நீங்க ' சுந்தர காண்டத்தில் காகாசுர விருத்தாந்தத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

ஆபத்து நீங்க ' யுத்த காண்டத்தில் வீபிஷண சரணாகதியை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

சிறை பயம் நீங்க ' யுத்த காண்டத்தில் வீபிஷணன் சீதையை ஸ்ரீ ராமரிடம் சேர்த்ததை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

மறு பிறவியில் சகல சுகம் பெற ' யுத்த காண்டத்தில் ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

குஷ்டம் போன்ற நோய்கள் தீர ' யுத்த காண்டத்தில் ராவண கிரீட பங்கத்தை ' காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

துன்பம் நீங்க ' யுத்த காண்டத்தில் சீதா ஆஞ்சநேய ஸம்வாதத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

மோட்ச பலன் கிடைக்க ' ஆரண்ய காண்டத்தில் ஜடாயு மோட்சத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

தொழிலில் இலாபம் அடைய ' அயோத்யா காண்டத்தில் யாத்ரா தானத்தை ' காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.


நன்றி: தண்டாயுதபாணி ஜோதிடர் எழுதிய "வேதங்கள் கூறும் வாழ்க்கை ரகசியம் எது? எது? "


No comments:

Post a Comment