Thursday, November 26, 2015

சுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி



எல்லோரும் இன்புற்று வாழ வேண்டிக் கொண்டு........

"சத்ரு சம்ஹார யாகம்" முதன் முதலில் பஞ்சேஷ்டியில் அகத்தியரால், முருகரின் உத்தரவால், அம்பாளின் அருகாமையில், அகத்தியப் பெருமானால் நடத்தப்பட்டது. அதில் எத்தனையோ விதமான மந்திரங்கள் கூறப்பட்டாலும், முதன்மை வகித்து, எண்ணம் ஈடேற வைத்தது "சுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி" எனப்படுகிற சுலோகம்தான்.

இந்த மந்திரத்தை, ஜெபிப்பதால், அல்லது கேட்பதால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். எல்லாம் ஜெயமாகும்.

உங்கள் இல்லங்களில், தினமும் இது ஒலிக்கட்டும், இறை அருள், அகத்தியப் பெருமான் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.


சுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி ...

@ Google Drive
https://drive.google.com/file/d/0B10OjrXcMx0iTTFwYmFLdWRxNWM/view?usp=sharing

@ Mediafire
http://www.mediafire.com/?i3eand1wtlsdvai



முருகரை பற்றி சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறியதாவது ...

நம் குமாரனே எல்லா தேவ வடிவும் (சமஷ்டி தேவதை). எல்லா உலக வடிவும் (சமஷ்டி பிரபஞ்சமும்), எல்லா உயிர்களின் வடிவமும் (விராட் ரூபி) ஆக விளங்குகிறான். அதனால் அவனே சாக்ஷாத்கார பிரம்மமாவான்!
ருத்திர கோடிகள் அளவற்றவையில் இவனே மஹா சம்ஹார காரண ருத்திரன்.

இவனே ஸ்ரீகண்ட ருத்திரக் கடவுளின் சக்தியான மஹா விஷ்ணு.

மஹா விஷ்ணுவின் நான்கு மூர்த்தங்களில், இவன் வாசுதேவ மூர்த்தி,

எல்லா பிரஜாபதிகளுக்கும் இவன் பிரமன்.

ஒளியுள்ள பொருட்களில் இவன் அக்னி தேவன்.

திக் பாலகர்களில் இவன் "ஈசானன்".

அக்னியில் "சிவாக்னி"

அக்ஷரங்களில் பஞ்சாக்ஷரம்.

வித்யைகளில் பர வித்யை.

யோகங்களில் அஷ்டாங்க யோகம்.

ஞானங்களில் இவன் சிவ ஞானம்.



ஆண்டியாகப் போன முருகரிடம் சிவபெருமான் அன்புடன் கூறியது .....

"மைந்தா! நானும், சக்தியும் நீயன்றோ! தத்வமசி வாக்கியப் பொருள் நீ என்ற படி, என்னுடைய ஐந்து முகங்களும், தேவியின் ஒரு முகமும் சேர்த்து உனக்கு ஆறு முகங்களாயிற்று! என்னைக் குறித்து செய்யப்படும் வழிபாடும், நின் அன்னையைக் குறித்து செய்யப்படும் பூஜையும் உனக்கேயாகும். உன்னை பூஜித்தவர் எங்கள் இருவரையும் பூஜித்தவராகிறார்."



​இருதயம் என்பது ஒரு குளம். அதுவே "சரவணப் பொய்கை". இக்குளம் நாடிகளாகிய வாய்க்கால்கள் மூலமாகவே ரத்தத்தை உடல் முழுவதும் பரப்புகிறது. இந்த குளத்தின் நீரே ரத்தம். ஆசாபாசங்களும், ஆணவாதிகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் இக்குளம் தூய்மையாகவே இருக்கும். ஆசாபாசங்களே இக்குளத்தில் பாசியாகப் படர்ந்துள்ளது. இவைகளை நீக்கி தெய்வ பக்தியை இதயத்தில் ஏற்றிவிட்டால் அதுவே பேரின்ப வாழ்வு. அந்த இருதய சரவணப் பொய்கையில் விளையாடுபவன் முருகன்.

இக்குளத்தை சுத்தம் செய்து நல்ல எண்ணங்கள் மூலம் தன்னை நினைப்பவனை "தன்" வண்ணமாக்குவது தெய்வத்தின் இயல்பு. நம் நினைவு ரத்தத்தையே முதலில் சேருகிறது. நல்ல நினைவுள்ளவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

இதையே ஒரு சித்தர்
குறவன் குடிசை புகுந்தாண்டி
கோமாட்டி எச்சில் உமிழ்ந்தாண்டி
என்கிறார்.

மானிட சரீரமே குறவன் குடிசை. குறப்பெண்ணை கைபிடித்த குறவனான முருகனை அழைத்தால் அவன் அதில் குடியேறுவான். ஆசாபாசங்களை, ஆணவத்தை அறுத்த உடல், நாமத்தை சொல்லும் நாவில் ஊரும் எச்சில் கங்கயாகிவிடுகிறது. அத்தகைய அன்பர்கள் நாவில் அவன் விளையாடுகிறான். நாமமே முருகனின் சரீரம். சப்தமே அவன் சரீரமானபடியால் நாமத்தை சொல்லும்பொழுது சப்தத்துடன் அவனை அனுபவிக்கிறோம்.



நம் புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்ச்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கிறது. இந்த ஜோதி மணியை "சண்முகம்" என்பர் பெரியோர்.

இதன்றி, நம் மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடம் தாண்டி அநாகதமாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கிறது. இதை "சுப்ரமண்யம்" என்பார்கள்.

இந்த தேகத்திலுள்ள ஆறறிவும், ஆறு ஆதாரங்களிலும் உள்ள ஆறு பிரகாசத்தையும் "சண்முகம்" என்பார்கள்.

நம் மனம் ஒரு குகை போன்றது. குகை எப்போதும் இருந்திருக்கும். அந்த இருட்டில் ஒரு ஜோதியாக முருகன் விளங்குகிறான். அதனாலேயே அவனுக்கு "குகன்" என்ற பெயர் ஏற்பட்டது. "குஹ்யம்" என்ற சொல்லுக்கு "மிக ரகசியமானது" என்று பொருள். சாமானியர்களால் அறிய முடியாக ரகசியமாக அவன் இருப்பதால் "குகன்" என்ற பெயர் பெற்றான் என்றும் கூறுவார்.

வள்ளி, தேவசேனா இருவரின் தத்துவத்தை; நம் பக்தி உண்மையாய் இருக்க, ஞானத்தை (இறைவனை) தேடி சென்றால் இறை தரிசனம் கிட்டும் என்பதை தேவசேனாவை மணந்தது வழியாகவும், எளிய உண்மை பக்தியுடன் இருந்தால் அவனே நம்மை தேடி வந்து அருள் புரிவான் என்பதற்கு வள்ளியை தேடி வந்து மணம்புரிந்த நிகழ்ச்சியையும் கூறுகிறார்கள்.

தேவர்கள் வேண்டுதலின்படி, பரமேஸ்வரன், தனக்குள்ள ஐந்து முகத்துடன், அம்பிகை முகத்தையும் கொண்டு, ஆறுமுகமாக அவதரித்தார்.

மண்ணெல்லாம் ஒன்றாய் சேர்ந்து திரண்டு விண்ணில் சேரவேண்டுமென்று மேலே எழும்பியது மலை ஆனது. விண்ணாகிய தெய்வீக ஜோதியை காணவேண்டும் என்கிற உணர்ச்சியை எழுப்புவதே "மலையின்" தத்துவம். அதன் உச்சியில் இருக்கிற "ஞானமே முருகன்". அதனால் தான் குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றார்கள்.

தேகத்தை சுத்தமாகச் செய்துவிட்டால், அதிலுள்ள ஆவியை தன் குடியாக்கிக் கொள்கிறான் முருகன். அதுவே திருவாவினன்குடி தத்துவம்.
முருகா என்று வாயினால் மட்டும் சொன்னால் போதாது. அந்த நாமம் ரத்தாசயத்துடன் கலக்க வேண்டும். இப்படி செய்தால், நம் வாயிலிருந்து வரும் வாக்கே "சத்திய வாக்காகி" விடும்.



"சரவணபவ" என்கிற மந்திரத்துக்கு முன் ...

"ஓம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் தானாகவே நாடிவரும் முக்தியை பெற்றுக் கொள்கின்றனர்.

"ஓம் ஹ்ரீம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் அறியாமை நீங்கப் பெறுவார்கள்.

"ஓம் க்லீம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் மன்மதனைப் போல விளங்குவார்கள்.

"ஓம் ஐம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் கவிதை இயற்றும் புலவர்களாவார்கள்.

"ஓம் ஸ்ரீம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் தாபங்கள் தீர்த்து இன்பக்கடலில் திளைப்பார்கள்.



"சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு
செவி மீதிலும் பகர் செய் குருநாதா"

என்று பெரியவர்கள் எப்போதும் வேண்டிக் கொள்வார்கள்.



ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய "ஸப்ரஹுமண்ய புஜங்கம்"
Śrī Subrahmanya Bhujangam by Adi Shankara Acharya.

http://murugan.org/texts/bhujangam.htm

http://sanskritdocuments.org/doc_subrahmanya/subrabhujanga.html?lang=sa



"சுப்ரமண்ய சஹஸ்ரநாமாவளி"

http://sanskritdocuments.org/doc_subrahmanya/subrahmaNyasahasranAmastotra.html?lang=sa


*****

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

சுவாமிமலை திருத்தலத்தின பெருமைகள்



முருகப் பெருமான் அமர்ந்த சுவாமிமலை திருத்தலத்தின பெருமைகள் .. (ஸ்ரீ அகத்திய மகரிஷி)


பிரம்மதேவன் முதலான தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர் முருகன் வாழும் சுவாமிமலையில் எப்போதும் வசிக்க ஆசைப்படுகின்றனர்.

குஹன் ஈஸ்வரனுக்கு பிரணவத்தை உபதேசித்த நிகழ்வை பூமியில் மனிதருக்கு உணர்த்த உருவாக்கப் பட்ட புண்ணிய ஸ்தலம். ஆதலால், இதை கைலையை விட உயர்ந்த ஸ்தானம் என்று பெரியோர் கூறுவார்.

முருகனுடைய மூர்த்தி இங்கு ஆகாச கங்கையாக விளங்குகிறது.

இம்மலையில் உள்ள அறுபது படிகளும், வருஷ தேவதைகள். ஆறு ருதுக்களும் அடிவார மலைகள், கோபுரங்கள் சப்த மாத்ரு கணங்கள். கோவில் வாசற்படிகள் தேவ மகளிர்.

மலை ஏறும் பொழுது முருகன் நினைவுடன் ஒவ்வொரு படிகளுக்குரிய வருஷ தேவதைகளுக்கு தேங்காய் நிவேதனம் செய்து கற்பூர ஆராதனையுடன் வழிபடவேண்டும்.

முருகன் இருக்கும் விமானத்துக்கு "அசலானந்தம்" என்று பெயர். விமானத்திலுள்ள ஷண்முகனை வழிபடுபவர் மறுபடியும் இவ்வுலகில் பிறக்கமாட்டார்கள்.

முதலில் சுவாமிநாதனை தரிசித்த பின்னரே அடிவாரத்தில் உள்ள பரமேஸ்வரனை தரிசிக்க வேண்டும்.

கார்த்திகை மாதம் கிருத்திகை நக்ஷத்திரத்தில் முருகனை வழிபடுபவன், உலகின் தலைவனாக விளங்குவான்.

ஸ்ரீ சுவாமிநாதனுக்கு அபிஷேகம் செய்கிறவன் சகல சம்பத்துக்களும் பெற்று வாழ்வான்.

அங்கப்ரதக்ஷிணம் செய்பவன் கோரிய பொருளை பெறுவான்.

சித்திரை, வைகாசி, தை மாத பௌர்ணமிகளில் சுவாமிமலையில் பிரதட்சிணம் செய்தால் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்து விடுபடுவான்.

பூச நட்சத்திரத்தில் சுவாமிநாதனை வழிபட்டு, பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தானம் ஆகியவைகளினால் அபிஷேகம் செய்தால், எல்லா விருப்பங்களும் நிறைவேறும். இது சத்தியம்.

தை பூச நட்சத்திரத்தில் முருகனை வழிபாட்டு பிரம்மா முதலிய தேவர்கள் தாங்கள் கோரிய பலனைப் பெறுகிறார்கள். எனவே, தை மாத பூச நட்சத்திரத்தில் யார் ஒருவர் சுவாமிநாதனை தரிசித்து அங்கப்ரதக்ஷிணம் செய்கின்றார்களோ, அவர்களுடைய முன்னோர்கள் மூன்று கோடி தலைமுறையினர் கரை ஏறுகின்றனர். முறைப்படி படி ஏற முடியாவிட்டால் முதல் படிக்கட்டுக்கும், கடைசிப் படிக்கட்டுக்கும் பூசை செய்துவிட்டு படி எறவேண்டும்.

சண்டிகை முதலான தேவதைகள் மலையைச் சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்களை வணங்கிய பின்னரே மலை ஏறவேண்டும்.

தைப் பூச நட்சத்திரத்தில் சுவாமிமலைக்குப் போகிறேன் என்று சொன்னாலே, முருகனுடைய அருள் கிடைத்துவிடும். அஸ்வமேத யாகப் பலன் கிடைக்கும்.

பூச நட்சத்திரத்தில் சுவாமிமலைக்குப் புறப்படுகிறவன் குகனாகவே ஆகிவிடுகிறான். பூச நட்சத்திரத்தில் சுவாமிநாதனை தரிசிப்பதற்கு முன்பாக தர்மம் செய்தால் அவன் குபேர சம்பத்தைப் பெறுவான்.

மௌனத்துடன் சென்று தரிசனம் செய்தால் தேவர்களின் அதிபதியாவான்.

அங்குள்ள குமாரதீர்த்தத்தில் நீராடினால் வம்சம் சிறப்புற்று விளங்கும்.
குமார தீர்த்தத்தில் மண் எடுத்து படிக்கட்டுகள் கட்டி திருப்பணிகள் செய்பவன் வம்சம் சிறந்து விளங்கும்.

ஸ்ரீ சுவாமிநாதனை வணங்கினாலோ, சன்னதியில் தீபம் ஏற்றி வைத்தாலோ, பில்வ தளங்களால் அர்ச்சனை செய்தாலோ, அவன் தெய்வாம்சம் பொருந்தியவனாகிறான்.

பால் காவடியில் எல்லா தேவர்களும் வசிக்கின்றனர்.

வேலைக் கையில் தாங்கிய குமாரனுடைய கோவில் விமானத்தை தூர நின்று தரிசித்தாலே எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.



6 முகம், 12 ஆயுதம் ஏந்திய கைகள் :-

இவருடைய ஆறு முகங்கள் முற்றறிவு, அளவிலின்பம், வரம்பில் ஆற்றல் உடைமை, தன்வயமுடைமை, பேரருளுடைமை, இயற்கை அறிவு என்ற ஆறு குணங்களாகும். அவர் திருமேனி அருள் உரு.

வேலாயுதம் தவிர மற்ற பதினோரு ஆயுதங்கள் ஏகாதச ருத்திரர்கள். வேல் ஞான உருவம். சேவல் கொடி நாத தத்துவம், மயில் விந்து தத்துவம். வள்ளி, தெய்வயானை இச்சா சக்தி, க்ரியா சக்தி தத்துவம்.

தேவசேனா, பக்தர்கள் பகவானை தேடி செல்லும் தத்துவம். மர்க்கட நியாயம். அதாவது குரங்குக் குட்டி தன் தாயின் வயிற்றை கெட்டியாக கட்டிக் கொள்வது.

வள்ளி நாயகி,, பகவானே பக்தர்களை நாடி வரும் தத்துவம். மார்ஜால நியாயம். தாய் பூனை தன் குட்டிகளை கவ்விச் சென்று பாதுகாப்பது போல.

வேல் இருப்பது ஆன்மாக்களுக்கு ஞானம் தர. அந்த ஞான அறிவை, இச்சையையும், கிரியையும் ஒழித்தால் அடையலாம்.

*****

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

Monday, November 16, 2015

ஸ்ரார்த்தம்


சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அறிவுரை


பரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா .....

நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பரலோகம் உண்டு. பித்ரு லோகம் உண்டு. அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும், பிரேத நிலை நீங்கியவராய் பித்ரு லோகத்தில் இடம் பெற்றவராக விளங்குகின்றனர்.

பித்ருக்களை உத்தேசித்து செய்யும் கர்மாவே ஸ்ரார்த்தம். நாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ஸ்ரார்த்தமும் ஒன்று. நமது முன்னோர்கள் தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளை விட ஸ்ரார்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்து வந்திருக்கிறார்கள்.

மஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டு பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம். ஆனால் ஸ்ரார்த்தம் அவ்வாறல்ல. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி ஸ்ரார்த்தம் செய்தே ஆக வேண்டும்.

ஸ்ரார்த்தம் செய்வதினால் யாருக்கெல்லாம் திருப்தி?

1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்.
2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே-தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்.
3. ஹோமத்தில் பாகம் பெருகின்ற அக்னி பகவான்.
4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்.
5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத நரகத்தில் இருப்பவர்களுக்கும்.
6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்.

இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ஸ்ரார்த்ததில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.

பித்ருக்களின் அனுக்ரஹம்

நமது பித்ருக்கள் இருந்தார்கள். இறந்து விட்டார்கள். இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர். அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால், நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள். அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள். க்ரூரமானவர்கள் அல்ல. தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ஸ்ரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவ்ருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை-மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.

பித்ரு சாபம்

நாம் கடமையிலிருந்து தவறக்கூடாது. வாத்தியாரை குறை சோல்லுவதும், சாக்குபோக்குகளை தேடி கண்டுப்பிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகின்றது. இதைக் கைவிட வேண்டும். யாரிடம்தான் குறையில்லை. ஸ்ரார்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். ஸ்ரார்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன். இதில் சந்தேகமே வேண்டாம். குதர்கக வாதம் கூடாது. ஸ்ரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை. சுருக்கமாக பித்ருசாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது. பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று நினைக்க வேண்டாம். பித்ருக்கள் கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே, நமக்கு தோஷம் ஏற்படும். பெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம். வம்சவிருத்தி பாதிக்கலாம்.

மந்திரங்கள்

ஸ்ரார்த்தம் செய்யும்போது மந்திரங்களை சாஸ்திரிகள் அக்ஷர சுத்தத்துடனும், ஸ்வரத்துடனும் சொல்லி வைப்பது முக்கியம். அதே மாதிரி கர்த்தா கூடியமானவரையில, அப்யாசம் இல்லாவிட்டாலும், சரியாக திருப்பி சொல்ல முயற்சி செய்வதும் மிகவும் அவசியம். சிரத்தையுடன் ஸ்ரார்த்தம் செய்வதை முக்கிய கர்மாவாக வைதீக கர்மாக்களில் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரார்த்த இறுதி கட்டத்தில் ஸ்ரார்த்த பிராஹ்மண்ர்களிடம் கர்த்தா மந்திர ரூபமாக வேண்டுவது என்னத் தெரியுமா?
நாங்கள் ஒருவரையும் யாசியோம். யாசிப்பவர்களுக்கு நிறைய நாங்கள் தர வேண்டும். எங்களது ஸ்ரத்தை எங்களிடமிருந்து விலகக் கூடாது. வேதமும், குலமும் எப்போதும் அறுபடாமல் பெருகட்டும். உணவு நிறைய கிடைக்க வேண்டும். அதிதிகளும் நிறைய எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று அவர்களிடம் கோரி ஆசி பெறுகின்றோம். இந்த மாதிரி அர்த்த புஷ்டியுள்ள மந்திரங்களை நாம் சரியாக உச்சரிப்பதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. நினைத்துப் பாருங்கள்.

ஸ்ரார்த்த நியமம்

இரண்டாவது ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் இறந்த அதே மாதம், திதி கூடிய தினத்தில் செய்வதே ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தம். ஸ்ரார்த்ததில் ஸ்ரத்தை மிகமிக முக்கியம். கர்த்தா ஸ்ரார்த்த மாதம் அல்லது ஸ்ரார்த்த பக்ஷம் முழுவதும் நியமத்துடன் இருக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் குறைந்த பக்ஷம் முன் 3 நாளாவது நியமத்துடன் இருக்க வேண்டும்.

நியமம் என்றால் அந்த நாட்களில் வெளியில் சாப்பிடவதாக இருந்தால் சகோதரர், குரு, மாமா, மாமியார் வீட்டில் அல்லது மற்ற இடங்களில் சாப்பிடக் கூடாது. வபனம் (க்ஷவரம்) அப்யங்கம் (எண்ணை தேய்த்துக் குளித்தல்) ஸ்த்ரீ ஸங்கமம் முதலியவை கூடாது.

ஸ்ரார்த்தம் செய்யும் முறை

இன்றைய நவீன ஆடம்பரமான சூழ்நிலையில் நாம் புதுப்புது வழக்கங்களுக்கும் நாகரீகம் என்ற பெயரில் புதுப்புது பழக்கங்களுக்கும், பல நேரங்களில் மற்றவர்களைப் பார்த்து பார்த்து நாமும் ஆகர்ஷணமாகி, நமக்கு தேவையா என்று கேட்காமலேயே அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம். இதன் நடுவில் ஸ்ரார்த்ததிற்கு அவகாசம் பலருக்கு இருப்பதில்லை என்றாலும் மனமிருந்தால் மார்க்கம் கிடைக்கும்.

விதிப்படி, ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். வசதியும், சிரத்தையும் உள்ளவர்கள் ஸ்ரார்தத்தில் கீழ்கண்ட அம்சங்களை குறைந்தது கடைபிடிக்க வேண்டும். வசதி இருப்பது என்பது முக்கியமல்லவா குருடனைப்பார்த்து ராஜமுழி முழிக்க வேண்டும் என்றால் எவ்வாறு சாத்தியம். வசதி இல்லாதவர்களுக்கு எந்த தோஷமும் வராது. சாதாரண உத்யோகத்தில் பணிபுரியும் ஒருவர் வருஷத்தில் இரண்டு ஸ்ரார்த்தம் செய்வதாக இருந்தால், குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும். இது அப்பேர்ப்பட்டவர்க்கு ச்ரமம்தான். குறைவான வருமானத்தில் வாழ்பவர் ஸ்ரார்த்ததை சுறுக்கி செய்தால் தோஷம் ஏற்படாது. எந்த வருமானமும் சரியாக இல்லாதவர்கள் ஹிரண்யமாகவும் ஸ்ரார்த்ததை செய்யலாம். (அரிசி, வாழைக்காய், தக்ஷணை மட்டும் அளிப்பது). ஆனால் வசதி இருப்பவர்கள் ஸ்ரார்தத்தை ஏனோதானோ என்று செய்தால் தோஷம் ஏற்படும். சந்தேகமில்லை.

வசதி இருப்பவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய அம்சங்கள் :

1. பார்வணம் (ஹோமம்)
2. தூய்மையான, ருசியான, சூடான சமையல்.
3. ப்ராம்ஹணாளுக்கு ஆசாரியனுக்கும் வஸ்த்ரம்.
4. போஜனத்திற்குப் பிறகு ப்ராம்ஹணாளுக்கு தக்ஷிணை.
5. ஆசாரியனுக்கு (பண்ணிவைக்கும் சாஸ்திரிகளுக்கு) சம்பாவனை (அவருக்கும் எல்லா தான பொருட்களும்)
வெள்ளியில் ஏதாவது பொருளும், வெண்பட்டும் வழங்கினால் மிகவும் விசேஷம்.

வழங்கும் சாமான்கள் நல்லதகவும், தரமானதாகவும் இருத்தல் முக்கியமானது. ஏனோதானோவென்று வழங்கக் கூடாது. (உதாரணத்திற்கு வாழைக்காய் கொடுப்பதாக இருந்தாலும் அது பெரியதாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும்)

வசதியும், மனோபாவமும் உணவு தயாரிக்க இயலாத நிலையிலும் ஸங்கல்பம் செய்து பூர்ண உணவிற்கு தேவையானதைவிட அதிகமான அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறி, வஸ்த்ரம், தக்ஷிணையுடன் தரவேண்டும் என்பதுவிதி. இந்த மாதிரி செய்ய முடியாத போது, ஹிரண்ய ஸ்ரார்த்தமாகச் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள், பசுவிற்கு புல் தரலாம். ஸ்நானம் செய்து முறைப்படி தர்ப்பணம் செய்யலாம். ஸ்ரார்த்த மந்திரங்களை ஜபிக்கலாம். அன்று முழுவதும் உபவாசமிருக்க வேண்டும்.

வசதி உள்ளவன் இந்த மாற்று முறைகளைச் செய்தால் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும். வினோதமான வாதம் ஒன்று இப்போது சிலரால் சொல்லப்பட்டு வருகின்றது. நல்ல வசதி இருப்பவர்கள் கூட வஸ்திரம் வாங்குவது எங்கள் ஆத்து பழக்கமில்லை என்று கூறுவதுதான் அது. முன்னோர்கள், பாவம் ஒரு வேளை வசதி இல்லாமல் வாங்காமல் இருக்கலாம். அதை நாம் இன்று கூறி தப்பித்துக் கொள்வது அசட்டுத்தனம் அல்லவா?

ஆசார நியமங்களுக்கும் அனுஷ்டானத்திற்கும் விதண்டாவாதம் கூடாது. கூடியமான வரயில் சாஸ்த்ரங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சற்று காது கொடுத்துக் கேட்பது நல்லது. அப்படி கேட்போமாகில் பிறகு பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்காது.

ஸ்த்ரீகள்

இன்னொரு விஷயத்தையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. கர்த்தாவின் மனைவியின் ஒத்துழைப்பு ஸ்ரார்த்தத்தில் மிகவும் அவசியம். இது இருந்துவிட்டால் கர்மா நன்கு நடக்குமென்பதில் சந்தேகமில்லை. கர்மா சரிவர நடைபெற இத்துழைப்பதினால் அந்த ஸ்த்ரீகளுக்கும் பல சௌபாக்கியங்கள் ஏற்படுவதோடு இஹபர நன்மைகள் எண்ணற்றவை ஏற்படும். புருஷர்களிடம் ச்ரத்தை கம்மியாக இருந்தாலும், மனைவிகள் வற்புறுத்தத்தினால் ஸ்ரார்த்தம் நடைபெருவதையும் நாம் இல்லங்களில் பார்க்கின்றோம். மொத்ததில் எல்லா வைதிக கர்மாக்களும் நன்கு நடைபெற வேண்டுமென்றால், புருஷர்கள் நினைத்தால் மட்டும் போதாது. பொம்மானாட்டிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். நமது தர்மத்தில் ஸ்திரீகளின் இடம் மகத்தானது.

புத்திரர்கள் சேர்ந்து செய்யலாமா?

பங்கு பிரிக்கப்பட்டிருந்தாலும், பிரிக்கப்படாமல் தனித்தனியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாலும் தனித்தே ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தால் தனித்தனி ஸ்ரார்த்தம் தேவையில்லை. தனித்தனியே வாழ்ந்து கொண்டு ஸ்ரார்த்தத் தினத்தன்று ஒன்று சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல. மூத்தவர் பண்ணினால் அவரருகில் இருந்தால் போதும் என்பது எப்போதும் சேர்ந்து இருப்பவர்களுக்கு மட்டுமே. (தாயார் உயிருடனிருந்தால் அவன் இருக்குமிடத்தில் பித்ரு ஸ்ரார்த்தம் எல்லோரும் சேர்ந்து செய்வதில் தவறில்லை என்பது பெரியோர்களது
வாக்கு). தனித்தனியே ஹோமத்துடன் ஸ்ரார்த்தம் செய்வதால், பித்ருக்களுக்கு அதிக திருப்தி. பித்ருக்கள் பல இடங்ககளிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும். ஸ்ரார்த்ததில் பலவற்றிற்கு மாற்று உண்டு. ஆனால் ச்ரத்தைக்கு மட்டும் மாற்றம் இல்லை. தெய்வ காரியங்களை முன்பே குறிப்பிட்ட மாதிரி சில நேரங்களில் தள்ளி வைத்து, பிறகு செய்ய சட்டத்தில் இடமுண்டு. ஆனால், ஸ்ரார்த்தக் காரியங்களை தள்ளி வைக்கவோ அசிரத்தையாகச் செய்ய இடமில்லை. பூரண ஈடுபாட்டுடன் அவசரமின்றி செய்ய வேண்டும். முறைப்படி செய்ய இயலாவிடில் சக்தியுள்ள மட்டும் சிரத்தையுடன் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கின்றது. எல்லாவற்றிற்கும் பிரதிநிதி உண்டு. சிரத்தைக்கு பிரதிநிதி இல்லை.

ஸ்ரார்த்தத்தன்று சமாராதனை?

ஸ்ரார்த்த திதி அன்று நாங்கள் வருஷா வருஷம் அன்னதானத்திற்கு (அல்லது ஏதாவது பாடசாலைக்கு) ஏற்பாடு செய்து மொத்தமாகப் பணம் கட்டிவிட்டோம். அதனால் ஸ்ரார்த்தம் செய்வதில்லை என்று கூறுபவர்களும் நமது கண்ணில் படத்தான் செய்கிறார்கள். இது சுத்த அபத்தம். அன்னதானம் செய்த பலன் வேண்டுமானால் தனியாகக் கிடைக்கலாம். (ஸ்ரார்த்தத்தன்று பித்ருக்களை வரித்து அல்லாமல் மற்றவர்களுக்குப் போஜனம் செய்விக்கலாமா என்பதே ஒரு கேள்விக்குறி ?) எது எப்படி இருந்தாலும், ஸ்ரார்த்தத்திற்குப் பிரதிநிதியாக அன்னதானம் ஆகாது. ஸ்ரார்த்தம் ஸ்ரார்த்தம் தான். பிரச்சனை ஏதும் இல்லாதவர்களும் வசதி உள்ளவர்களும் முறையாக ஸ்ரார்த்தத்தை அனுஷ்டித்துத்தான் ஆக வேண்டும்.

சில குறிப்புகள்

ஸ்ரார்த்தம் நடக்கும் போதும், சமையல் செய்யும் போதும், யாரும் (சாப்பிட வரும் பிராம்ஹணாள் உட்பட) அதிகப் பேச்சுக்களோ, வம்பு, அரசியல் போன்ற விவாதங்களில் ஈடுபடுவதோ கூடாது. சங்கீதம், பக்தி கேசட்டுகளைக் கூட ஓட விடக்கூடாது. இவற்றையெல்லாம் கேட்டால் பித்ருக்கள் திரும்பி போய்விடுவார்களாம்.

வீட்டில் சமையல் செய்து ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். கர்த்தாவின் தர்மபத்தினி சமையல் செய்வது உத்தமம். ஸ்ரார்த்த முதல் நாள் எந்த பட்க்ஷண்மும் தயார் செய்து வைத்து, ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.

சிலர் சமாராதனை சாப்பாடாக, தேங்காய் முதலியவைகளை சேர்த்து செய்வார்கள். இதுவும் சரிதான். ஏனெனில் சாப்பிடுபவர்கள் திருப்தியாக சாப்பிட இதில் வாய்ப்பு அதிகம். திருப்தியாக ப்ராம்ஹணர்க்ள சாப்பிட வேண்டுமென்பது மிக முக்கியம் அல்லவா? எங்காத்து வழக்கம் என்று முரண் பிடிக்காமல் சமையல் ருசியாக சமாராதனை ரூபத்தில் சமைத்தால் தவறில்லை. அதற்காக ஸ்ரார்த்ததில் விலக்கப்படவேண்டிய காய்கறிகளையும், பொருட்களையும் விலக்காமல் இருக்கக் கூடாது. மொத்தத்தில் சமையல் நன்கு சாப்பிடும்படியாக இருக்க வேண்டும். அவரவர்கள் இல்லத்து பெரியோர்களின் ஒப்புதலோடு சமாராதனை சாப்பாடு ஏற்புபுடையதே என்பது அடியேனுடைய கருத்து.

சமைக்கும் மற்றும் பரிமாறும் ஸ்த்ரீகள் மிகவும் மடியாகவும், மடிசார் புடவையுடன் தான் இருக்க வேண்டும். தூய்மையிலாத பந்துக்கள் ஸ்ராத்த இடத்தில் இருக்கக் கூடாது.

சமையல் செய்து எல்லாம் ஆறி அலர்ந்து போயிருக்கக் கூடாது. சுடச்சுட ருசியாக சாப்பிடும்படி பரிமாறுவது அவசியம். தான் சந்தோஷமிக்கவனாக, ஸ்ரார்த்த ப்ராஹ்மணாளை சநோஷப்படுத்தயவாறே மெதுமெதுவாக அவர்கள் சாப்பிடுமாறு பரிமாறுவது முக்கியம்.

பதார்த்தங்களை அவர்கள் சமீபம் கொண்டு சென்று இந்த அத்ருஸம் ருசியாக செய்யப்பட்டுள்ளது; இந்த வடை சூடாக உள்ளது; இன்னுமொன்று போட்டுக்கோங்கோ என்று பவ்யமாகக் கேட்டு திருப்தியாக சாப்பிடும்படி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். (அதற்காக அவர்கள் வேண்டாம் என்ற சைகை காட்டியபோதும், அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களை ச்ரமப்படுத்தக் கூடாது).

சமையலில் கோதுமை, உளுந்து, பயறு, எண்ணையில் செய்யப்பட்ட பதார்த்தங்கள், இவைகளை கட்டாயம் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்க்க வேண்டும்.

கர்த்தா, சகோதரர்கள், பெண், புத்திர பௌத்திரர்கள், தௌஹித்திரர்கள், ஸபிண்ட ஞாதிகள், பித்ரு சேஷம் சாப்பிடலாம். ஒருவன் தனது மாமனார், மாமா இவர்களுடைய பித்ரு சேஷம் சாப்பிடலாம்.

ஸந்தியாவந்தனம் தொடர்ந்து செய்யாதவர்கள் ஸ்ரார்த்த நாள் அன்றாவது த்ரிகால ஸந்தியாவந்தனம் செய்துதான் ஆக வேண்டும்.

சமையல் ருசியாக உள்ளதா என்று கர்த்தா சாப்பிடும் ப்ராஹ்மணர்களை வாய் தவறியும் கேட்கக் கூடாது.

கருப்பு எள் சாதத்தில் மிகவும் அவசியமான ஒன்று. ராக்ஷஸர்களை விரட்டி பித்ருக்களுக்கு திருப்தி தரக் கூடியது (எள்ளை ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து எடுக்கக் கூடாது)

பழத்தைத் தவிர மற்றதை வெறும் கையால் பரிமாறக் கூடாது. உப்பை தனியாக பரிமாறக் கூடாது. ஸ்ராத்ததன்று காலையில் ஸ்ரார்த்தம் முடியும் வரயில் எதுவும் சாப்பிடக் கூடாது.

அன்று மத்தியானம் போஜனமானபின் இரவில் சாப்பிடும் பழக்கம் தவறு. மிக அவசியமெனில், திரவாக சிறிது இரவு உட்கொள்ளலாம். உடல் நலம் குன்றியவர்களுக்கும் இது பொருந்தும்.

மாத்யாஹ்னிகம் செய்த பிறகு, ஸ்ரார்த்த கர்மா ஆரம்பிக்கலாம். க்ருஸரம் கொடுப்பதாக இருந்தால், சிராத்தாங்க ஸ்நானத்தை (2-வது ஸ்நானம்) பிறகு தான் செய்ய வேண்டும். அன்று காலை நனைத்து உலர்த்திய மடி வஸ்த்ரத்தைதான் உடுத்த வேண்டும். ஸ்ரார்த்ததில் மடி மிக முக்கியம்.

அபிச்ரவணம் சொல்பவர் கிடைக்காவிட்டால், தானே இதிகாச புராணங்கள் படனமோ, ஸ்லோகங்களையோ, சூக்தாதிகளையோ, ப்ராம்ஹணாள் சாப்பிடும்போது சொல்லலாம்.

ஸ்ரார்த்த நாளன்று கோபமும், அவசரமும் கூடாது. மணி ஓசை, கோலம் முதலுயவை கூடாது.

ஸ்ரார்த்தம் ஆரம்பித்து, தான் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரயில் கர்த்தா, அப்ராம்ஹணர்களுடன் பேசுவதையோ, பார்ப்பதையோ தவிர்க்கவும்.

இரும்புப் பாத்திரத்தை ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.

கடி சூத்ரம், மிக உசத்தியானது. மகிமை வாய்ந்தது. அதை நாம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். குறைந்தது ஸ்ரார்த்த கர்மா அன்றாவது கட்டிக் கொள்வது அவசியம். அவ்வாறே பஞ்சகச்சமும்.

தினசரி செய்யும் ஆத்து பூஜையை ஸ்ரார்த்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும்.

ஸ்ரார்த்தத்தை நம் விருப்பத்திற்குத் தள்ளிப் போடக் கூடாது. ஒரு வேளை தீட்டு, ஞாபக மறதி போன்ற காரணங்களினால் உரிய தேதியில் செய்ய முடியாமல் போய்விட்டால், அன்று உபவாசமிருந்து மறுநாள் ஸ்ரார்த்தம் செய்யலாம்.

கர்த்தா ஸ்ரார்த்தத்தையே மறந்துவிட்டு இருந்தால், அவருக்கு ஞாபகம் வந்தவுடன் அடுத்து வரக்கூடிய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி, ஏகாதசி, அம்மாவாசை, இதில் ஏதாவது ஒரு திதியில் செய்ய வேண்டும். ப்ராஜாபத்ய க்ருச்ரம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.

ஒருவேளை ஸ்ரார்த்தம் செய்பவருக்கு உடல் நலம் குன்றியோ, அல்லது தள்ளாமையோ வந்தால், பிறரை விட்டு (மகனாக இருந்தாலும் தோஷமில்லை) ஹோமம் செய்து ஸ்ரார்த்தத்தை நடத்தலாம்.

கயா ஸ்ரார்த்தமும், ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தமும் சமீப காலமாக ஒரு கருத்து ஆங்காங்கு நிலவி வருகிறது. கயாவில் ஒரு தடவை ஸ்ரார்த்தம் செய்து விட்டால் வருஷா வருஷம் இனி ஸ்ரார்த்தம் செய்யத் தேவையில்லை என்பதே அது. இது சுத்த அபத்தம்.

சாஸ்த்திர விரோதமானது.

ஒரு சிறு உதாரணத்தின் மூலமாக இதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். ஒரு நாள் பிரமாதமான மிக ருசியான உயர்ந்த விலையில் பலவகைகளுடன் மிகவும் காஸ்ட்லியான விருந்து (பெரிய நக்ஷத்ரஓட்டலாகவும் அது இருக்கலாம்) சாப்பிட்டு விட்டால், மறுநாள் நாம் சாப்பிடாமல் இருந்து விடுகிறோமா? கயா ஸ்ரார்த்தம் மிக உன்னதமானது. ஜன்மாவில் ஒரு தடவையாவது கயா ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கும் வருஷாவருஷம் செய்யும் ப்ரத்யாப்திக ஸ்ரார்த்ததிற்கும் சம்பந்தம் கிடையாது. இது வேறு. அது வேறு.

ஔபாஸன அக்னி

ஔபாஸனம் நமக்கு நித்ய கர்மாவாகும். ஆனால் இக்காலத்தில் நாம் செய்வதில்லை. ஸ்ரார்த்தத்தன்று ஔபாஸனம் செய்கின்றோம். ஹிரண்யமாக ஸ்ரார்த்தம் செய்யும்போதும் அல்லது பெரியவரோடு மற்ற தம்பிகள் சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக செய்யும்போது, ஔபாஸனம் நம்மை விட்டு அறவே விலகிவிட வய்ப்பிருக்கின்றது. கிருஹஸ்தனுக்கு அடையாளமான ஔபாஸனம் விலகி விடாமல பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா? ஸ்ரார்தம் பார்வணமாகத்தான் (ஹோமத்துடன்) செய்ய வேண்டும். (பிரம்மச்சாரி கர்த்தாவாக இருந்தால் ஔபாஸனத்திற்கு பதிலாக ஸமிதாதானம் சொல்லப்பட்டுள்ளது).

நம்பிக்கை

அவரவர்கள் அவரவர் சூத்திரப்படி ஸ்ரார்த்தம் செய்வதுதான் முறை. ஒரு வேளை குறிப்பிட்ட சூத்திரம் பண்ணிவைக்க ஆசாரியன் கிடைக்காத பட்சத்தில் எந்த சூத்திர வாத்தியார் கிடைப்பாரோ அந்த சூத்திரபடியாவது ஸ்ரார்த்தம் செய்யலாம். கர்மாவை விடக்கூடாது. அதே மாதிரி சாஸ்திரிகளை குறை சொல்லவும் தேவையில்லை. அவரவர்கள் கர்மா அவரவர்களுடையது. நமது ச்ரத்தையும், பார்வையும் தான் முக்கியம். அதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வெண்டும்.

சம்பாவனை

ஸ்ரார்த்ததில் இப்பொழுதெல்லாம் இன்னொரு விஷயமும் பிரச்சனையாகி வருகின்றதை நாம் சில இடங்களில் பார்க்கின்றோம். அது சம்பாவனை விஷயத்தில். எங்கள் அப்பா அப்போதெல்லாம் இவ்வளவுதான் கொடுப்பார் என்ற ஆர்க்யுமெண்ட். சிறிது யோசித்தாலும் நமக்கே புறியும், இது எவ்வளவு அபத்தமென்று.

சிலர் குறிப்பிடுகின்ற அந்த காலத்தின் ஒரு ரூபாய் என்பது இன்று கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு சமமல்லவா? அதனால் இப்படியெல்லாம் வாதிடாமல் தன்னால் முடிந்ததை திருப்தியாக சம்பாவனை அளிப்பது உசிதம். சாஸ்திரிகளை தேவதாஸ்வரூபமாக நினைப்பதுதான் நமது பாரம்பரியம்.

சாப்பிடும் ப்ராம்ஹணாள்

எக்காரணம் கொண்டும் வரிக்கப்பட்ட பிராம்ஹணாளை அவமானப்படுத்தும் எண்ணமே நமக்கு வரக்கூடாது. நாம் எல்லோருமே ப்ராம்மணார்த்தம் சாப்பிட வேண்டிய குலத்தில் பிறந்தவர்கள்தானே!
நம் முன்னோர்களும் ஒரு காலத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள்தானே! ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் இன்னொரு வீட்டில் போய் ப்ராம்மணார்த்தம் சாப்பிடத் தயார்? நம்மால் முடியாதல்லவா? அப்படி இருக்கும்போது மற்றவர்களை குறைகூறுவதில் நமக்கு என்ன யோக்யதை இருக்கு? ப்ராம்மணார்த்தம் சாப்பிடுபவர்களும் ஒரு வகையில் பொது சேவை செய்பவர்கள்தான். அவர்கள் இல்லாவிடில் கர்மா எப்படி நடக்கும். நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.

வைதீகம்

வைதீகத்தில் நம்பிக்கை வளர வேண்டும். அதற்கு வைதீகாளிடம் நம்பிக்கையும், மரியாதையும் வைப்பதுதான் ஒரே வழி. வைதீக தர்மத்தை அனுஷ்டிப்பது நமது கடமையாக் இருப்பதால் மிக முக்கியமான மந்திரங்களையாவத, நாம் ஒவ்வொருவரும் அத்யாயனம் செய்ய வேண்டும். கேசட்டுகளை நம்பக் கூடாது. ஏனெனில் அது நம்மைத் திருத்தாது. மேலும் கேசட்டுக்களைக் கேட்கும்போது, நம்மை அறியாமலே நமக்கு ஒரு திருப்தி மாயை ஏற்பட்டு விடுகின்றது. நாம் வாயை திறந்து சொன்னால்தான் பலன் கிடைக்கும்.

ஒரு நாளும் ஸந்தியாவந்தனம் செய்யாமல் இருக்க வேண்டாம். குறிப்பாக ஸந்தியாவந்தனத்தில் வரும் ப்ராணாயாமம், சூரிய த்யானம், தர்ப்பணம், காயத்ரி ஜபம் போன்றவைகளை கவனமாக செய்யப் பழகுவது நல்லது.

கூடியமானவரை ஆசார நியமங்களை நாம் கடைபிடித்தால், நமக்கு ச்ரேயஸ் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.


..... ஒரு வலைப்பூ பதிவில் படித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Sunday, November 15, 2015

मायापञ्चकम् ॥ மாயாபஞ்சகம் ॥ Maya Panchakam


ஶ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாசார்யஸ்ய ஶ்ரீகோவிந்தபகவத்பூஜ்யபாதஶிஷ்யஸ்ய
ஶ்ரீமச்சங்கரபகவத: க்ருʼதௌ "மாயாபஞ்சகம்"

श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ "मायापञ्चकम्"

"Maya Panchakam" (The Pentad on Illusion) by Aadhi Shankara Bhagwat Pada



निरुपमनित्यनिरंशकेऽप्यखण्डे
मयि चिति सर्वविकल्पनादिशून्ये ।
घटयति जगदीशजीवभेदं
त्वघटितघटनापटीयसी माया ॥ १॥

நிருபமனித்யனிரம்ஶகேऽப்யக²ண்டே³
மயி சிதி ஸர்வவிகல்பனாதி³ஶூன்யே ।
க⁴டயதி ஜக³தீ³ஶஜீவபே⁴த³ம்
த்வக⁴டிதக⁴டனாபடீயஸீ மாயா ॥ 1॥

Nirupam anithya niramaskhepya khande
Mayi chithi sarva vikalpanadhi soonye,
Ghatayathi Jagadheesa jeeva bhedham
Thwagathitha ghatanaa patiyasi maya. 1

ஈடிணையற்றதும் அழிவற்றதும் பிளக்க முடியாததும் தனித்ததும் சித்ஸ்வரூபமானதுமாகிய ஆன்மாவில் நான், இடம், உலகம், ஈசன், ஜீவன் எனும் பல்வேறு உணர்வைப் பொருத்துகிற மாயை - நிகழ முடியாத எதையும் நிகழ்த்த வல்லவள்.

The illusion which can weave events that were not intended by you,
Can make them appear in the emptiness of the consciousness,
Which does not have an equal, which is perennial
And which cannot be divided in to parts,
The differences between the soul and the master of universe.



श्रुतिशतनिगमान्तशोधकान-
प्यहह धनादिनिदर्शनेन सद्यः ।
कलुषयति चतुष्पदाद्यभिन्ना-
नघटितघटनापटीयसी माया ॥ २॥

ஶ்ருதிஶதனிக³மாந்தஶோத⁴கான-
ப்யஹஹ த⁴னாதி³னித³ர்ஶனேன ஸத்³ய: ।
கலுஷயதி சதுஷ்பதா³த்³யபி⁴ன்னா-
நக⁴டிதக⁴டனாபடீயஸீ மாயா ॥ 2॥

Sruthi satha nigamatha sodhakan
Apyahaha dhanadini darsanena sadhya,
Kalushayathi chathush padadhyabhinna,
Na ghatitha gatana patiyasi maya. 2

மறைகள் யாவும் அறிந்தவரையும், மிகுந்த செல்வத்தைப் பெற்றவரையும், மதிமயக்கமுற்ற கால்நடைகள் போல் மாற்ற வல்லவளும், தூய அறிவினையும் மங்கச் செய்பவளுமான மாயை - நிகழ முடியாத எதையும் நிகழ்த்த வல்லவள்.

Does not illusion which can weave events that were not intended,
Make even those who have researched Vedas and hundreds of treatises,
Not very different from the four legged beings, by spoiling their mind,
By offering them riches and other tempting possessions, alas.



सुखचिदखण्डविबोधमद्वितीयं
वियदनलादिविनिर्मिते नियोज्य ।
भ्रमयति भवसागरे नितान्तं
त्वघटितघटनापटीयसी माया ॥ ३॥

ஸுக²சித³க²ண்ட³விபோ³த⁴மத்³விதீயம்
வியத³னலாதி³வினிர்மிதே நியோஜ்ய ।
ப்⁴ரமயதி ப⁴வஸாக³ரே நிதாந்தம்
த்வக⁴டிதக⁴டனாபடீயஸீ மாயா ॥ 3॥

Sukha chidha kanda vibodhamadwitheeyam,
Viya danaladhi vinirmathe niyojya,
Bhramayathi bhava sagare nithantham,
Thwagathitha ghatanaa patiyasi maya. 3

பிளக்க முடியாததும், இரண்டில்லாததும், ஆனந்தமும், பேருணர்வானதுமாகிய ஆன்மாவை வெளி, வாயு ஆகியவற்றில் செலுத்தி சம்சாரக் கடலில் லயித்துச் செய்கிறவளான மாயை - நிகழ முடியாத எதையும் செய்ய வல்லவள்.

The illusion which can weave events that was not intended by you,
Makes the pleasant, indivisible and second to none consciousness,
Appear as if it is associated with the body of the five elements,
And makes it confused and drown forever in the ocean of births.



अपगतगुणवर्णजातिभेदे
सुखचिति विप्रविडाद्यहङ्कृतिं च ।
स्फुटयति सुतदारगेहमोहं
त्वघटितघटनापटीयसी माया ॥ ४॥

அபக³தகு³ணவர்ணஜாதிபே⁴தே³
ஸுக²சிதி விப்ரவிடா³த்³யஹங்க்ருʼதிம் ச ।
ஸ்பு²டயதி ஸுததா³ரகே³ஹமோஹம்
த்வக⁴டிதக⁴டனாபடீயஸீ மாயா ॥ 4॥

Apagatha guna varna jathibhedhe,
Sukhachithi vipra vidadhyaham akruthim cha,
Sphutayathi sutha dara geha moham,
Thwagathitha ghatanaa patiyasi maya. 4

நான் அந்தணன், நான் வைசியன் என்ற அகங்கார உணர்வையும்; மகன், மனைவி, வீடு என்ற மோக உணர்வையும்; தன்மை, நிறம், ஜாதி ஏதுமற்ற ஆனந்தமயமான உணர்வை ஆன்மாவில் ஏற்படுத்தும் மாயை - நிகழ முடியாத எதையும் நிகழ்த்த வல்லவள்.

The illusion which can weave events that was not intended by you,
Makes the consciousness which is devoid of differences in quality, colour and caste,
Feel within itself differences in form of people such as Brahmin and Vaisya,
And create attachments such as wife, son and house.



विधिहरिहरविभेदमप्यखण्डे
बत विरचय्य बुधानपि प्रकामम् ।
भ्रमयति हरिहरभेदभावा-
नघटितघटनापटीयसी माया ॥ ५॥

விதி⁴ஹரிஹரவிபே⁴த³மப்யக²ண்டே³
ப³த விரசய்ய பு³தா⁴னபி ப்ரகாமம் ।
ப்⁴ரமயதி ஹரிஹரபே⁴த³பா⁴வா-
நக⁴டிதக⁴டனாபடீயஸீ மாயா ॥ 5॥

Vidhi hari hara vibhedha mapya khande,
Batha virachayya budhaana api prakamam,
Bramayathi hari hara bhedha bhava,
Nagathitha ghatanaa patiyasi maya. 5

ஹரி, ஹரன் என்று பிரிக்க முடியாத பூரணத்தினுள்ளும் எல்லாமறிந்த அறிஞரும் பிரம்மா, ஹரி, ஹரன் என்ற பேதத்தை உணருமாறு செய்து விடும் மாயை - நிகழ முடியாத எதையும் நிகழ்த்த வல்லவள்.

Does not illusion which can weave events that was not intended,
Makes even the well read wise men of the world,
Who know that laws do not tell of the differences between Vishnu and Shiva,
Delude themselves and make them see differences in Shiva and Vishnu.

इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ मायापञ्चकम्
सम्पूर्णम् ॥

இதி ஶ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாசார்யஸ்ய ஶ்ரீகோவிந்தபகவத்பூஜ்யபாதஶிஷ்யஸ்ய
ஶ்ரீமச்சங்கரபகவத: க்ருʼதௌ மாயாபஞ்சகம்
ஸம்பூர்ணம் ॥

*****

English Translation : Mr P R RamaChander

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்.

Saturday, November 14, 2015

காமாஷி தத்துவம்



கிருதயுகத்தில் 2000 சுலோகங்களால் துர்வாசராலும், திரேதாயுகத்தில் 1500 சுலோகங்களால் பரசுராமராலும், துவாபர யுகத்தில் 1000 சுலோகங்களால் தௌம்யா சார்யாரும், கலியுகத்தில் 500 சுலோகங்களால் மூகசங்கரரும் பாடிய பெருமை காமாட்சிக்கு உண்டு.

காமாஷி தத்துவம் :

காம என்னும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாஷி.

கா என்றால் ஒன்று. ம என்றால் ஐந்து. ஷி என்றால் ஆறு. அதாவது ஐந்து திருநாமங்களையும் சக்தி பேதம் மூன்று. சிவபேதம் இரண்டு, விஷ்ணு பேதம் ஒன்று என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவள்.

மற்றும் கா என்றால் சரஸ்வதி. மா என்றால் மகேஸ்வரி. ஷி என்றால் லட்சுமி. இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள்.

காமக் கடவுளாகிய மன்மதனிடம் தான் கரும்பும் புஷ்ப பாணமும் இருக்கும். இவை இரண்டையும் காமாட்சி வைத்திருப்பதன் காரணம் மன்மதன் ஜீவன்களிடையே இந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு அடங்காத காம விகாரத்தை உண்டாக்கி வரும்படி அவனுக்கு அச்சக்தியை அளித்திருக்கிறாள்.

பக்தர்களிடமும் ஞானிகளிடமும் உன் கை வரிசையை காட்டதே என்று மன்மதனிடம் கூறி அவனிடமிருந்து கரும்பையும் புஷ்ப பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு விட்டாள் தேவி என்றும் காஞ்சி பெரியவர் கூறுகிறார்.


... ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவருக்கு மிக்க நன்றி.

श्री गणेश पञ्चरत्न स्तोत्रम् ... கணேச பஞ்ச ரத்னம்



ஸ்ரீசங்கரபகவத்பாதர் இயற்றிய கணேச பஞ்சரத்னம்
श्रीशङ्करभगवतः श्रीगणेशपञ्चरत्नस्तोत्रं
Sri Ganesha Pancharatnam by Sri Adi Sankara Baghvad Pada

இந்தத் தோத்திரத்தை ஆதி சங்கரர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அங்கிருந்த விநாயகர் சிலையன்றின் முன்னிலையில் பாடினார். அவர் பாடப் பாட அந்த நர்த்தன விநாயகர் ஆடினாராம். அப்படித்தான் அந்தப் பாடலின் ஐதீகம்.

மீனாட்சியம்மன் கோயிலில் அம்மன் சன்னிதி வாயிலின் வழியாக உள்ளே சென்றோமானால் அஷ்ட சக்தி மண்டபம் இருக்கும். அதைத் தாண்டியவுடன் ஒரு பெரிய மண்டபத்தில் ஏராளமான பூக்கடைகள் தென்படும். அதற்கும் அப்பால் ஒரு கோபுரவாசல். அதைத் தாண்டிச் சென்றால் ஒரு ஆறுகால் மண்டம இருக்கும். மிக அழகிய தூண்களில் உயிரோட்டமுள்ள சிலைகள் இருக்கும். இங்குதான் குறவன் குறத்தி சிலை என்ற புகழ்பெற்ற சிலைகள் இருக்கின்றன. இந்த மண்டபத்துக்கும் அடுத்தாற்போல இன்னொரு கோபுரவாசல். அதையும் தாண்டிச் சென்றால் பொற்றாமரைக் குளம் வரும். அந்தக் கோபுர வாசலின் இருபக்கங்களிலும் விநாயகர், முருகன் சன்னிதிகள் இருக்கின்றன. விநாயகர் சன்னிதியில் இருப்பவர் நர்த்தன விநாயகர். அவர்தான் ஆதிசங்கரரின் கணேச பஞ்சரத்னத்துக்கு ஏற்றவாறு ரசித்து ஆடியவர் என்று கர்ணபரம்பரைக் கதை சொல்கிறது.



मुदाकरात्तमोदकं सदाविमुक्तिसाधकं
कलाधरावतंसकं विलासिलोकरञ्जकम् ।
अनायकैकनायकं विनाशितेभदैत्यकं
नताशुभाशुनाशकं नमामि तं विनायकम् ॥ १॥

முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்

Mudaa-Karaatta-Modakam Sadaa Vimukti-Saadhakam
Kalaa-Dhara-Avatamsakam Vilaasi-Loka-Rakssakam |
Anaayakai[a-E]ka-Naayakam Vinaashitebha-Daityakam
Nata-Ashubha-Ashu-Naashakam Namaami Vinaayakam ||1||

மகிழ்ச்சியுடன் கரத்தில் மோதகத்தைக் கொண்டுள்ளவர்
தம்மை வழுத்துபவர்களுக்கு எப்போதும் முக்தியைக் கொடுப்பவர்
சந்திர கலையைத் தலைல் தரித்திருப்பவர்
தம்முடைய பக்தியில் திளைத்து மகிழ்ச்சியாக இருக்கும் பக்தர்களைக் காப்பவர்
தங்களைப் பாதுகாக்கக்கூடிய தலைவனில்லாதவர்களுக்குத் தாமே ஒரே தலைவராக விளங்குபவர்
கஜாசுரனைக் கொன்றவர்.
தம்மை வணங்குபவர்களின் பாவங்களை எப்போதும் நாசம் செய்பவர்
அப்படிப்பட்ட விநாயகரை வணங்குகிறேன்.

(Salutations to Sri Vinayaka)
Who Holds the Divine Joy in His Hand as Modaka (a sweetmeat) and Who Always strives to Accomplish the Liberation of His Devotees towards that Divine Joy,
Who Holds the Digit of the Moon as His Ornament and with a Joyful Spirit Protects the World,
Who is without any Master but is Himself the only Master for His Devotees, and Protects them by Destroying the (inner) Demons,
To those who Surrender to Him, He Destroys the Inauspicious tendencies Quickly; I Salute Sri Vinayaka and surrender to Him.



नतेतरातिभीकरं नवोदितार्कभास्वरं
नमत्सुरारिनिर्जरं नताधिकापदुद्धरम् ।
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् ॥ २॥

நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

Nate[a-I]tara-Ati-Bhiikaram Navo[a-U]dita-Arka-Bhaasvaram
Namat-Sura-Ari-Nir-Jaram Nata-Adhika-Apad-Uddharam |
Sure[a-Ii]shvaram Nidhi-[I]ishvaram Gaje[a-Ii]shvaram Ganne[a-Ii]shvaram
Mahe[a-Ii]shvaram Tama-Ashraye Paraatparam Nir-Antaram ||2||

தம்மை வணங்காதவருக்கு அடிக்கடி பயத்தைக் கொடுத்துத் தடுத்தாட்கொள்பவர்.
உதய கால சூரியனைப்போல் விளங்குபவர்
தம்மை வணங்கும் தேவர்களின் விரோதிகளான அசுரர்களை அழிப்பவர்.
தம்மை வணங்குபர்களை ஆபத்துக்களைலிருந்து காப்பாற்றுவர்.
தேவர்களின் தலைவர், நவநிதிகளுக்கும் அதிபதி;
யானைகளுக்கு அதிபதி, கணங்களுக்கெல்லாம் நாதராக இருப்பவர்.
மஹா ஈஸ்வரனாக விளங்குபவரும் பரத்தும் பரமாக இருப்பவரும் ஆகியவர்.
அப்படிப்பட்ட கணபதியை வணங்குகிறேன்.

(Salutations to Sri Vinayaka)
To those who do not Bow down to God out of arrogance, He takes a Frightening form; His benign form is however like a Newly-Risen Sun,
Who is always Fresh without any Decay, and is Saluted Reverentially by the Devas and the Devoted Persons; Who Extricates those who Surrender to Him from Difficult Calamities,
Who is the God of the Devas, Who is the God of Prosperity, Who is the God with an Elephant Face and Who is the God of the Ganas (celestial attendants),
Who is the Great God; To His Refuge, Who is Superior than the Best, I Continually place myself in devotional surrender.



समस्तलोकशङ्करं निरस्तदैत्यकुञ्जरं
दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम् ।
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् ॥ ३॥

ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

Samasta-Loka-Shamkaram Nirasta-Daitya-Kun.jaram
Dare[a-I]taro[a-U]daram Varam Varebha-Vaktram-Akssaram |
Krpaa-Karam Kssamaa-Karam Mudaa-Karam Yashas-Karam
Manas-Karam Namas-Krtaam Namas-Karomi Bhaasvaram ||3||

அனைத்து உலகங்களுக்கெல்லாம் சுகத்தைக் கொடுக்கக்கூடியவர்
அசுர யானையாகிய கஜாசுரனை அழித்தவர்
அனைத்து உலகங்களையெல்லாம் தமது வயிற்றுக்குள் வைத்து, காப்பாற்றுபவர்.
உத்தமமானவர்; சிறந்த யானை முகத்தோன்; அழிவற்றவர்.
கிருபை செய்பவர், பிழைகளை மன்னிப்பவர்; பொறுப்பவர்;
கிருபை கொண்டு அவர்களின் மனத்தை நல்வழியில் திருப்பி அவர்களுக்கு மகிழ்ச்சியையும் கீர்த்தியையும் மேன்மையையும் உண்டாக்குபவர்.
அப்படிப்பட்ட விநாயகரை வணங்குகிறேன்.

(Salutations to Sri Vinayaka)
Who is the Auspicious Power behind All the Worlds and Who Removes the Mighty (inner) Demons,
Whose Huge Body signifies Prosperity and Boon-Giving and Whose Most Excellent Face reflects His Imperishable Nature.
Who Showers Grace, Who Showers Forgiveness, Who Showers Joy and who Showers Glory to His Devotees,
Who Bestows Intelligence and Wisdom to those Who Salute Him with Reverence; I Salute His Shining Form.



अकिञ्चनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनं
पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम् ।
प्रपञ्चनाशभीषणं धनञ्जयादिभूषणं
कपोलदानवारणं भजे पुराणवारणम् ॥ ४॥

அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்

Akincana-[A]arti-Maarjanam Cirantano[a-U]kti-Bhaajanam
Pura-Ari-Puurva-Nandanam Sura-Ari-Garva-Carvannam |
Prapan.ca-Naasha-Bhiissannam Dhananjaya-[A]adi-Bhuussannam
Kapola-Daana-Vaarannam Bhaje Puraanna-Vaarannam ||4||

தம்முடைய பக்தர்களின் ஏழ்மையை நாசம் செய்பவர்,
அநாதியாக விளங்கும் வேதங்களின் மந்திரங்களால் பூஜிக்கப்படும் சிறப்புமிக்கவர்,
திரிபுரங்களை நாசம் செய்த சிவன்; அவருடைய மூத்த மகன்,
அசுரர்களின் கர்வத்தை அடக்குபவர்,
பிரபஞ்சத்தை அழிக்கக்கூடிய காலனுக்கு பயத்தைக் கொடுப்பவர்,
அர்ஜுனன் முதலானவர்களால் பூஜிக்கப்பட்டவர்,
கபோலத்தில் மத நீர் பெருகியோடப்பெற்றவர்,
புராதனமான முதல்வனாகிய யானை உருவனை வணங்குகிறேன்.

(Salutations to Sri Vinayaka)
Who Wipes out the Sufferings of the Destitutes who take His Refuge; Who is the Receptacle of the Words of Praises of the Ancients,
Who is the Former Son (the latter being Kartikeya) of the Enemy of Tripurasuras (i.e. Lord Shiva), and Who Chews down the Pride and Arrogance of the Enemies of the Devas,
Who wields Terrible Power to Destroy the delusion of the Five Elements constituting the World (from the mind of His Devotees); Who Himself is Adorned with the Powers (behind the Five Elements) like Fire etc,
From Whose Cheeks flow down the Juice of Grace; Salutations to Him Whose Praise similarly flows down like Juice from the Puranas.



नितान्तकान्तदन्तकान्तिमन्तकान्तकात्मजं
अचिन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम् ।
हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां
तमेकदन्तमेव तं विचिन्तयामि सन्ततम् ॥ ५

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

Nitaanta-Kaanta-Danta-Kaantim-Antaka-Antaka-[A]atmajam
Acintya-Ruupam-Anta-Hiinam-Antaraaya-Krntanam |
Hrd-Antare Nirantaram Vasantam-Eva Yoginaam
Tam-Eka-Dantam-Eva Tam Vicintayaami Santatam ||5||

அழகிய பல்வரிசையும் தந்தமும் தருகின்ற பிரகாசத்தையுடையவர்,
காலனுக்குக் காலனாகிய சிவன்; அவனுடைய மகன்,
மனதால் சிந்திக்கமுடியாத அளவுக்கு அப்பாற்பட்ட உருவத்தை உடையவர்; நாசமற்றவராகிய அவர், வழிபடுவோரின் எல்லா விக்கினங்களையும் நாசம் செய்பவர்,
யோகியர்களின் இருதயதிற்குள் அந்தரங்கமாக நிரந்தரமாக வசிப்பவர்,
ஒரே தந்தத்தையுடையவராகிய கணேசரை மட்டுமே எப்போதும் சிந்திக்கிறேன்.

(Salutations to Sri Vinayaka)
Whose Beautiful Form of Ekadanta is very much Dear to His Devotees, and Who is the Son of the One (referring to Lord Shiva) Who Put an End to (i.e. restrained) Antaka (i.e. Yama).
Whose essential Form is Inconceivable and without any Limit, and which Cuts through the Obstacles of His Devotees,
Who Continually Abides in the Cave of the Heart of the Yogis.
I Continually Reflect upon Him, the Ekadanta (another name of Sri Vinayaka).



महागणेश्पञ्चरत्नमादरेण योऽन्वहं
प्रगायति प्रभातके हृदि स्मरन् गणेश्वरम् ।
अरोगतामदोषतां सुसाहितीं सुपुत्रतां
समाहितायुरष्टभूतिमभ्युपैति सोऽचिरात् ॥ ६॥

மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்

Mahaa-Gannesha-Pan.ca-Ratnam-Aadarenna Yo[ah-A]nvaham
Prajalpati Prabhaatake Hrdi Smaran Ganne[a-Ii]shvaram |
Arogataam-Adossataam Su-Saahitiim Su-Putrataam
Samaahita-Ayur-Asstta-Bhuutim-Abhy-Upai[a-E]ti So[ah-A]ciraat ||6||

மஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த தோத்திர நூலை யார் தினந்தோறும் அதிகாலையில் விழித்தெழுந்தவுடன் மகாகணபதியை இருதயத்தில் நினைத்து இருத்திக்கொண்டு பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் விரைவிலேயே எல்லாப் பிணிகளிலிருந்தும் விடுபடுகிறார்கள். அவர்கள் நல்ல கவித்துவத்தையும் நன்மக்களையும் நீண்ட ஆயுளையும் அஷ்ட ஐஸ்வரியங்களையும் அடைகிறார்கள்.

(Salutations to Sri Vinayaka)
Those who Read the Great Ganesha Pancharatnam (five Jewels in praise of Sri Ganesha) with Devotion and Utter this in the Early Morning Contemplating on Sri Ganeshvara in their Hearts will get Free from Diseases and Vices, will get Good Spouses and Good Sons, and with it He will get Long Life and the Eight Powers soon.

*****

மிக்க நன்றி : வித்யாலங்கார Dr.S.ஜெயபாரதி

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

Thursday, November 12, 2015

நிர்வாணஷட்கம் .. निर्वाणषटकम्



Nirvana Shatakam by Sri Adi Shankaracharya

நிர்வாணஷட்கம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.
இது ஆத்மஷட்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது.

ஆதிசங்கரர் துறவறம் மேற்கொண்டு குருவை தேடிக் கொண்டிருந்த பொழுது, ஆச்சாரியார் கோவிந்த பகவத்பாதரை சந்தித்தார். கோவிந்த பகவத்பாதர் ஆதிசங்கரரிடம் யாரென வினவ, அதற்கு விடையாக ஆதிசங்கரர் இந்த ஆறு பாடல்களை பாடியதாக ஒரு கருத்து நிலவுகிறது.

இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம் ஆகியற்றை மறுத்து சிவனே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார்.
ஆறு பாடல்களையும் "சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்" என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.


மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்,
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந ச க்ராண நேத்ரே,
ந ச வ்யோம பூமிர், ந தேஜோ நவாயு:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

मनोबुद्ध्यहङ्कार चित्तानि नाहं
न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे ।
न च व्योम भूमिर्न तेजो न वायुः
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥१॥

mano buddhi ahankara chittani naaham
na cha shrotravjihve na cha ghraana netre
na cha vyoma bhumir na tejo na vaayuhu
chidananda rupah shivo’ham shivo’ham

மனமும் நானல்ல; புத்தியும் நானல்ல; நான் என்ற அகங்காரமும் நானல்ல,
அறிவும் சக்தியும் நானல்ல. உடலின் அங்கங்களும் நானல்ல;
ஆகாயம், பூமியும் நானல்ல; ஜோதியும் நானல்ல; காற்றும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான், நானே சிவன்.

Neither am I the Mind nor Intelligence or Ego,
Neither am I the organs of Hearing (Ears), nor that of Tasting (Tongue), Smelling (Nose) or Seeing (Eyes),
Neither am I the Sky, nor the Earth, Neither the Fire nor the Air,
I am the Ever Pure Blissful Consciousness; I am Shiva, I am Shiva,
The Ever Pure Blissful Consciousness.



ந ச ப்ராண சங்க்யோ, ந வை பஞ்சவாயு:
ந வாக் சப்த தாதுர், ந வா பஞ்சகோச:
ந வாக் பாணி பாதம், ந சோப ஸ்தபாயு:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

न च प्राणसंज्ञो न वै पञ्चवायुः
न वा सप्तधातुः न वा पञ्चकोशः ।
न वाक्पाणिपादं न चोपस्थपायु
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥२॥

na cha prana sangyo na vai pancha vayuhu
na va sapta dhatur na va pancha koshah
na vak pani-padam na chopastha payu
chidananda rupah shivo’ham shivo’ham

உச் சுவாச, நிச் சுவாச மூச்சினால் ஆனவன் அல்ல, நான்.
கப, பித்தம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனவனுமல்ல; பஞ்ச (ஐந்து) கோசத்தால் ஆனவனும் அல்ல.
வாக்க நான் அல்ல, கை கால்களும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.

Neither am I the Vital Breath, nor the Five Vital Air,
Neither am I the Seven Ingredients (of the Body), nor the Five Sheaths (of the Body),
Neither am I the organ of Speech, nor the organs for Holding ( Hand ), Movement ( Feet ) or Excretion,
I am the Ever Pure Blissful Consciousness; I am Shiva, I am Shiva,
The Ever Pure Blissful Consciousness.



ந மே த்வேஷ ராகௌ, ந மே லோப மோஹௌ,
மதோ நைவ, மே நைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந சார்த்தோ, ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

न मे द्वेषरागौ न मे लोभमोहौ
मदो नैव मे नैव मात्सर्यभावः ।
न धर्मो न चार्थो न कामो न मोक्षः
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥३॥

na me dvesha ragau na me lobha mohau
na me vai mado naiva matsarya bhavaha
na dharmo na chartho na kamo na mokshaha
chidananda rupah shivo’ham shivo’ham

துவேஷம் எனக்கில்லை; ராகமும் (அன்பும்) எனக்கு இல்லை. லோபமும் எனக்கில்லை; மோகமும் எனக்கில்லை.
மதமும் எனக்கில்லை, மாத்சர்யமும் (சினமும்) எனக்கில்லை, தர்மத்துக்கும் தொடிசு இல்லை, சம்பத்துக்கும் சம்பந்தமில்லை.
ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

Neither do I have Hatred, nor Attachment, Neither Greed nor Infatuation,
Neither do I have Pride, nor Feelings of Envy and Jealousy,
I am Not within the bounds of Dharma (Righteousness), Artha (Wealth), Kama (Desire) and Moksha (Liberation) (the four Purusarthas of life),
I am the Ever Pure Blissful Consciousness; I am Shiva, I am Shiva,
The Ever Pure Blissful Consciousness.



ந புண்யம் ந பாபம், ந சௌக்யம் ந துக்கம்!
ந மந்த்ரோ ந தீர்த்தம், ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந போக்தா,
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

न पुण्यं न पापं न सौख्यं न दुःखं
न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञाः ।
अहं भोजनं नैव भोज्यं न भोक्ता
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥४॥

na punyam na papam na saukhyam na duhkham
na mantro na tirtham na veda na yajnah
aham bhojanam naiva bhojyam na bhokta
chidananda rupah shivo’ham shivo’ham

புண்ணிய பாவமும் எனக்கேது? ஓதுவது, தீர்த்தாடனம் எனக்கேது? வேதம், வேள்வி எனக்கேது? சுகம் ஏது? துக்கம் ஏது?
ஹவிஸ் நானல்ல; அனுபவிக்கிறவனும் நானல்ல; அனுபவிக்கப்படுபவனும் நானல்ல!
ஆனந்தமயமான சிவனே நான்; நானே சிவன்.

Neither am I bound by Merits nor Sins, neither by Worldly Joys nor by Sorrows,
Neither am I bound by Sacred Hymns nor by Sacred Places, neither by Sacred Scriptures nor by Sacrifies,
I am Neither Enjoyment (Experience), nor an object to be Enjoyed (Experienced), nor the Enjoyer (Experiencer),
I am the Ever Pure Blissful Consciousness; I am Shiva, I am Shiva,
The Ever Pure Blissful Consciousness.



ந ம்ருத்யுர் ந சங்கா, ந மே ஜாதி பேத:
பிதா நைவ, மே நைவ மாதா, ந ஜன்மா
ந பந்துர் ந மித்ரம், குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

न मृत्युर्न शङ्का न मे जातिभेदः
पिता नैव मे नैव माता न जन्मः ।
न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यं
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥५॥

na me mrtyu shanka na mejati bhedaha
pita naiva me naiva mataa na janmaha
na bandhur na mitram gurur naiva shishyaha
chidananda rupah shivo’ham shivo’ham

மிருத்யுவிடம் (மரணத்திடம்) எனக்குப் பயமில்லை. ஜாதி வித்தியாசம் எனக்கில்லை.
தகப்பனும் இல்லை; தாயும் இல்லை; பிறவியும் எனக்கில்லை;
பந்துவும் இல்லை; சினேகிதனும் எனக்கில்லை. ஆசானும் இல்லை; சிஷ்யனும் எனக்கில்லை.
ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

Neither am I bound by Death and its Fear, nor by the rules of Caste and its Distinctions,
Neither do I have Father and Mother, nor do I have Birth,
Neither do I have Relations nor Friends, neither Spiritual Teacher nor Disciple,
I am the Ever Pure Blissful Consciousness; I am Shiva, I am Shiva,
The Ever Pure Blissful Consciousness.



அஹம் நிர்விகல்போ, நிராகார ரூபோ,
விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்
நச சங்கடம் நைவ, முக்திர் ந மேயா
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

अहं निर्विकल्पो निराकाररूपो
विभुत्वाच्च सर्वत्र सर्वेन्द्रियाणाम् ।
न चासङ्गतं नैव मुक्तिर्न मेयः
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥६॥

aham nirvikalpo nirakara rupo
vibhut vatcha sarvatra sarvendriyanam
na cha sangatham naiva muktir na meyaha
chidananda rupah shivo’ham shivo’ham

சஞ்சலம் இல்லாதவன்; உருவங்களால் கட்டுப்படாதவன்;
இந்திரியங்கள் அனைத்தையும் ஜயித்தவன்;
பற்றை அறவே துறந்தவன்; எனக்கு முக்தியே.
பந்தமோ விஷயமோ இல்லை.
ஆனந்தமய சிவனே நான் - நானே சிவன்.

I am Without any Variation, and Without any Form,
I am Present Everywhere as the underlying Substratum of everything, and behind all Sense Organs,
Neither do I get Attached to anything, nor get Freed from anything,
I am the Ever Pure Blissful Consciousness; I am Shiva, I am Shiva,
The Ever Pure Blissful Consciousness.


சொல்லும் அதன் பொருளும் போல் இணைபிரியாத ஜகத்துக்கே தாய் தந்தையராக விளங்கும் பார்வதி பரமேசுவரரை நான் வணங்குகிறேன். சொல்லும் அதன் பொருளும் நான் நன்றாக அறிவதற்கு அருள வேண்டும்.


This is one of the rare stotras written by Adi Sankara Bhagawat Pada identifying himself the Lord Shiva and clearly explaining his theory of non-dualism. It is mellifluous and has remarkable tempo. There is a story that one of his disciples started saying Shivoham like the Acharya without understanding its significance. The Acharya visited the black smith’s house and happily drank one tumbler of molten iron and ordered the disciple to do so. Naturally he was not able to it. The Acharya told him that as for himself the molten iron or ice cold water are not different because he has realized that he is no different from Lord Shiva, and till the disciple attains that state, there is no point in his repeating Shivoham i.e “I am Shiva”

*****

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.
படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.



Wednesday, November 11, 2015

தக்ஷின காளி दक्षिणकाली



ॐ श्री महाकाली माहालक्ष्मी महासरस्वती देवताभ्यो नमः
ஓம் ஸ்ரீ மஹாகாளி மஹாலக்ஷ்மி மஹா கன்யா ஸரஸ்வதீ தேவ்யை நமோ நமஹ:


சகல சித்திகளையும் அருளும் தக்ஷின காளி दक्षिणकाली மந்திரம் ...

ॐ क्रीं क्रीं क्रीं हूं हूं ह्रीं ह्रीं दक्षिणेकालिके क्रीं क्रीं क्रीं हूं हूं ह्रीं ह्रीं स्वाहा॥
om krīṁ krīṁ krīṁ hūṁ hūṁ hrīṁ hrīṁ dakṣiṇekālike
krīṁ krīṁ krīṁ hūṁ hūṁ hrīṁ hrīṁ svāhā ||
ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம், ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரூம்
தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம், ஹ்ரூம் ஹ்ரூம் ஸ்வாஹா||

இந்தக் கலியுகத்தில் காளி மந்திரத்தை இடைவிடாமல் இடையூறின்றி மனம் ஒத்து ஜபித்தால் உடன் பலிதமாகும். காளி எப்போதும் எதிர்நோக்கியுள்ளாள், உபாசகனின்/தூய பக்தனின் கூக்குரலுக்கு.
மிகவும் சக்தி மிக்க மந்திரம் இந்த காளி மந்திரம் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதை உபாஸிக்க, இந்த மந்திரம் 72 தலைமுறை புண்ணியம் செய்தவனுக்கு மட்டுமே கிடைக்கும். இதை தினமும் 108 முறை ஜபம் செய்தால் சாதகனுக்கு உலகில் கிடைக்காத செல்வங்களே இல்லை என்று கூறுகிறது காளிகா புராணம்.

செந்நிற ஆடை அணிந்து செந்நிறப்பூக்களால் அர்ச்சித்து, சிவப்பு நிற புஷ்ப மாலை அணிவித்து, சிவப்பு நிற மாலை அணிந்து, சிவப்பு நிற மணி மாலையால் (108) ஜபம் செய்தால், பக்தனுக்கு எல்லா செல்வங்களையும் காளித்தாய் வழங்குவாள் என்று காளி புராணம் தெரிவிக்கிறது.

நல்ல காரியங்களுக்கு மட்டுமே அன்னை காளி செவி சாய்ப்பாள். எனவே தூய மனதுடன், பக்தியுடன் நல்லவை நடக்க மட்டுமே இந்த மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

நிவேதனமாக பால் பாயசமும், தூய பசு நெய்யும் அன்னைக்கு படைக்க வேண்டும். காளிக்கு உகந்த நேரம் இரவு. இதை உபாசனை செய்தால் எதிரி அழிவான். வாக்கு பலிதம் உண்டாகும். புலமையும் செல்வமும் பெற்று பெரும் புகழ் அடைவான் அன்னையை உபாசிக்கும் பக்தன்.

*****

" ஓம் பகவதி, என் தேகத்தில் அடி முதல் முடிவரை திருகாளி, உத்திரகாளி, மோடிக்காளி, ரீங்காளி, பிரகாசகாளி, வஜீரக்காளி, ஆகாசகாளி, பூமிக்காளி, ஹரிகாளி, சிவகாளி
ஓம் ஸ்ரீம் ரீம் காத்து ரட்சிக்க சுவாகா "

" ஓம் சக்தி, உலக சக்தி, ஆதி சக்தி, ஆதார சக்தி, சிவ சக்தி, சித்த சக்தி, வாக்கு சக்தி, வசிய சக்தி,
எண்ணிய எண்ணம் எண்ணியபடியே, என்னைக்கண்டோர் என்வசம் ஆகவும்,
என்னை நினைத்தோர் என் வசம் ஆகவும், என்சொல் கேட்டு இசைந்தே நடக்க,
நானே நீயாய், நீயே நானாய் செய் "

சத்ருபய சங்கட சர்ப்பதோஷ நாஸினீ. ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா
சித்த சுத்தி நல்கிடும் துரிதவர தாயினீ. ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா
சுத்த ஏழுகோடி தன்னில் ஸ்ரேஷ்ட மந்த்ர ரூபிணி. ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா
உத்தம இகபரச் சுகங்கள் யாவும் நல்குவாய். ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா.

அந்தரி சுந்தரி அதிபயங்கரி சக்தி, மந்தாகினி வாலைக்குமரி மஹாசக்தி
நிரந்தரி நீலி கால பைரவி, திரிசூலி தேவி மஹிஷாசுர மர்த்தினி
சரணம் சரணம் சரணம் தேவி, எனைக் காத்தருள்வாய மஹாசக்தி.


கிழக்கில் மேற்கில் வாராஹியும்,
தெற்கில் சண்டிகையும், வடக்கில் வைஷ்ணவியும்,
அக்னி திக்கில் அம்பிகையும், வாயு திக்கில் மஹேஸ்வரியும்,
நிர்ருதி திக்கில் சவத்தை வாஹனமாகக் கொண்டவளும்,
ஈசான திக்கில் ஸிம்ஹத்தை வாஹனமாகக் கொண்ட தேவியும்,
மேலே சாரதையும், கீழே பார்வதியும்,
சிரஸ்ஸை சாகம்பரியும், முகத்தை பைரவியும்,
கழுத்தை சாமுண்டையும், ஹ்ருதயத்தை சிவையும்.
புஜங்களை ஈசானியும், மார்பையும் நாபியையும் காலிகையும்,
வயிற்றை அபர்ணையும், இடுப்பையும் மூத்திர பையையும் சிவப்ரியையும்,
துடைகளை கௌமாரியும், முழங்கால் இரண்டையும் ஜயையும்,
கணுக்கால்களையும் கால்களையும் ப்ரஹ்மாணியான பரமேச்வரியும்,
எல்லா அங்கங்களையும் கடும் பீடைகளை நாசம் செய்பவளான துர்க்கையும்,
அடியேனையும், அடியேனின் குடும்ப உறுப்பினர்கள் அனனவரையும், அடியேனின் நண்பர்களையும், எப்பொழுதும் காக்க வேண்டும்.
... என்றும் அடியார்க்கும் அடியேன் ஸ்ரீநிவாசன்


॥ नवनागनामस्तोत्रम् ॥

श्रीगणेशाय नमः ।
अनन्तं वासुकिं शेषं पद्मनाभं च कम्बलम् ।. शङ्खपालं धृतराष्ट्रं तक्षकं कालियं तथा ॥ एतानि नवनामानि नागानां च महात्मनाम् ।
सायङ्काले पठेन्नित्यं प्रातःकाले विशेषतः ॥ तस्य विषभयं नास्ति सर्वत्र विजयी भवेत् ॥
॥ इति श्रीनवनागनामस्तोत्रम् सम्पूर्णम् ॥

*****

தோத்திரப்பாக்கள் அர்த்தம் அறிந்து ஜெபிக்கப்பட வேண்டியவை, ‘தத் ஜெப; ததார்த்த பாவனம்” அர்த்தம் அறிந்து தியானிக்கப்பட வேண்டியவை.
வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்

न मन्त्रं नो यन्त्रं तदपि च न जाने स्तुतिमहो
न चाह्वानं ध्यानं तदपि च न जाने स्तुतिकथाः ।
न जाने मुद्रास्ते तदपि न जाने विलपनं
परं जाने मातस्त्वदनुसरणं क्लेशहरणम् ॥

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ;
ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்;
பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்”

மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.

ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ, வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும்.

*****

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.


Tuesday, November 10, 2015

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் .. कनकधारा स्तॊत्रम्



ஆதிசங்கரர் எழுதிய ஸ்ரீகனகதாரா ஸ்தோத்ரம், மிக பிரசித்திபெற்ற சக்திவாய்ந்த ஸ்தோத்ரங்களுள் ஒன்று. எந்த அளவுக்கு இறைநிலையில் ஒன்று கலந்து, ஒரு மெல்லிய அலைநீளம் பிடித்து, தாயவள் அருள் அலைகளை தொடும் வண்ணம், இதனை அழகான வார்த்தைகளால் கோர்வையாக்கி, ஒரு தெய்வீக அருள் மனம் கமழும் அழகிய மாலையாக, ஸ்தோத்ரமமாக உருவாக்கியுள்ளார்.

मांगल्यदास्तु मम मंगलदॆवतायाः ... மாங்கல்யதாஸ்து மம மங்கள தேவதயா:
திருமகள் பார்வை படுமிடமெல்லாம் கோடி கோடி புண்ணியம்.
நினைத்து பார்க்க இயலாத, அளவிடமுடியாத செல்வ வளம் பெருகும்.

दुष्कर्मघर्ममपनीय चिराय दूरं ... துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
சூரிய ஒளி பட்டால் பணிவிலகுவது போல, தாயவள் அருள் பார்வை பட, நம்மை பிடிந்திருந்த கர்மம் ஓடிவிடும். வறுமை விலகிவிடும். நல்ல செழுமை நோக்கிய அலைகளை உருவாக்கும்.
எந்த ஒரு வறுமைக்கும் அவர்தம் கர்மவினைதானே காரணம்? அவைகளை விரட்டியடிக்கும் தாயவள் திருஅருள் பார்வை. எங்கு தாயவள் அருள் இருக்கிறதோ, அங்கே சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும். மான் விழி போல மருண்ட பார்வையில், அர்த்தங்களை புரிய முற்படும் போதே ஒரு வித அலை சூழ்வது போன்ற ஒரு பிரம்மை. அது ஒரு ஜீவ அலை, செல்வ வளம் தரும் அலை. சகல ஐஸ்வர்யங்களையும் பெற வைக்கும் அலை.
மீண்டும் மீண்டும் இடைவிடாது இந்த அலைகளை உணர முயற்சி செய்வது என்றும் நம்மை செல்வவளத்தில் வைத்திருக்கும் என்பதும் உண்மை.

இதனை எவ்வாறு உச்சரிப்பது, இதன் சரியான பொருள், விளக்கம் எல்லாம் அறிந்துகொண்டு, ஓரிரு முறை முயன்று உச்சரித்து, முடிந்த வரை தினந்தோறும் சொல்ல முயற்சி செய்யுங்கள். இதிலே செல்வவளமை அளிக்கும் ஒருவித சூட்சும அலை பொதிந்துள்ளது. அன்பால் உருகி தாயவள் ஸ்ரீமகாலட்சுமியின் அருள்பார்வை பெற்றிடுங்கள்.


இறைஅலைகளோடு இல்லாத நாட்கள் எல்லாம், பிச்சை எடுப்பதற்கு சமம். ஊற்றை சடலத்தை வைத்துகொண்டு, ஒன்றுக்கும் ஆகாமல் கடைசியில் சாம்பலாகும் சரீரம் வளர்க்க, இருக்கும் பொன்னான காலத்தை நன்மை தாராமல் பயன்படுத்தல் எவ்வாறு நியாயமாகும்?

எப்பொழுதும் ஆற்றலுடைய சக்தியுடன் இருக்க நிறைய வழிகள் இருக்கின்றன. ஒரு சில ஸ்லோகங்கள், அங்கே மிக அதீத சக்தி அதிர்வு அலைகள் பொதிந்து கிடக்கிறது. இவை சரியான முறையில் பயன்படுத்த, நம்மை சுற்றி, நம் செய்யும் செயல்கள் யாவற்றிலும், நல்ல ஆற்றலுடைய எல்லை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது. எந்த வார்த்தை எந்த அதிர்வு அலையை மனதில் எழுப்பி, எவ்வாறு ஆத்மாவின் ஜீவ அலையை தெளிவான, தூய்மைமிக்க, கலப்பற்ற அலையாக செய்து, ஆக்கசக்தியாக, வளம் தரும் சக்தியாக மாற்றும் தன்மை உண்டு என்பதை நன்கு பிரித்து உணர தெரிந்தவன் ஞானி.

ஒரு செயலை வெற்றியோடு முடிக்க அதன் தொடக்கத்திற்கும் முடிவுக்கும் இடையே எத்தனை தடைகள் உள்ளதோ, அதனை ஒவ்வொன்றாக சரி செய்து போராடி இறுதியில் வெற்றியினை அடைவது என்பது ஒரு சாதாரண அணுகுமுறை. ஆனால் இங்கே இந்த ஜீவ இறை அலைகள் தொடர்போடு எந்த ஒரு செயலையும் எதிர்கொள்ள, அஞ்ஞானம் ( பொருள், செயல் தன்மை பற்றிய அறியாமை ) அகன்று, உண்மை நிலை தானாக அறியப்பட்டு, இனி வரப்போகும் நிகழ்வு செயல் பற்றிய விழிப்பு நிலையினை முன்கூட்டியே கணிக்கும் அறிவு பெறப்பட்டு, வெற்றியை அடைவது என்பது சக்தி வாய்ந்த அணுகும் முறை.

முயன்று பார்ப்பதில் என்ன தவறு? இழப்பு ஒன்றுமில்லையே.

Sri Adi Sankaracharya sung this "Kanakadhara Stotra" for welfare of everyone who is suffering their past karma and suffering in poverty.


ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் ... कनकधारा स्तॊत्रम् (श्रीशंकराचार्यविरचितम्)


अङ्गं हरॆः पुलकभूषणमाश्रयन्ती भृङ्गाङ्गनॆव मुकुलाभरणं तमालम् ।
अंगीकृताखिलविभूतिरपांगलीला मांगल्यदास्तु मम मंगलदॆवतायाः ॥

அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:

Angam hare pulaka bhooshanamasrayanthi,
Bhringanga neva mukulabharanam thamalam,
Angikrithakhila vibhuthirapanga leela,
Mangalyadasthu mama mangala devathaya.

To the Hari who wears supreme happiness as Ornament,
The Goddess Lakshmi is attracted, Like the black bees getting attracted,
To the unopened buds of black Tamala tree,
Let her who is the Goddess of all good things,
Grant me a glance that will bring prosperity.

மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் தமால மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.


मुग्धा मुहुर्विदधती वदनॆ मुरारॆः प्रॆमत्रपाप्रणिहितानि गतागतानि ।.
माला दृशॊर्मधुकरीव महॊत्पलॆ या सा मे श्रियं दिशतु सागरसंभवायाः ॥ २ ॥

முக்தாமுஹுர்விதததி வதநே முராரே: பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:

Mugdha muhurvidhadhadathi vadhane Murare,
Premathrapapranihithani gathagathani,
Mala dhrishotmadhukareeva maheth pale ya,
Sa ne sriyam dhisathu sagarasambhavaya.

Again and again return those glances, Filled with hesitation and love,
Of her who is born to the ocean of milk, To the face of Murari,
Like the honey bees to the pretty blue lotus,
And let those glances shower me with wealth.

ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும் பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.


आमीलिताक्षमधिगम्य मुदा मुकुन्दं आनन्दकन्दमनिमॆषमनंगतन्त्रम् ।
आकॆकरस्थितकनीनिकपक्ष्मनॆत्रं भूत्यै भवॆन्मम भुजंगशयांगनायाः ॥ ३ ॥

ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம் ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம் பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:

Ameelithaksha madhigamya mudha Mukundam
Anandakandamanimeshamananga thanthram,
Akekara stiththa kaninika pashma nethram,
Bhoothyai bhavenmama bhjangasayananganaya.

With half closed eyes stares she on Mukunda,
Filled with happiness , shyness and the science of love,
On the ecstasy filled face with closed eyes of her Lord,
And let her, who is the wife of Him who sleeps on the snake, Shower me with wealth.

ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போதும் யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லா செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணை புரியட்டும்.


बाह्वन्तरॆ मधुजितः श्रितकौस्तुभॆ या हारावलीव हरिनीलमयी विभाति ।
कामप्रदा भगवतॊऽपि कटाक्षमाला कल्याणमावहतु मॆ कमलालयायाः ॥ ४ ॥

பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா கல்யாணமாவஹது மே கமலாலயாயா:

Bahwanthare madhujitha srithakausthube ya, Haravaleeva nari neela mayi vibhathi,
Kamapradha bhagavatho api kadaksha mala, Kalyanamavahathu me kamalalayaya

He who has won over Madhu, Wears the Kousthuba as ornament,
And also the garland of glances, of blue Indraneela,
Filled with love to protect and grant wishes to Him,
Of her who lives on the lotus, And let those also fall on me,
And grant me all that is good.

மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததின் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.


कालाम्बुदालिललितॊरसि कैटभारॆः धाराधरे स्फुरति या तटिदङ्गनॆव ।
मातुस्समस्तजगतां महनीयमूर्तिः भद्राणि मॆ दिशतु भार्गवनन्दनायाः ॥ ५ ॥

காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே: தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி: பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:

Kalambudhaalithorasi kaida bhare,
Dharaadhare sphurathi yaa thadinganeva,
Mathu samastha jagatham mahaneeya murthy,
Badrani me dhisathu bhargava nandanaya

Like the streak of lightning in black dark cloud,
She is shining on the dark, broad chest, Of He who killed Kaidaba,
And let the eyes of the great mother of all universe,
Who is the daughter of Sage Bharghava, Fall on me lightly and bring me prosperity.

மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில் இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.


प्राप्तं पदं प्रथमतः खलु यत्प्रभावात् माङ्गल्यभाजि मधुमाथिनि मन्मथॆन ।
मयापतॆत्तदिह मन्थरमीक्षणार्धं मन्दालसं च मकरालयकन्यकायाः ॥ ६ ॥

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத். மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம் மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:

Praptham padam pradhamatha khalu yat prabhavath,
Mangalyabhaji madhu madhini manamathena,
Mayyapadetha mathara meekshanardham,
Manthalasam cha makaralaya kanyakaya.

The God of love could only reach, The killer of Madhu,
Through the power of her kind glances, Loaded with love and blessing
And let that side glance, Which is auspicious and indolent, Fall on me.

ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.


विश्वामरॆन्द्रपदविभ्रमदानदक्षं आनन्दहॆतुरधिकं मुरविद्विषॊऽपि ।
ईषन्निषीदतु मयि क्षणमीक्षणार्धं इन्दीवरॊदरसहॊदरमिन्दिरायाः ॥ ७ ॥

விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம். ஆநந்தஹேதுரதிகம் முரவித்விஷோ(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:

Viswamarendra padhavee bramadhana dhaksham,
Ananda hethu radhikam madhu vishwoapi,
Eshanna sheedhathu mayi kshanameekshanartham,
Indhivarodhara sahodharamidhiraya

Capable of making one as king of Devas in this world,
Her side long glance of a moment, Made Indra regain his kingdom,
And is making Him who killed Madhu supremely happy.
And let her with her blue lotus eyes glance me a little.

அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.


इष्टा विशिष्टमतयॊऽपि यया दयार्द्र- दृष्ट्या त्रिविष्टपपदं सुलभं लभन्तॆ ।
दृष्टिः प्रहृष्टकमलॊदरदीप्तिरिष्टां पुष्टिं कृषीष्ट मम पुष्करविष्टरायाः ॥ ८ ॥

இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த. ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம் புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:

Ishta visishtamathayopi yaya dhayardhra,
Dhrishtya thravishta papadam sulabham labhanthe,
Hrishtim prahrushta kamlodhara deepthirishtam,
Pushtim krishishta mama pushkravishtaraya.

To her devotees and those who are great,
Grants she a place in heaven which is difficult to attain,
Just by a glance of her compassion filled eyes,
Let her sparkling eyes which are like the fully opened lotus,
Fall on me and grant me all my desires.

எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை, அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.


दद्याद्दयानुपवनॊ द्रविणाम्बुधारां अस्मिन्नकिञ्चनविहंगशिशौ विषण्णॆ ।
दुष्कर्मघर्ममपनीय चिराय दूरं नारायणप्रणयिनीनयनाम्बुवाहः ॥ ९ ॥

தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம் நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:

Dhadyaddhayanupavanopi dravinambhudaraam,
Asminna kinchina vihanga sisou vishanne,
Dhushkaramagarmmapaneeya chiraya dhooram,
Narayana pranayinee nayanambhuvaha.

Please send your mercy which is like wind,
And shower the rain of wealth on this parched land,,
And quench the thirst of this little chataka bird,
And likewise drive away afar my load of sins,
Oh, darling of Narayana, By the glance from your cloud like dark eyes.

எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.


गीर्दॆवतॆति गरुडध्वजसुन्दरीति शाकंभरीति शशिशॆखरवल्लभॆति ।
सृष्टिस्थितिप्रलयकॆलिषु संस्थितायै तस्यै नमस्त्रिभुवनैकगुरॊस्तरुण्यै ॥ १० ॥

கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி. ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை

Gheerdhevathethi garuda dwaja sundarithi,
Sakambhareethi sasi shekara vallebhethi,
Srishti sthithi pralaya kelishu samsthitha ya,
Thasyai namas thribhvanai ka guros tharunyai.

She is the goddess of Knowledge, She is the darling of Him who has Garuda as flag,
She is the power that causes of death at time of deluge,
And she is the wife of Him who has the crescent,
And she does the creation , upkeep and destruction at various times,
And my salutations to this lady who is worshipped by all the three worlds.

திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.


श्रुत्यै नमॊऽस्तु शुभकर्मफलप्रसूत्यै रत्यै नमॊऽस्तु रमणीयगुणार्णवायै ।
शक्त्यै नमॊऽस्तु शतपत्रनिकॆतनायै पुष्ट्यै नमॊऽस्तु पुरुषॊत्तमवल्लभायै ॥ ११ ॥

ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை

Sruthyai namosthu shubha karma phala prasoothyai,
Rathyai namosthu ramaneeya gunarnavayai,
Shakthyai namosthu satha pathra nikethanayai,
Pushtayi namosthu purushotthama vallabhayai.

Salutations to you as Vedas which give rise to good actions,
Salutation to you as Rathi for giving the most beautiful qualities,
Salutation to you as Shakthi ,who lives in the hundred petalled lotus,
And salutations to you who is Goddess of plenty,
And is the consort of Purushottama.

நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.


नमॊऽस्तु नालीकनिभाननायै नमॊऽस्तु दुग्धॊदधिजन्मभूम्यै । नमॊऽस्तु सॊमामृतसॊदरायै नमॊऽस्तु नारायणवल्लभायै ॥ १२ ॥
नमॊऽस्तु हॆमाम्बुजपीठिकायै नमॊऽस्तु भूमण्डलनायिकायै । नमॊऽस्तु दॆवादिदयापरायै नमॊऽस्तु शाङ्र्गायुधवल्लभायै ॥ १३ ॥
नमॊऽस्तु दॆव्यै भृगुनन्दनायै नमॊऽस्तु विष्णॊरुरसि स्थितायै । नमॊऽस्तु लक्ष्म्यै कमलालयायै नमॊऽस्तु दामॊदरवल्लभायै ॥ १४ ॥
नमॊऽस्तु कान्त्यै कमलॆक्षणायै नमॊऽस्तु भूत्यै भुवनप्रसूत्यै । नमॊऽस्तु दॆवादिभिरर्चितायै नमॊऽस्तु नन्दात्मजवल्लभायै ॥ १५ ॥

நமோஸ்து நாளீகநிபாநநாயை நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை நமோஸ்து நாராயண வல்லபாயை
நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை
நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை நமோஸ்து தாமோதரவல்லபாயை
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை

Namosthu naleekha nibhananai, Namosthu dhugdhogdhadhi janma bhoomayai,
Namosthu somamrutha sodharayai, Namosthu narayana vallabhayai.
Namosthu hemambhuja peetikayai, Namosthu bhoo mandala nayikayai,
Namosthu devathi dhaya prayai, Namosthu Sarngayudha vallabhayai.
Namosthu devyai bhrugu nandanayai, Namosthu vishnorurasi sthithayai,
Namosthu lakshmyai kamalalayai, Namosthu dhamodhra vallabhayai.
Namosthu Kanthyai kamalekshanayai, Namosthu bhoothyai bhuvanaprasoothyai,
Namosthu devadhibhir archithayai, Namosthu nandhathmaja vallabhayai.


Salutations to her who is as pretty. As the lotus in full bloom,
Salutations to her who is born from ocean of milk,
Salutations to the sister of nectar and the moon,
Salutations to the consort of Narayana.
Salutations to her who has the golden lotus as seat,
Salutations to her who is the leader of the universe,
Salutations to her who showers mercy on devas,
Salutations to the consort of Him who has the bow called Saranga.
Salutations to her who is daughter of Bhrigu,
Salutations to her lives on the holy chest of Vishnu,
Salutations to Goddess Lakshmi who lives in a lotus,
Saluations to her who is the consort of Damodhara.
Salutations to her who is light living in Lotus flower,
Salutations to her who is the earth and also mother of earth,
Salutations to her who is worshipped by Devas,
Salutations to her who is the consort of the son of Nanda.

பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.
சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.
சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.


सम्पत्कराणि सकलॆन्द्रियनन्दनानि साम्राज्यदानविभवानि सरॊरुहाक्षि ।
त्वद्वन्दनानि दुरिताहरणॊद्यतानि मामॆव मातरनिशं कलयन्तु मान्यॆ ॥ १६ ॥

சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி. சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே

Sampath karaani sakalendriya nandanani, Samrajya dhana vibhavani saroruhakshi,
Twad vandanani dhuritha haranodhythani, Mamev matharanisam kalayanthu manye.

Giver of wealth, giver of pleasures to all senses, Giver of the right to rule kingdoms,
She who has lotus like eyes, She to whom Salutations remove all miseries fast,
And my mother to you are my salutations.

எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.


यत्कटाक्षसमुपासनाविधिः सॆवकस्यसकलार्थसंपदः ।
सन्तनॊतिवचनाङ्गमानसैः त्वां मुरारि हृदयॆश्वरीं भजॆ ॥ १७ ॥

யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி: ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை: த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே

Yath Kadaksha samupasana vidhi, Sevakasya sakalartha sapadha,
Santhanodhi vachananga manasai, Twaam murari hridayeswareem bhaje

He who worships your sidelong glances,
Is blessed by all known wealth and prosperity,
And so my salutations by word, thought and deed,
To the queen of the heart of my Lord Murari.

தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.


सरसिजनिलयॆ सरॊजहस्तॆ धवलतरांशुकगन्धमाल्यशॊभॆ ।
भगवति हरिवल्लभॆ मनॊज्ञॆ त्रिभुवनभूतिकरि प्रसीद मह्यम् ॥ १८ ॥

ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே. தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்

Sarasija nilaye saroja hasthe, Dhavalathamamsuka gandha maya shobhe,
Bhagavathi hari vallabhe manogne, Tribhuvana bhoothikari praseeda mahye

She who sits on the Lotus, She who has lotus in her hands,
She who is dressed in dazzling white, She who shines in garlands and sandal paste,
The Goddess who is the consort of Hari, She who gladdens the mind,
And she who confers prosperity on the three worlds,
Be pleased to show compassion to me.

சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.


दिग्घस्तिभिः कनककुम्भमुखावसृष्ट- स्वर्वाहिनीविमलचारुजलाप्लुताङ्गीम् ।
प्रातर्नमामि जगतां जननीमशॆष- लॊकाधिनाथगृहिणीममृताब्धिपुत्रीम् ॥ १९ ॥

திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்

Dhiggasthibhi kanaka kumbha mukha vasrushta,
Sarvahini vimala charu jalaapluthangim,
Prathar namami jagathaam janani masesha,
Lokadhinatha grahini mamrithabhi puthreem.

Those eight elephants from all the diverse directions,
Pour from out from golden vessels,
The water from the Ganga which flows in heaven,
For your holy purifying bath, And my salutations in the morn to you ,
Who is the mother of all worlds, Who is the house wife of the Lord of the worlds,
And who is the daughter of the ocean which gave nectar.

பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.


कमलॆ कमलाक्षवल्लभॆ त्वं करुणापूरतरङ्गितैरपाङ्गैः ।
अवलॊकय मामकिञ्चनानां प्रथमं पात्रमकृत्रिमं दयायाः ॥ २० ॥

கமலே கமலாக்ஷவல்லபே த்வம். கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம் ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:

Kamale Kamalaksha vallabhe twam, Karuna poora tharingithaira pangai,
Avalokaya mamakinchananam, Prathamam pathamakrithrimam dhyaya

She who is the Lotus, She who is the consort, Of the Lord with Lotus like eyes,
She who has glances filled with mercy, Please turn your glance on me,
Who is the poorest among the poor, And first make me the vessel ,
To receive your pity and compassion.

எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும் வழியைக் காட்டியருள வேண்டும்.


स्तुवन्ति यॆ स्तुतिभिरमीभिरन्वहं त्रयीमयीं त्रिभुवनमातरं रमाम् ।
गुणाधिका गुरुतरभाग्यभागिनः भवन्ति तॆ भुवि बुधभाविताशयाः ॥ २१ ॥

ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம். த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந: பவந்தி தே புவி புதபாவிதாஸயா:

Sthuvanthi ye sthuthibhirameeranwaham,
Thrayeemayim thribhuvanamatharam ramam,
Gunadhika guruthara bhagya bhagina,
Bhavanthi the bhuvi budha bhavithasayo.

He who recites these prayers daily, On her who is personification of Vedas,
On her who is the mother of the three worlds, On her who is Goddess Rema
Will be blessed without doubt, With all good graceful qualities,
With all the great fortunes that one can get,
And would live in the world, With great recognition from even the learned.

மூவுலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவமாகவும், கருணைவெள்ளம் கொண்டவளாகவும் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால்', நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம் பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.

*****

English Translation by Mr P R RamaChander

Courtesy:
http://prramamurthy1931.blogspot.in/2011/04/hymns-to-lakshmi-kanakadhara-stotram.html
http://senthilmanickam.blogspot.in/2014_11_01_archive.html


இதில் காணப்படுபவை யாவும் அருளாளர்களின் கூற்றுகளை படித்து உணர்ந்து, அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்தவை. அவை யாவும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து எழுதப்பட்டவை. அனனவருக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Saturday, November 7, 2015

சப்த கன்னியர் ... सप्तमातरः



ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி

ब्राह्मी माहेश्वरी कौमारी वैष्णवी वाराही तथेन्द्राणी चामुण्डा

Brahmi, Maheshwari, Kowmaari, Vaishnavi, Vaaraahi, Indraani, Chaamundi


சிவன் அந்தகாசுரனுடன் போரில் ஈடுபட்ட போது, அந்தகாசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து 'யோகேசுவரி' என்ற சக்தியைத் தோற்றுவித்தார்.

அவள் 'மாகேசுவரி' என்ற சக்தியை உருவாக்கினாள். அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் தனது அம்ச இந்திராணியையும் ; முருகன் தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி தனது அம்ச வராகியையும்; யமன் தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர்.

..... வராகபுராணம்


ब्राह्मी माहेश्वरी चैव कौमारी वैष्णवी तथा । वाराही च तथेन्द्राणी चामुण्डा सप्तमातरः ॥

Salutations to the Seven Mothers ...
Goddesses Brahmmi (SarasvatI, the wife of Lord Brahma), MaheshvarI (the wife of Lord Shiva), KaumarI, Vaishnavi (LakshmI, the wife of Lord Vishnu), Varahi, Indrani (wife of Lord Indra) and Chamundi.


அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி உண்டானவர்களே இந்த சப்த கன்னிகைகள். மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள்.


சப்த கன்னியர் சுலோகம் துதி:

பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ்மாணீம்
ஈஸ்வரீரர் பமாம் மகேசீம்
குமாரவத்ச கௌமாரீம்
விஷ்ணு அம்ச வைஷ்ணவீம்
வாம நீந்து ஹலாயுத வாராஹீம்
இந்திர ரூப மாதா ஐந்தரீம்
கபால சூல ஹஸ்தாம்ச சாமுண்டீம்
த்யாயேத் சப்தமாத நமஸ்துதே.


மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்
வேழம் என்ற கொடி ஏழுடைச்
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
துணைப் பதங்கள் தொழு வாம்.

- கலிங்கத்துப்பரணி


கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்.

- குமர குருபர சுவாமிகள்



பிராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி. கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவள். மான் தோல் அணிந்திருப்பவள். ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள்.

காயத்ரி மந்திரம் :

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே தேவர்ணாயை தீமஹி தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.

Brahmi : (Bija Mantra is "Aam")
She is the creative force of Lord with Shining golden body. She symbolizes creativeness in all forms of knowledge. She has four hands, holding Kundam, Akshaya Paathiram (Alms Vessel), Japa Maala (Rosary), and ladle (used for pouring oil into Yagna Gunda). Her vaahanaa (Vehicle) is Anna bird and Her flag carries that bird symbol. She displays Varadha and Abhaya Mudras.
Shri Brahmi is Kaama Naashinya, meaning She is the destroyer of kaama or desires and She bestows Her worshippers with innate ability to transcend worldly desires.


மகேஸ்வரி

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார் எனில் இவளைப் பற்றி வேறு ஏதும் சொல்லவும் வேண்டுமோ?
வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்துவருபவள். இவளை வழிபட்டால், நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும்.

தியான சுலோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம் வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.

Maheshwari: (Bija Mantra is "Iim")
She is the activating force of Lord Shiva with shining white color body. She has three eyes and four hands, holding Trishul (Trident) and Udukkai (Drum creating Brahma Thaala). Her vaahanaa is Bull and it is also symbolized in Her flag.
Shri Mahe'shwari is Krodha Naashinya, meaning She is the destroyer of krodha or anger and She bestows Her worshippers with ability to transcend anger.


கவுமாரி

அம்பிகையின் இன்னொரு அம்சம் கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும் உமையுமாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி. இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும்.

தியான சுலோகம்

அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!

மந்திரம்

ஓம் கெளம் கெளமார்யை நம: ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்:

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே சக்தி ஹஸ்தாயை தீமஹி தன்னோ: கவுமாரி ப்ரசோதயாத்.

Kowmaari: (Bija Mantra is "Hoom")
She is the activating force of Lord Muruga (Subramania or Kaarthikeya). She has 4 hands displaying Varadha Mudra and Abhaya Mudra, and holds Spear (Vel) as weapon. Her vaahana is peacock, which is also symbolized in Her flag.
Shri Kowmaari is Lobha Naashinya, meaning She is the destroyer of Lobha or greed and She bestows Her worshippers with ability to transcend greed.


வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. சகல சவுபாக்கியங்கள், செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.

தியான சுலோகம்

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

மந்திரம்

ஓம் வை வைஷ்ணவ்யை நம: ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்.

Vaishnavi: (Bija Mantra is "Room")
She is the activating force of Lord Vishnu with four hands displaying Varadha and Abhaya Mudras and holding Shanku Chakra (Conch Wheel). Her vaahana is Garuda – White necked Eagle, which is also symbolized in Her flag.
Shri Vaishnavi is Moha Naashinya, meaning She is the destroyer of Moha or Ignorance.


இந்திராணி

அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி. தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத்தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே.
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

தியான சுலோகம்

அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

மந்திரம்

ஓம் ஈம் இந்திராண்யை நம: ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்:

Indraani: (Bija Mantra is "Aim")
She is the activating force of Lord Indra. She displays Varadha and Abhaya Mudras and holds Vachchirapadai. Her vaahanaa is Elephant.
Shri Indraani is Maatsarya Naashinya, meaning She is the destroyer of Maatsarya or Jealousy.


வராஹி

அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும். அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும், தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள்.

தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம: ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்:

ஓம் உக்ர ரூபாயை வித்மஹே தம்ஷ்ட்ராகரான்யை தீமஹி தந்நோ வாராஹீ ப்ரசோதயாத்.

ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்:

Vaaraahi: (Bija Mantra is "Loom")

She is the activating force of Lord Yamaa (The Lord of death), who has four hands displaying Varadha and Abhaya Mudras and holding Dhanda, Sword, Gada, Shanku (Conch), Plough, Chakra (Wheel), Bhoomi (Earth), and Lotus flower. Her vaahana is Buffalo.
Shri Vaaraahi is Mada Naashinya, meaning She is the destroyer of Mada or Self-Pride.


சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
பதினாறுகைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே. சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே. இவளை வழிபட்டால், எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு, நமக்குத் தேவையான சகல பலங்கள் ,சொத்துக்கள், சுகங்களைத் தருவாள்.

தியான சுலோகம்

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேத
நிஷண்ணசுவா!

ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

மந்திரம்

ஓம் சாம் சாமுண்டாயை நம: ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்:

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே சூலஹஸ்தாயை தீமஹி தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்:

Chaamundi: (Bija Mantra is "Houm")
She has one of Her foot pressed on the demon (representing the demonic nature / characteristics of human) and displays Varadha and Abhaya Mudras. Clothed in the hide of a tiger, She has eight shoulders and carries Soolam (Trishul – Trident), Kadkam, Ambu (Arrow) and Chakra (Wheel) on one side and Paasam (Noose), Palakai (plate), Sarngam, and Shanku (Conch) on the other side.
Shri Chaamundi is Paapa Naashinya, meaning She is the destroyer of Paapa or Sins.

.....

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर ।. यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ॥

வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்

மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.

ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ, வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும்.

.....

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.